இது என் அரசு, உன்னலா இன்னா மயிரு புடுங்க முடியுமோ புடுங்குங்க, 5 வருஷம் ஓ ** ஒன்னும் பன்ன முடியாது. வைரலாகும் வீடியோ.

0
3654
stalin
- Advertisement -

நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் தி மு க மாபெரும் வெற்றிபெற்றதன் மூலம் முதல் முறையாக தமிழக முதலமைச்சராக கடந்த மே 5 ஆம் தேதி காலை 9.10 மணிக்கு பொறுப்பேற்றார் மு க ஸ்டாலின். . தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 6-ஆம் தேதி 234 தொகுதிகளுக்கான சட்டமன்ற தேர்தல் ஒரே கட்டமாக நடைபெற்றது. தமிழ்நாட்டின் இரண்டு முக்கிய தலைவர்கள் ஜெ. ஜெயலலிதா, மு. கருணாநிதி ஆகியோரின் இறப்பிற்குப் பின்னர் தமிழ்நாட்டில் நடைபெற்ற முதலாவது சட்டமன்றத் தேர்தல் இதுவாகும். நடந்து முடிந்த சட்ட மன்ற தேர்தலில் திமுக கூட்டணி 159 இடங்களை கைபற்றியது. திமுக 125 இடங்களைப் பெற்று அறுதிப் பெரும்பான்மை பெற்றது.

-விளம்பரம்-

திமுக சின்னத்தில் நின்றவர்கள் 8 பேர் வெற்றி பெற்றதன் மூலம் திமுக உறுப்பினர்களின் எண்ணிக்கை 133 ஆக உயர்ந்தது. இதனால் திமுக தலைவர் ஸ்டாலின் முதல்வராவது உறுதியானது.10 ஆண்டுகளுக்குப் பின்னர் தமிழகத்தில் மீண்டும் திமுக ஆட்சியில் அமருகிறது. நேற்று முதலமைச்சராக பதவியேற்ற ஸ்டாலின் முதல் 5 திட்டங்களில் கையெழுத்திட்டார். ஸ்டாலின் செயல்படுத்தி வரும் திட்டங்கள் ஒரு புறம் இருக்க திமுகவினர் செய்யும் சேட்டைகள் மக்களை முகம் சுழிக்க வைக்கிறது.

இதையும் பாருங்க : இத பாத்துமா உன் புருஷன் உசுரோட இருகான் – கமன்ட் செய்தவரின் பொண்டாட்டியை நாறடித்த அனிதா சம்பத்.

- Advertisement -

கடந்த சில நாட்களுக்கு முன்னர் சென்னை முகப்பேர் மேற்கு பத்தாவது பிளாக்கில் உள்ள 92வது வட்ட அம்மா உணவகத்தில் புகுந்து அம்மா உணவக பெயர் பலகையை அடித்து நொறுக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தனர். திமுக ஆட்சிக்கு வந்ததும் திமுகவை சேர்ந்த இருவர் அம்மா உணவகத்தில் வைக்கப்பட்டு இருந்த அங்கிருந்தவர்களை மிரட்டி ஜெயலலிதா படத்தை கீழே போட்டு உடைத்தனர். அந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வந்தது.

இது தொடர்பான வீடியோ காட்சி வெளியான நிலையில் அதிமுகவினர் கொதித்து போயினர். உடனடியாக அங்கு குவிந்த அதிமுகவினர் அம்மா உணவகத்தை சூறையாடிய திமுகவினரை கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.அதை தொடர்ந்து முதலமைச்சர் மு க ஸ்டாலின் அந்த இருவரையும் கட்சி அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்தும் நீக்கினார்.

-விளம்பரம்-

மேலும், கிழித்து எறியப்பட்ட ஜெயலலிதாவின் படமும் அதே இடத்தில் மீண்டும் வைக்கப்பட்டது. இப்படி ஒரு நிலையில் சாலையில் போலீசாரிடம் தகாத வார்த்தைகளில் பேசி ரகளை செய்தவரின் வீடியோ ஒன்று சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் பேசும் அந்த நபர், இது என் அரசு, உன்னலா இன்னா மயிரு புடுங்க முடியுமோ புடுங்குங்கா, 5 வருஷம் ஓ ** ஒன்னூம் பன்னா முடியாது என்று பேசியுள்ளார்.

Advertisement