‘கல்யாண பரிசு நடிகையை தனிமையில் அழைத்துள்ள அர்னவ் ? ‘ – செல்லமா சீரியல் நடிகைக்கா சமாதானம் பேசும் ஆடியோ.

0
1913
arnav
- Advertisement -

கடந்த சில தினங்களாக சின்னத்திரை நடிகர்களான அர்னவ் மற்றும் திவ்யாவின் பிரச்சினை தான் சின்னத்திரை வட்டாரத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. செவ்வந்தி சீரியல் நடிகை திவ்யாவை செல்லமா சீரியல் நடிகர் அர்னவ் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் திருமணம் செய்து கொண்டார். மேலும், திவ்யா மூன்று மாதம் கர்ப்பமாக இருக்கிறார். இப்படி ஒரு நிலையில் செல்லம்மா சீரியல் நடிகை ஹன்சிதாவுடன் அர்னவ்விற்கு தொடர்பு இருப்பதாகவும் அதை தட்டி கேட்க போய் தன்னை தாக்கியதாகவும் இதனால் தனக்கு வயிற்றில் அடிபட்டு ரத்தம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் திவ்யா கூறியிருந்தார்.

-விளம்பரம்-
divya

திவ்யாவின் புகார் குறித்து பேசிய அர்னவ், அவர் பேசுவது முற்றிலும் பொய் நான் அவளை தாக்கவே இல்ல என்று கூறி இருந்தார். மேலும், தனக்கும் ஹன்ஷிதாவிற்கும் எந்த தொடர்பும் இல்லை என்றும் கூறி இருந்தார். இப்படி ஒரு நிலையில் தனக்கும் திவ்யாவிற்கும் பொதுவான நண்பருடன் போனில் உரையாடும் ஆடியோ ஒன்று வெளியாகி இருந்தது . அதில் திவ்யா சொன்னது போல திருமண புகைப்படங்கள் ad ஷூட்டிங்கிற்காக எடுத்து என்று திவ்யா கூற வேண்டும் என்றும் அதில் அவர் என்ன தலைப்பு போட வேண்டும் என்று பேசி இருந்தார்.

- Advertisement -

இப்படி ஒரு நிலையில் அர்னவ்வின் அடுத்த ஆடியோ ஒன்று வெளியாகி இருக்கிறது. அதில் கல்யாண பரிசு சீரியலில் தன்னுடன் நடித்த சக நடிகையான ரிஹானா என்பவரை அர்னவ் தன் பிளாட்டுக்கு தனியாக அழைத்த ஆடியோ ஒன்றை அந்த நடிகையே வெளியிட்டு இருக்கிறார். அந்த ஆடியோவில் பேசும் அர்னவ், ஹன்சிதாவிடம் நான் உன்னிடம் தவறாக நடந்துகொண்டதாக நீ கூறினாயா என்று கேட்கிறார். அதற்கு ரிஹானா ‘நீ என்னை உன் பிளாட்டுக்கு அழைக்கவில்லையா ?’

ஒரு நாள் ஞாபகம் இருக்கிறதா நீ எனக்கு கால் செய்து என்னுடைய அப்பார்ட்மெண்டு வா யாரும் கிடையாது என்று என்னை அழைத்தாய். நீயும் திவ்யாவும் இருக்கும்போது என்னை அழைத்திருந்தால் நான் வந்திருப்பேன். ஆனால், நீ அப்படியா என்னை கூப்பிட்ட, அப்பார்ட்மெண்டில் யாரும் இல்லை யாரும் எந்த கேள்வியும் கேட்க மாட்டார்கள். நான் என்ன உன்னை கடித்தா திங்கப் போகிறேன். உன்னுடைய அனுமதி இல்லாமல் என் விரல் கூட உன் மீது படாது என்று கூறினாய். நீ கூப்பிடும் முறையிலிருந்து நீ என்னை எதற்காக அழைக்கிறாய் என்று தெரியாதா என்பதால் நான் வரவில்லை

-விளம்பரம்-

ஷூட்டிங் ஸ்பாட்டில் கூட நீ ஒரு முறை போட்டோ எடுக்கும் போது என் மீது கை போட்டுக் கொண்டு இருந்ததை என் வீட்டில் பார்த்து பல பிரச்சினைகள் ஏற்பட்டது. அதிலிருந்து தான் நான் உன்னிடம் அவ்வளவாக பழகுவது கிடையாது. உன்னை நல்லவன் என்று நினைத்தேன். ஆனால், நீ இப்படி எல்லாம் பண்ணுவாய் என்று நான் நினைக்கவில்லை. திவ்யாவிற்கு துரோகம் செய்யாதே கர்ப்பிணி பெண்ணின் பாவம் உன்னை சும்மா விடாது என்று ரிஹானா பேசி இருக்கிறார்.

இதற்கு அர்னவ் ‘சரி, இப்போ நீ அப்படி பேசியதால் ஹன்சிதா என்னை தப்பாக புரிந்துகொண்டுள்ளார், அந்த ஆன்டிய நீ try பண்ணையானு கேக்குறா, அவளிடம் நான் என்ன சொல்வது இப்போ, நீ அவளிடம் பேசு’ என்று பேசி இருக்கிறார். அதற்கு ரிஹானா, நான் எதுக்கு அவளிடம் பேசணும், நீயும் அவளும் என்ன பண்றீங்க, நீ டேட்டிங் போனது, ஷூட்டிங் ஸ்பாட்டில் நீங்க ரெண்டு பேரும் என்ன பண்ணீங்க என்பது எல்லாம் எனக்கு தெரியும். அது எனக்கு பிரச்சனை இல்லை. ஒன்று மட்டும் சொல்கிறேன் திவ்யாவிற்கு மட்டும் துரோகம் பண்ணாதே என்று பேசி இருக்கிறார் ரிஹானா.

Advertisement