விக்ரம் 2 இல்லாமல், சூர்யா – லோகேஷ் கூட்டணியில் உருவாக இருக்கும் படம். இதோ அதிகாரபூர்வ அறிவிப்பு.

0
681
Lokesh
- Advertisement -

லோகேஷ்- சூர்யா கூட்டணியில் உருவாகும் இரும்புக்கை மாயாவி படம் குறித்து தயாரிப்பாளர் அறிவித்துள்ள லேட்டஸ்ட் அப்டேட் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான இயக்குனராக திகழ்பவர் லோகேஷ் கனகராஜ். இவர் கடந்த 2017 ஆம் ஆண்டு வெளியான ‘மாநகரம்’ என்ற படத்தின் மூலம் தான் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமாகி இருந்தார். இவர் முதல் படத்திலே சினிமா உலகில் தன்னை தனித்துவமாக அடையாளம் காணும் வகையில் மிக தரமான படத்தை கொடுத்து இருந்தார். அதனை தொடர்ந்து இவர் நடிகர் கார்த்தியை வைத்து ‘கைதி’ என்ற படத்தை இயக்கி இருந்தார்.

-விளம்பரம்-

இந்த படமும் மிக பெரிய அளவில் வெற்றி பெற்று இருந்தது. பின் இவர் கோலிவுட்டின் முன்னணி நடிகர்களில் ஒருவரான ‘தளபதி’ விஜய்யுடன் கூட்டணி அமைத்து ‘மாஸ்டர்’ என்ற படத்தை இயக்கி இருந்தார். மாஸ்டர் படமும் பிளாக் பஸ்டர் ஹிட் கொடுத்து இருந்தது. பின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்து இருந்த படம் விக்ரம். இந்த படத்தை கமலின் ராஜ்கமல் இண்டர்நேஷனல் நிறுவனம் உடன் சேர்ந்து உதயநிதி ஸ்டாலின் நிறுவனம் தயாரித்து இருக்கிறது.

- Advertisement -

விக்ரம் படம்:

மேலும், அனைவரும் எதிர்பார்த்திருந்த கமலின் விக்ரம் படம் நான்கு ஆண்டுகளுக்கு பின் வெளிவந்து இருப்பதால் ரசிகர்கள் திரையரங்கில் கொண்டாடி இருக்கிறார்கள். மேலும், இந்த படம் அனைத்து தரப்பு ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் மாஸாக இருக்கிறது. இதனால் விக்ரம் படம் உலகம் முழுவதும் தாறுமாறாக ஓடிக் கொண்டிருக்கிறது. அதோடு இந்த மாபெரும் வெற்றிக்கு கமல் படக்குழுவினருக்கு பரிசு கொடுத்து இருந்தார். இதனையடுத்து லோகேஷ் கனகராஜ் அவர்கள் விஜயை வைத்து தளபதி 67 படத்தை இயக்குகிறார்.

இரும்புக்கை மாயாவி படம்:

இந்த தகவல் ஏற்கனவே வெளியாகி இருந்தது. இது உறுதியான தகவல் என்று லோகேஷ் கனகராஜ் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தார். இந்நிலையில் லோகேஷ் கனகராஜ்- சூர்யா கூட்டணியில் உருவாகும் இரும்புக்கை மாயாவி படம் குறித்த தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. ஏற்கனவே சூர்யாவை வைத்து இரும்புக்கை மாயாவி என்கிற படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க இருந்தது அனைவருக்கும் தெரிந்த ஒன்றே.

-விளம்பரம்-

லோகேஷ் அளித்த பேட்டி:

மாநகரம் படத்தின் வெற்றிக்கு பின்னர் தயாரிப்பாளர் எஸ்ஆர் பிரபுவை சந்தித்த லோகேஷ் இரும்புக்கை மாயாவி படத்தை இயக்க ஆலோசித்து இருந்தார். ஆனால், படம் ஏதோ சில காரணங்களால் கைவிடப்பட்டது. இதுகுறித்து லோகேஷிடம் கேட்டபோது, நான் அப்போது சூர்யாவை வைத்து படம் எடுக்க தயங்கினேன். இதுகுறித்து சூர்யா, தயாரிப்பாளரிடம் தெரிவித்தேன். அவர்களும் அதற்கு சம்மதம் தெரிவித்த பின்னர் தான் கைதி படத்தை எடுத்தேன். விரைவில் சூர்யாவை வைத்து படம் பண்ணுவேன் என்று கூறியிருந்தார்.

தயாரிப்பாளர் எஸ்ஆர் பிரபு அளித்த பேட்டி:

இந்த நிலையில் சூர்யா- லோகேஷ் கனகராஜ் கூட்டணி தொடர்பாக தயாரிப்பாளர் எஸ்ஆர் பிரபுவிடம் கேட்டபோது அவர் கூறியிருப்பது, சூர்யாவின் இரும்புக்கை மாயாவி படத்தை உலகளாவிய திட்டமாகக் கொண்டு செல்ல நாங்கள் திட்டமிட்டு இருக்கிறோம். விரைவில் இப்படத்தின் பணிகளை தொடங்குவோம் என்ற நம்பிக்கை இருக்கிறது என்று கூறியிருக்கிறார். இவரின் இந்த பதில் ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தி இருக்கிறது.

Advertisement