ICUவில் அனுமதிக்கப்பட்ட சமந்தா – என்ன காரணம்? சோகத்தில் ரசிகர்கள் கூறி வரும் ஆறுதல்.

0
464
- Advertisement -

அவசர சிகிச்சை பிரிவில் நடிகை சமந்தா அனுமதிக்கபட்டிருக்கும் புகைப்படம் தான் தற்போது சோசியல் மீடியாவில் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. தென்னிந்திய சினிமாவில் பல ஆண்டுகளுக்கும் மேலாக முன்னனி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வருகிறார் சமந்தா. இவரது நடிப்பில் வெளியான பல படங்கள் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்து இருக்கிறது. ஆனால், இவர் லீட் ரோலில் நடித்த படங்கள் அனைத்தும் எதிர்பார்த்த அளவில் வெற்றிபெறவில்லை.

-விளம்பரம்-

அதிலும் குறிப்பாக இறுதியாக இவர் லீட் ரோலில் நடித்த யசோதா மற்றும் சாகுந்தலம் ஆகிய இரண்டு படங்களும் மாபெரும் தோல்வியை தழுவியது. அதற்கு பின் கடைசியாக விஜய் தேவர்கொண்டாவுடன் குஷி என்ற படத்தில் சமந்தா நடித்து இருந்தார். காதல் ஆக்ஷன் பாணியில் உருவான இந்த திரைப்படம் ஓரளவிற்கு வரவேற்பை பெற்றது. அதோடு இது சமந்தாவிற்கு ஒரு கம்பேக் படமாக அமைந்து இருந்தது. இதற்கு பின் இவர் எந்த படத்திலும் நடிக்கவில்லை.

- Advertisement -

மயோசிடிஸ் நோய்:

காரணம், இவர் சிகிச்சை மற்றும் மன அமைதியை தேடி கொண்டு இருக்கிறார். கடந்த 2022 ஆம் ஆண்டில் இருந்தே சமந்தா அவர்கள் மயோசிடிஸ் என்ற நோயால் பாதிக்கப்பட்டு அவஸ்தை பட்டு இருந்த தகவல் அனைவரும் அறிந்ததே. இது ஒரு வகையான தசைய அலர்ஜி நோய் என்று கூறப்படுகிறது. இதற்காக இவர் தொடர் சிகிச்சை எடுத்து வருகிறார். ஆனால், அந்த நோயிலிருந்து சமந்தா பூரண குணமடையவில்லை. தற்போது அந்த நோயின் தாக்கம் அதிகமாகி இருப்பதால் தான் நடிக்க ஒப்புக்கொண்ட படங்களுக்கு வாங்கிய அட்வான்ஸ் தொகையை சமந்தா திருப்பிக் கொடுத்திருக்கிறார்.

சினிமாவில் இருந்து விலகிய சமந்தா:

அது மட்டும் இல்லாமல் ஒரு வருடத்திற்கும் மேலாக சினிமாவை விட்டு விலக சமந்தா முடிவு எடுத்து இருப்பதாக தகவல் வெளியாகி இருந்தது. மேலும், சமந்தா தீவிரமாக சிகிச்சை எடுத்து வருகிறார். அது மட்டும் இல்லாமல் சுவிட்சர்லாந்து, அமெரிக்கா போன்ற பல நாடுகளுக்கு மன நிம்மதிக்காக சுற்றுலா மேற்கொண்டு இருக்கிறார். சமீபத்தில் கூட அமெரிக்காவில் தன்னுடைய சிகிச்சையை தொடர்ந்து சமந்தா தற்போது தேறி இருப்பதாக சோசியல் மீடியாவில் அறிவித்திருந்தாகள்.

-விளம்பரம்-

மீண்டும் மருத்துவமனையில் சமந்தா:

சில மாதங்களுக்கு முன் கூட சமந்தா ஆயுர்வேத சிகிச்சை எடுத்துக் கொண்டிருந்தார். இன்னொரு பக்கம் சமந்தா இரண்டு குழந்தைகளை தத்து எடுக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருந்தது. நாக சைதன்யாவின் பிரிவிற்கு பிறகு இரண்டாம் திருமணம் செய்து கொள்ள விருப்பமில்லை என்று சமந்தா கூறியிருந்தார். மேலும், அடிக்கடி சமந்தா தன்னுடைய உடல்நிலை குறித்து சோசியல் மீடியாவில் பதிவிட்டு வருகிறார். இந்த நிலையில் தனக்கு இன்னொரு பாதிப்பு இருப்பதாக சமந்தா பதிவு போட்டிருக்கிறார்.

அவரச பிரிவில் சமந்தா:

அதில் அவர், பூக்கள் எவ்வளவு அழகானவை. அவற்றை பார்த்தால் மனதுக்குள் இனம் புரியாத சந்தோஷம் வரும். ஆனால், பூக்களால் எனக்கு அலர்ஜி ஏற்பட்டு அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்படுவது கொடுமையானது என்று பூக்களுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை சமந்தா பதிவிட்டு இருக்கிறார். இதை பார்த்த ரசிகர்கள் , உங்கள் உடல்நிலை இப்போது பரவாயில்லையா? என்னானது? நீங்கள் பூரணம் குணம் அடைந்து வர வேண்டும் என்றெல்லாம் ஆறுதலாக பதிவு போட்டு வருகிறார்கள்.

Advertisement