பைனல் நெருங்கும் வேளையில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து விலகிய பிரபலம் ? – ரசிகர்கள் அதிர்ச்சி.

0
2895
- Advertisement -

குக் வித் கோமாளி சீசன் 4 நிகழ்ச்சியில் இருந்து முக்கிய பிரபலம் விலகி இருக்கும் தகவல் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. விஜய் தொலைக்காட்சியில் எத்தனையோ ரியாலிட்டி ஷோக்கள் வந்தாலும் ஒரு சில நிகழ்ச்சிகள் தான் மக்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அந்த வகையில் மூன்று சீசன்கள் கடந்த ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் பேராதரவை பெற்று இருக்கிறது.

-விளம்பரம்-

முதல் சீசனுக்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து மூன்று சீசனும் ஒளிபரப்பாகி நல்ல வரவேற்பை பெற்று இருந்தது. அதற்கு முக்கிய காரணமே இந்த நிகழ்ச்சியில் வரும் கோமாளிகள் தான். அதுமட்டும் இல்லாமல் இந்த நிகழ்ச்சி டாப் ரேட்டிங்கில் இருக்கிறது. அதிலும் கொரோனா லாக்டவுனில் மக்களுக்கு இருந்த பிரச்சனைக்கு மருந்தாக குக் வித் கோமாளி நிகழ்ச்சி இருந்தது என்றே சொல்லலாம். இந்த நிகழ்ச்சி சமையல் மட்டும் இல்லாமல் பலரையும் சிரிக்க வைக்கும் நிகழ்ச்சியாக இருக்கிறது.

- Advertisement -

குக் வித் கோமாளி 4 :

இப்படி பட்ட நிலையில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 4வது சீசன் தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகிறது. அதோடு இந்த சீசனில் புதிய கோமாளிகளும் கலந்து கொண்டுள்ளனர். அந்த வகையில் நடிகை ஷெரின், விசித்ரா, மேகா பட நடிகை ஸ்ருஷ்டி, விசித்ரா, பட நடிகை ஆண்ட்ரியான், ராஜ் ஐயப்பா, பாக்கியலட்சிமி சீரியல் VJ விஷால், கிஷோர் ராஜ்குமார், காளையன் , மைம் கோபி, ஜி பி முத்து, சிங்கப்பூர் தீபன், மணிமேகலை, சுனிதா, ரவீனா, தங்கதுரை, சில்மிஷம் சிவா, மோனிஷா போன்றோர் கலந்து கொண்டுள்ளார்.

நிகழ்ச்சி குறித்த தகவல்:

அதோடு மூன்று சீசன்களாக கோமாளியாக வந்த சிவாங்கி இந்த முறை குக்காக வந்து இருக்கிறார். இதில் இந்த சீசனையும் ரக்சன் தான் தொகுத்து வழங்கி வருகிறார். இந்த முறை நிகழ்ச்சியில் 10 போட்டியாளர்கள் கலந்து கொண்டுள்ளனர். இடையில் இந்த நிகழ்ச்சியில் பழம்பெரும் நடிகர் நாகேஷின் பேரனும், நடிகர் ஆனந்த் பாபுவின் மகனுமான கஜேஷ், கலை இயக்குநர், நடிகருமான கிரண் ஆகியோர் வையில் கார்ட் எண்ட்ரி கொடுத்தனர்.

-விளம்பரம்-

வெளியேறிய நபர்கள்:

இதுவரை இந்த நிகழ்ச்சியில் இருந்து கிஷோர், ராஜ் ஐயப்பா, விஜே விஷால், ஷெரின், காளையன், கஜேஷ், ஆன்ட்ரியன் உள்ளிட்ட பல போட்டியாளர்கள் எலிமினேட் ஆகிருக்கிறார்கள். கடந்த வாரம் தான் ஆண்ட்ரியன் வெளியேறியிருந்தார். தற்போது இந்த நிகழ்ச்சி இறுதி கட்டத்தை நெருங்கி இருக்கிறது. மேலும், இந்த வாரத்திற்கான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் நேரடியாக பைனலுக்கு செல்லும் நபர் குறித்து நடுவர்கள் அறிவிக்கிறார்கள்.

நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய பிரபலம்:

இந்நிலையில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து முக்கிய பிரபலம் விலகி இருக்கும் தகவல் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சி ஏற்படுத்தியிருக்கிறது. அதாவது, இந்த நிகழ்ச்சியில் நடுவராக இருப்பவர் வெங்கடேஷ் பட். இவர் சில நாட்களாகவே வெளிநாட்டில் இருந்து எடுத்த புகைப்படங்களை இணையத்தில் பதிவிட்டு வருகிறார்கள். இதனால் இவர் வெளிநாட்டிலேயே செட்டில் ஆகிவிட்டாரா? நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிவிட்டாரா? என்று ரசிகர்கள் கமெண்ட் செய்திருக்கிறார்கள். ஆனால், ரசிகர்கள் நிகழ்ச்சி முடிவுக்கு வர இருக்கும்போது அவர் எப்படி விளக்குவார் என்று கூறியிருக்கிறார்கள்.

Advertisement