ரஜினி குறித்து பேசிய ரோஜா மன்னிப்பு கேட்க வேண்டும் என்று ரஜினி ரசிகர்கள் வலியுறுத்தி வருகின்றனர். ஆந்திராவின் முன்னாள் முதல்வர் என்.டி. ராமாராவின் நுாறாவது பிறந்த நாள் நிகழ்ச்சி கடந்த சில நாட்களுக்கு முன்னர் விஜயவாடாவில் நடைபெற்றது. தெலுங்குதேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு என்.டி.ஆர் மகன் நடிகர் பாலகிருஷ்ணா கலந்துகொண்டனர். மேலும் இந்த விழாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு இருந்தார்.
Strongly condemn the demeaning & derogatory comments made by YSRCP leaders against the legendary superstar @rajinikanth, who is an epitome of honesty, integrity, and humility. Rajinikanth has a heart of gold and is much loved by all in India and across the globe. The organised… pic.twitter.com/xnxLIuhltF
— N Chandrababu Naidu (@ncbn) May 1, 2023
இந்த விழாவில் பேசிய அவர் ‘ந்திரபாபு நாயுடு ஒரு தீர்க்கதரிசி, தொலைநோக்கு பார்வைகொண்ட அரசியல் தலைவர். அவரது தொலைநோக்கு பார்வையால், ஐதராபாத் இப்போது ஹைடெக் நகராக மாறியுள்ளது. ஐதராபாத், நியூயார்க் போன்று வளர்ந்துள்ளது’ என்று பேசி இருந்தார். ரஜினியின் இந்த பேச்சுக்கு ஆந்திராவில் உள்ள மற்ற கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அதிலும் குறிப்பாக ஜெகன் மோகன் கட்சியினர் ரஜினியை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
இப்படி ஒரு நிலையில் நடிகையும் ஆந்திர அமைச்சருமான ரோஜாவும் ரஜினியின் இந்த பேச்சை கடுமையாக விமர்சனம் செய்து இருக்கிறார். இதுகுறித்து பேசிய அவர் ‘ரஜினிகாந்த் பேச்சை கேட்டால் தனக்கு சிரிப்பு தான் வருகிறது. 003ஆம் ஆண்டுடன் ஒருங்கிணைந்த ஆந்திர மாநிலத்தில் சந்திரபாபு நாயுடுவின் ஆட்சிக்காலம் முடிந்துவிட்டது. 20 ஆண்டுகளாக ஹைதராபாத் நகரை ஆட்சி செய்யாத சந்திரபாபு நாயுடுவால் அந்த நகரம் எப்படி வளர்ச்சி பெற்றிருக்கும்.
ரஜினிகாந்து தெரிந்து தான் பேசினாரா இல்லை சந்திரபாபு நாயுடு எழுதிக் கொடுத்த ஸ்கிரிப்டை பார்த்து படித்தாரா என தெரியவில்லை என்றும் பேசி இருந்தார். ரோஜாவின் இந்த பேச்சை தொடர்ந்து ரஜினி ரசிகர்கள் பலரும் ysr கட்சியினரையும் ரோஜாவையும் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். இது தொடர்பாக தெலுங்கு தேச கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு தனது ட்விட்டர் பக்கத்தில்கண்டனம் தெரிவித்தார்.
அதில்’ என்.டி.ஆர் 100வது பிறந்தநாள் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ரஜினிகாந்த் அவருடைய கருத்துகள், அனுபவம் ஆகியவற்றை தெரிவித்து பேசினார். ஒய் எஸ் ஆர் காங்கிரஸ் கட்சியினர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மீது சகித்து கொள்ள இயலாத வகையிலான வார்த்தைகளை பயன்படுத்தி மட்டமாக விமர்சித்துள்ளனர்.ஒய் எஸ் ஆர் காங்கிரஸ் கட்சி இந்த விஷயத்தில் நடைபெற்ற தவறுக்கு மன்னிப்பு கேட்டு தவறை சரி செய்து கொள்ள வேண்டும் என்று அதில் குறிப்பிட்டு இருந்தார்.
ஆனாலும், ரஜினி குறித்து தொடர்ந்து விமர்சித்து பேசி வரும் ரோஜா, ரஜினி பவன் கல்யாண் என்று பலர் ஒன்று சேர்ந்து வந்தாலும் ஜெகன் மோகன் ரெட்டியை அழிக்க முடியாது என்றும் கூறி இருந்தார். இப்படி ஒரு நிலையில் ரஜினி ரசிகர் மன்றம் ரோஜாவை கண்டித்து வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கின்றனர். அதில் நேத்து சந்திரபாபுவுடன் இருந்தார் இன்று ஜெகன் மோகன் ரெட்டியுடன் இருக்கிறார் நாளைக்கு யார்கிட்ட வேனா போகலாம் என்று ரோஜாவை விமர்சித்து இருக்கின்றனர்.