பிக் பாஸுக்கு போறதுக்கு நான் அங்க போய்டுவேன் – நாறுநாறாக கிழித்த ரேகா நாயர்.

0
691
RekhaNair
- Advertisement -

பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் கலந்து கொள்வது குறித்து ரேகா நாயர் அளித்திருக்கும் பேட்டி தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் நிகழ்சிகளில் மிகவும் புகழ் பெற்ற நிகழ்ச்சிகளுள் ஒன்று தான் பிக் பாஸ் நிகழ்ச்சி. இது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றதால் தற்போது சீசன் 7 வரை வந்துள்ளது. இந்நிகழ்ச்சிக்கு மற்றொரு பலம் என்றால் உலக நாயகன் கமல்ஹாசன் தான். இவர் தான் இந்த நிகழ்ச்சிற்கு தொகுப்பாளராக இருந்து வருகிறார்.

-விளம்பரம்-

முதல் சீசனை தொடர்ந்து தற்போது ஆறு சீசன்கள் முடிவடைந்து இருக்கிறது. இந்த ஆறு சீசன்களையும் நடிகர் கமலஹாசன் தான் தொகுத்து வழங்கி இருக்கிறார். மேலும், இந்த நிகழ்ச்சி 100 நாட்கள் நடைபெறுகிறது. பிக் பாஸ் வீட்டுக்குள் புதுப்புது வித்தியாசமான டாஸ்க்களை கொடுத்து மக்கள் மத்தியில் ஆர்வத்தை தூண்டும் வகையில் இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பப்பட்டு வருகிறது. அது மட்டுமில்லாமல் பட்டத்தை வெல்லும் வெற்றியாளர்களுக்கு பரிசு தொகையாக 50 லட்சமும் கொடுக்கிறார்கள்.

- Advertisement -

பிக் பாஸ் நிகழ்ச்சி:

மேலும், இந்த பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு என்று ஒரு தனி ரசிகர் பட்டாளம் இருக்கிறது. பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி கடந்த ஆண்டு ஒளிபரப்பாகி இருந்தது. இந்த நிகழ்ச்சி கடந்த ஜனவரி மாதம் தான் முடிவடைந்தது. இந்த நிகழ்ச்சியில் அசிம் டைட்டில் வின்னரானார். விக்ரமன் இரண்டாம் இடத்தை பிடித்திருந்தார். தற்போது பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி ஒளிபரப்பாக இருக்கிறது. இதனால் பிக் பாஸ் ரசிகர்கள் மத்தியில் உற்சாகம் ஏற்பட்டிருக்கிறது. அதோடு இந்த முறை நிகழ்ச்சியில் யார்? கலந்து கொள்ள போகிறார்கள் என்பதை பார்க்க ரசிகர்கள் மத்தியில் அதிக ஆவல் ஏற்பட்டிருக்கிறது.

பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி:

அந்த வகையில் பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் கலக்கப்போவது யாரு காமெடி நடிகர் சரத், பாவனா, மாகாபா, உமாரியாஸ் ஆகியோர் ஆடிஷனில் கலந்து இருப்பதாக கூறப்படுகிறது. இவர்களில் விஜய் டிவி சார்பாக யார் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இருப்பார்கள் என்று தெரியவில்லை. இவர்களை அடுத்து நடிகை ரேகா நாயர், தினேஷ், ராபர்ட் மாஸ்டர், ஜாக்குலின், பெண் ட்ரைவர் ஷர்மிளா போன்ற பல பிரபலங்களின் பெயர்கள் அடி படுகிறது.

-விளம்பரம்-

பிக் பாஸ் ப்ரோமோ:

இது தவிர, சோஷியல் மீடியாவில் வைரலானவர்கள், ஒருகாலத்தில் பரபரப்பாக இருந்து இன்று ஒதுங்கியிருக்கும் சீனியர் நடிகைகள், மாடல்கள், வெளிநாடுவாழ் தமிழர்கள் என்று கலந்துகொள்ள இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இது ஒரு பக்கம் இருக்க, இந்த முறை நிகழ்ச்சியில் இரண்டு வீடு என்று உறுதி செய்து இருக்கிறார்கள். இதனால் ரசிகர்கள் அதிக எதிர்பார்ப்பில் இருக்கிறார்கள். மேலும், அக்டோபர் முதல் வாரத்தில் இருந்து இந்த நிகழ்ச்சி தொடங்க இருப்பதாக கூறப்படுகிறது.

ரேகா நாயர் பேட்டி:

இந்நிலையில் இது தொடர்பாக ரேகா நாயர் கூறியிருப்பது, நான் ஏன் பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைய வேண்டும்? அவர்கள் என்னை காட்டில் தங்க சொன்னாலும் நான் அங்கு சென்று எத்தனை நாட்கள் வேண்டுமானாலும் இருப்பேன். ஆனால். நான் பிக் பாஸ் வீட்டில் நுழைய மாட்டேன். நான் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இருக்கிறேன் என்று மூன்று சீசன்களாகவே சொல்லிக் கொண்டுதான் இருக்கிறார்கள். அதை எல்லாம் நான் கண்டுகொள்ளவில்லை. அந்த வீட்டிற்குள் 100 நாட்கள் தங்குவதற்கு பதிலாக 100 மரங்களை நடலாம் என்று பேசி இருக்கிறார். இதன் மூலம் ரேகா நாயர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதில்லை என்பது உறுதியாகி இருக்கிறது.

Advertisement