தொடர்ந்து எழுந்த கேலிகளும்,விமர்சனங்களும் – ஹேட்டர்ஸ்களுக்கு அயலான் மேடையில் பதிலடி கொடுத்த சிவகார்த்திகேயன்

0
489
- Advertisement -

தன்னுடைய ஹேட்டர்ஸ்க்கு சிவகார்த்திகேயன் கொடுத்து இருக்கும் பதிலடி தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் மிகப்பிரபலமான நடிகர்களில் ஒருவராக சிவகார்த்திகேயன் திகழ்ந்து கொண்டு இருக்கிறார். கடைசியாக சிவகார்த்திகேயன் அவர்கள் மாவீரன் என்ற படத்தில் நடித்து இருந்தார். இந்த படத்தை இயக்குனர் மடோன் அஸ்வின் இயக்கி இருந்தார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் அதிக வசூலையும் பெற்று பாக்ஸ் ஆபிசில் இடம் பிடித்து இருக்கிறது.

-விளம்பரம்-

இதை அடுத்து தற்போது சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் அயலான். இந்த படத்தை ஆர் ரவிக்குமார் இயக்கியிருக்கிறார். இந்த படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைத்திருக்கிறார். இந்த படத்தில் ரகுல் ப்ரீத் சிங், யோகி பாபு, கருணாகரன் உட்பட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். இந்த படத்தை 24 ஏ.எம். ஸ்டுடியோஸ் மற்றும் கே.ஜே.ஆர். ஸ்டுடியோஸ் நிறுவனம் இணைந்து தயாரித்து இருக்கிறது. இந்த படம் சீக்கிரமாகவே உருவானாலும் கிராபிக்ஸ் பணிகளால் பல வருடங்கள் தள்ளி கொண்டே போனது.

- Advertisement -

அயலான் படம்:

மேலும், போஸ்ட் புரொடக்ஷன் தற்போது நிறைவுக்கு வந்து இருக்கிறது. இந்த படத்தில் சுமார் 4500 க்கும் மேற்பட்ட கிராபிக்ஸ் காட்சிகள் வைக்கப்பட்டிருக்கிறதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இந்த படத்தினுடைய இசை வெளியீட்டு விழா மற்றும் பிரீ ரிலீஸ் வீடியோ இன்று சென்னையில் நடைபெற்றிருக்கிறது. இதில் படக்குழுவினர் கலந்து கொண்டு இருக்கிறார்கள். அப்போது விழாவில் சிவகார்த்திகேயன், பொங்கலுக்கு எத்தனை படங்கள் வந்தாலும் அந்த படங்கள் எல்லாம் அடித்து துவம்சம் பண்ணும்.

விழாவில் சிவகார்த்திகேயன்:

என்னை சிலர் சூப்பர் என்று சொல்வார்கள், சில பேர் இன்ஸ்பிரேஷன் என்று சொல்வார்கள், சில பேர் திட்டுவாங்க. ஆனால், நான் இதையெல்லாம் எடுத்துக் கொள்வதே கிடையாது. என்னுடைய ஹேட்டர்ஸ் குறித்து நான் ஒண்ணுமே சொல்ல விரும்பவில்லை. என்னை பிடித்தவர்களுக்கு நான் ஓடிக்கொண்டு தான் இருப்பேன் என்று கூறியுள்ளார். இப்படி சிவகார்த்திகேயன் பேசியதற்கு காரணம் இசையமைப்பாளர் இமான் விவகாரம் தான் என்று கூறப்படுகிறது.

-விளம்பரம்-

இசையமைப்பாளர் இமான் சர்ச்சை:

இசையமைப்பாளர் டி இமான் அவர்கள் முதல் மனைவி மோனிகாவை விவாகரத்து செய்து கொண்டு இரண்டாம் திருமணம் செய்தது அனைவரும் அறிந்ததே. இப்படி இருக்கும் நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் இமான், எனக்கு முதல் திருமணத்தில் பல பிரச்சனைகள் வந்தது. அதனால் இரண்டாம் திருமணம் செய்து கொண்டேன். சிவகார்த்திகேயன் தான் நான் விவாகரத்து செய்ய காரணம். அவர் எனக்கு மிகப்பெரிய துரோகம் செய்துவிட்டார் என்றெல்லாம் கூறியிருந்தார்.

சிவகார்த்திகேயன் குறித்து சொன்னது:

இது குறித்து பலர் இமானிற்கு ஆதரவாகவும், சிவகார்த்திகேயனுக்கும் ஆதரவாக பேசி இருந்தார்கள். இதைப் பற்றி சிவகார்த்திகேயன் எந்த ஒரு கருத்தையும் கூறவில்லை. ஆனால், தற்போது அயலான் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் மறைமுகமாக தன்னுடைய ஹேட்டர்ஸ்களுக்கு சிவகார்த்திகேயன் பதிலடி கொடுத்திருக்கிறார். அதோடு பொங்கல் பண்டிகைக்கு அயலான் படத்துடன் தனுஷ் உடைய கேப்டன் மில்லர் படமும் வெளியாகயிருக்கிறது.

Advertisement