நடிகை சாய் பல்லவி பிரேமம் படத்தின் மூலம் அறிமுக மகியவர்.அந்த படத்திற்கு பின்னர் பல்வேறு மலையாள, தெலுங்கு படத்தில் நடித்து வருகிறார். தற்போது தெலுங்கு சினிமாவில் நடிக்கு சாய்பல்லவி கோடி கணக்கில் சம்பளம் வாங்குகிறார் என்ற தகவலும் சில நாட்களுக்கு முன்னர் வந்தது.பல சினிமா நடிகைகள் நடிப்பை தவிர ஏதாவது ஒரு தொழிலை கண்டிப்பக செய்து வருவார்கள். ஆனால் சாய் பல்லவி நடிப்பதற்காக தனக்கு பிடித்த மருத்துவ தொழிலையே விட்டுவிட்டாராம். இதுபற்றி சைபல்லவி தெரிவிக்கையில்.
நான் முதன் முதலில் ஜெயம் ரவி நடிப்பில் 2008-ல் தாம்தூம் என்ற படத்தில் கங்கனா ரணாவத் தோழியாக நடித்தேன். அதன் பின்னர் கஸ்துரிமான் என்ற படத்தில் மீரா ஜாஸ்மினுக்கு தொழியாகவும் நடித்துள்ளேன். அதன் பின்னர் எனது பெற்றோர்கள் சினிமா ஒரு நிரந்தர தொழில் இல்லை என்று என்னை மருத்துவம் படிக்க ஜார்ஜியாவிற்கு அனுப்பிவைத்தனர்.
மேலும் எனக்கு நடனத்தின் மீது ஆர்வம் இருந்ததால் ஒரு பக்கத்தில் நடனத்தையும் கற்று பல மேடை நிகழ்ச்சிகளில் நடனமாகிநடனமாடி வந்தேன்.நான் டாக்டர் படிப்பை படிக்கும் போது தான் எனக்கு பிரேமம் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது நான் அந்த படத்தில் படித்துக்கொண்டே நடித்தேன்.
பிரேமம் படம் வெற்றியடைந்த பின்னர் எனக்கு நிறைய பட வாய்ப்புகள் வர துவங்கியது இதனால் நான் எனது படிப்பை முடித்துவிட்டு மீண்டும் இந்தியாவிற்கு வந்துவிட்டேன்.அதன் பிறகு நடிப்பில் முழு கவனம் செலுத்தி வந்தேன் நடிப்பிற்கு பிறகு டாக்டர் தொழிலை சுத்தமாக விட்டுவிட்டேன் எனது பெயருக்கு பின்னால் கூட நான் டாக்டர் பட்டதை போட்டுக்கொள்ளவில்லை.காரணம் டாக்டர் தொழில் என்பது உயிர் சம்பந்தபட்ட விஷயம் இதனால் நடிப்பிலும் ,டாக்டர் தொழிலலிலும் ஒரே நேரத்தில் பயணம் செல்வதில் எனக்கு பிடிக்கவில்லை என்று கூறியுள்ளார்.
தனக்கு மிகவும் பிடித்த நடிகர் சூர்யா என்று குறிப்பிட்டிருந்த சாய் பல்லவி தற்போது சூர்யாவுடன் டி எஸ் கே படத்தில் நடித்து வருகிறார். மேலும்,நல்ல கதைகளை தாம் தேர்தெடுத்து நடித்து வருவதாக தெரிவித்திருக்கிறார் சாய் பல்லவி.