நான் எந்த தவறும் செய்யல – சர்வைவரில் இருந்து வெளியேறிய பெசன்ட் ரவியின் முதல் பதிவு.

0
1965
besant
- Advertisement -

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் சர்வைவர் நிகழ்ச்சி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுக் கொண்டிருக்கின்றது. வெவ்வேறு குணாதிசியங்கள் நிறைந்த மனிதர்களை சவால்கள் நிறைந்த ஒரு தீவில் விட்டு அவர்களுக்கு கொடுக்கும் சவால்களை கடக்கும் நிகழ்வுகளை அடிப்படையாக கொண்ட ரியாலிட்டி நிகழ்ச்சி தான் சர்வைவர். இந்த நிகழ்ச்சியை நடிகர் அர்ஜுன் தொகுத்து வழங்கி வருகிறார்.

-விளம்பரம்-

சவால்கள் நிறைந்த தனித்தீவில் 18 போட்டியாளர்கள் களம் இறக்கி விட்டார்கள். இந்த நிகழ்ச்சியின் இரண்டாவது நாள் அன்றே போட்டியாளர்களுக்குள் குழாயடி சண்டை அளவிற்கு சர்ச்சைகள் பயங்கரமாக கிளம்பி இருந்தது. பின் வாரம் வாரம் போட்டியாளர்களை எலிமினேட் செய்து வருகிறார்கள். அந்த வகையில் இந்த வாரம் சர்வைவர் நிகழ்ச்சியில் இருந்து பெசன்ட் ரவி வெளியேறினார். வேடர்கள் அணியிலேயே பெசன்ட் ரவி தான் மிகப்பெரிய பில்லராக கருதப்பட்டார்.

இதையும் பாருங்க : ஐயய்யோ, என்னப்பா ஆச்சி ராமராஜனுக்கு ? செய்தியை கேட்டு ரசிகர்கள் கவலை.

- Advertisement -

ஆனால் இவர் எலிமினேட் ஆகி இருப்பது ரசிகர்களுக்கு மனவருத்தத்தை தந்துள்ளது. தீவில் இருந்து பெசன்ட் ரவி அவர்கள் மூன்றாம் உலகத்திற்கு போனார். அங்கு விஜிக்கும் பெசன்ட் ரவிக்கும் போட்டி வைக்கப்பட்டது. அதில் பெசன்ட் ரவி தோற்றார். அதனால் மொத்தமாகவே சர்வைவர் நிகழ்ச்சியில் இருந்து பெசன்ட் ரவி எலிமினேட் செய்யப்பட்டார். இந்நிலையில் பெசன்ட் ரவி சர்வைவர் நிகழ்ச்சி விட்டு வெளியே வந்தவுடன் தன்னுடைய கருத்தை முதன்முதலாக சோசியல் மீடியாவில் பதிவிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பது, நம்ம வாழ்க்கை நமக்கு மறக்க முடியாத தருணங்களை கொடுக்கும். அப்படி ஒரு தருணம் தான் எனக்கு சர்வைவர் நிகழ்ச்சி. சர்வைவர் நிகழ்ச்சி என்பது ஒரு கேம் ஷோ மட்டும் கிடையாது.

இந்த நிகழ்ச்சி வலி, வேதனை, சந்தோஷம், சோகம், காதல் எல்லாமே ஒன்றாக கலந்தது. நான் இந்த நிகழ்ச்சியில் எந்த ஒரு தவறையும் செய்யவில்லை. உங்களுடைய அன்பையும் ஆதரவையும் பார்க்கும் போது எனக்கு ரொம்ப சந்தோசமாக இருக்கிறது. அது மட்டும் இல்லாமல் என்னால் முடிந்தவற்றை நிகழ்ச்சியில் நான் கொடுத்து இருக்கிறேன். என்னுடைய சகோதரர் சகோதரி எல்லோருக்கும் நன்றி. உங்களுடைய ஆதரவு, அன்பையும் எனக்கு கொடுத்ததற்கு நன்றி. இந்த தருணத்தை நான் என்னுடைய வாழ்க்கையில் என்றென்றும் வைத்திருப்பேன் என்று கூறியிருந்தார். இப்படி இவர் பதிவிட்டது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

-விளம்பரம்-
Advertisement