‘என்னமா நடிக்கிறாங்க’ – நீண்ட நாட்களுக்கு பின்னர் ரசிகர்களை கவர்ந்த விஐய் டிவி சீரியல் நடிகை.

0
555
- Advertisement -

சமீ ப காலமாகவே சின்னத்திரை சீரியல்கள் ரசிகர்கள் மத்தியில் பேராதரவை பெற்று வருகிறது. இதனால் ஒவ்வொரு சேனலும் வித்தியாசமான கதைக்களத்துடன் தொடர்களை ஒளிபரப்பி வருகிறார்கள். அந்த வகையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்கள் எல்லாம் டிஆர்பியில் முன்னிலையில் இருக்கிறது. அந்த வரிசையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் ஒன்று தான் சிறகடிக்க ஆசை. இந்த தொடர் ஒளிபரப்பான நாளில் இருந்து தற்போது வரை விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் சென்று கொண்டிருக்கின்றது.

-விளம்பரம்-

சீரியலில் கதாநாயகன் முத்து வீட்டில் அவருடைய தாய் அவருடைய முதல் மற்றும் இளைய மகனுக்கு மட்டும்தான் சப்போர்ட்செய்கிறார். முத்து படிக்கவில்லை என்றும் அவன் ஓவராக பேசுகிறான் என்றும், தன்னுடைய தந்தைக்கு ஆதரவாக நிற்கிறான். இதனாலே சிறு வயதில் இருந்தே அவருடைய தாய்க்கு முத்து மீது வெறுப்பு கோபம் இருக்கிறது. தன்னுடைய தாயின் பாசத்திற்காக முத்து ஏங்குகிறார். இன்னொரு பக்கம் கதாநாயகி பூக்கடை வியாபாரம் செய்கிறார். ஒரு விபத்தில் அவருடைய தந்தை இறந்து விடுகிறார். பின் அண்ணாமலை பேச்சால் அவரை முத்து திருமணம் செய்து கொள்கிறார்.

- Advertisement -

சிறகடிக்க ஆசை சீரியல்:

பின் முதல் மகனுக்கு பணக்கார பெண் என்று ரோகிணியை திருமணம் செய்து வைக்கிறார்கள். ஆனால், அவர் பணக்கார குடும்பமே இல்லை. வழக்கம் போல் வீட்டில் மாமியார் அராஜகம் நடக்கிறது. இப்படி இருக்கும் நிலையில் சீரியலில் முத்துவின் தம்பி ரவி காதலித்த பணக்கார பெண்ணை திருமணம் செய்து கொள்கிறார். ஏற்கனவே அந்த பணக்கார பெண்ணின் அப்பாவிற்கும் அண்ணாமலைக்கு இடையே பல பிரச்சினைகள் இருக்கிறது. பின் ரவி-சுருதி யாருக்கும் தெரியாமல் திருமணம் செய்து கொள்கிறார்கள். கடைசியில் தான் மீனாவிற்கு இந்த உண்மை தெரிய வருகிறது. வேறு வழியில்லாமல் மீனாவும் இவர்கள் திருமணத்திற்கு சாட்சி கையெழுத்து போடுகிறார்.

சீரியல் கதை:

கடைசியில் பெண்ணின் பெற்றோர்கள் போலீசில் அண்ணாமலை மீது புகார் கொடுக்கிறார்கள். இதனால் அண்ணாமலை ஜெயிலுக்கு போகிறார். பின் மீனா தான் இந்த திருமணத்தை செய்து வைத்தார் என்று தவறாக புரிந்து கொண்டு முத்து உட்பட பலரும் மீனாவை திட்டுகிறார்கள். என்ன செய்வது என்று புரியாமல் மீனா அழுகிறார். பின் ரவி வந்தவுடன் அண்ணாமலை விடுதலை செய்கிறார்கள். இருந்தாலும், மீனாவை வீட்டிற்குள் வரக்கூடாது என்று முத்து சென்று விடுகிறார். இருந்தும் மீனா வீட்டிற்கு வருகிறார். அவளை அவருடைய மாமியாரும், மூத்த மகன், மருமகள் எல்லோரும் சேர்ந்து அவமானப்படுத்தி வெளியே அனுப்புகிறார்கள்.

-விளம்பரம்-

மீனா நடிப்பு:

இனி அவரே வந்து கூப்பிடும் வரை நான் வரமாட்டேன் என்று சொல்லி மீனா வீட்டை விட்டு வெளியேறுகிறார். இனி வரும் காலத்தில் மீனாவின் மீது எந்த தவறும் இல்லை என்ற உண்மையை முத்து அறிவாரா? ரவியை முத்து கண்டுபிடிப்பாரா? மீனா பழையபடி தன்னுடைய மாமியார் வீட்டுக்கு வருவாரா? என்ற பல அதிரடி தீர்ப்புகளுடன் சீரியல் செல்கிறது. இந்த நிலையில் மீனாவின் நடிப்பு குறித்த மீம்ஸ்கள் தான் தற்போது இணையத்தில் தெறிக்க விட்டு வருகிறார்கள். அதாவது, சீரியலில் மீனாவின் நடிப்பை பார்த்து பலருமே பாராட்டி உண்மையாலுமே நடித்திருக்கிறீர்கள்.

ரசிகர்கள் பாராட்டு:

உங்களுடைய நடிப்பு வேற லெவல். இவ்வளவு ஹை வோல்டேஜ் டிராமா இருக்கக்கூடாதுப்பா. பார்க்கிற நமக்கே அடுத்து என்ன நடக்குமோ என்ற திக்கு திக்குன்னு இருக்கு. தெய்வமகள் தொடருக்கு பிறகு இப்படி ஒரு பீலை மறுபடியும் கொடுத்து சிறகடிக்க ஆசை மட்டும்தான். கோமதி பிரியா ஆக்டிங் செம. வேலைக்காரன் தொடருக்கும் இந்த தொடருக்கும் அவருடைய ஆக்டிங்கில் நிறைய சேஞ்ச் இருக்கு. அடுத்த வருடம் விஜய் டிவி அவார்ட்ஸில் பெஸ்ட் கேட்டகிரியில் சிறகடிக்க ஆசை சீரியலுக்கு தான் எல்லா விருதும் கொடுக்கணும் என்று பாராட்டி பதிவிட்டு வருகிறார்கள்.

Advertisement