இயக்குனர் சர்கார் விவகாரம் ஓய்ந்த நிலையில் பாக்கியராஜ் செயலுக்கு அவரது மகன் சாந்தனு தனது தந்தை பாக்கியராஜின் செயலுக்காக ட்விட்டரில் வருத்தம் தெரிவித்துள்ளார்.
நடிகர் பாக்கியராஜின் மகனும் நடிகருமான சந்தானு நடிகர் விஜய்யின் தீவிர ரசிகர். அதுமட்டுமல்லாமல் விஜய் குடும்பமும் பாக்கியராஜ் குடும்பமும் நீண்ட வருடங்களாக நெருங்கிய நட்பில் இருந்து வந்தனர்.
இந்நிலையில் சர்க்கார் படத்தின் கதை திருட்டு விவகாரத்தில், சாந்தனுவின் அப்பாவான பாக்கியராஜ் சர்க்காரின் கதையை வெளியிட்டதற்கு நடிகர் சாந்தனு வருத்தம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது.
சூழ்நிலைக்கு ஏற்ற மாதிரி தலைவனை மாற்றுகிற கூட்டத்தில் நான் ஒருவன் “இல்லை” !
என்றைக்கும் விஜய் அண்ணா , எனக்கு விஜய் அண்ணா தான் !
Apologies on Story reveal by appa #UnavoidableCircumstance Sincere apologies though ??
தீபாவளியை கொண்டாடுவோம்
Sarkar கொண்டாடுவோம் ! ? pic.twitter.com/XXU4Nd0h0w— Shanthnu Buddy (@imKBRshanthnu) October 30, 2018
சூழ்நிலைக்கு ஏற்ற மாதிரி தலைவனை மாற்றுகிற கூட்டத்தில் நான் ஒருவன் “இல்லை” !
என்றைக்கும் விஜய் அண்ணா , எனக்கு விஜய் அண்ணா தான் ! அப்பாவின் இந்த செயலுக்கு நான் மன்னிப்பு கோருகிறேன். தீபாவளியை கொண்டாடுவோம்
சர்கார் கொண்டாடுவோம் ! என்று பதிவிட்டுள்ளார்.