‘திராட்சை ரசம் பற்றி தான் சொன்னேன்’ இயேசுவைப் பற்றி தவறாக சித்தரிக்க எனக்கு கனவிலும் வராது- விஜய் ஆண்டனி விளக்கம்.

0
149
- Advertisement -

ஏசு நாதர் சாராயம் குடித்ததாக விஜய் ஆண்டனி பேசி பேச்சு சர்ச்சையான நிலையில் தற்போது தமிழ்நாடு கிறிஸ்தவ சபைகளின் கூட்டமைப்பு கடும் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில் தற்போது தனது கருத்திற்கு விளக்கமளித்துள்ளார் விஜய் ஆண்டனி. தமிழ் சினிமா உலகில் பிரபலமான இசையமைப்பாளராக இருந்து நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் விஜய் ஆண்டனி. இவருடைய நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று இருக்கிறது. அந்த வகையில் தற்போது இவர் நடிப்பில் விநாயக் வைத்தியநாதன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் ரோமியோ படத்தில் நடித்துள்ளார்.

-விளம்பரம்-

இந்த நிலையில் சில தினங்களுக்கு முன்பு ரோமியோ படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பு நடைபெற்று இருக்கிறது. இதில் கலந்து கொண்ட பட குழுவினர் பத்திரிக்கையாளர் கேள்விகளுக்கு பதில் அளித்து இருக்கிறார். அதில் நடிகர் விஜய் ஆண்டனி கொடுத்திருந்த பதில் தான் தற்போது சோசியல் மீடியாவில் பேசும் பொருளாகி இருக்கிறது. அதாவது, ரோமியோ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரில் பாலும் பழத்துக்கு பதிலாக ஒரு பெண் சரக்கு ஊட்டுவது போல போஸ்டர் வந்துச்சு?

- Advertisement -

இது குறித்து உங்களுடைய கருத்து என்று கேட்டிருக்கிறார்கள்.அதற்கு விஜய் ஆண்டனி, இங்கு வந்திருப்பவர்களில் பாதி பேர் குடிப்பீர்கள் என்று நினைக்கிறேன். இதில் ஆண்- பெண் என்ற வேறுபாடலாம் பார்க்க வேண்டாம். குடி என்றால் எல்லோருக்குமே ஒன்று தான். ஆண்களுக்கு என்னெல்லாம் இருக்கிறதோ அதெல்லாம் அவர்களுக்கும் இருக்கும். அந்த மாதிரி தான் மது அருந்துவதும். ஆனால், நான் குடிப்பதை சரி என்று ஆதரிக்கவில்லை.

ஆண் குடிப்பது தப்பு என்றால் பெண் குடிப்பதும் தப்பு தான். மேலும், குடி என்பது இப்போது உருவானதில்லை. இது ரொம்ப நாட்களாகவே இருக்கிறது. சாராயம் என்ற பெயரில் ஆரம்பத்த இந்த குடி தற்போது பாராக மாறி இருக்கிறது. அந்த காலத்தில் திராட்சை ரசம் என்ற பெயரில் இருந்தது. ஜீசஸ் கூட குடித்திருக்கிறார் என்று சொல்கிறார்கள் என்று பேசி இருந்தார். இவரின் இந்த பேச்சு சர்ச்சையை கிளப்பி இருந்தது.

-விளம்பரம்-

ப்படி ஒரு நிலையில் தமிழ்நாடு கிறிஸ்தவ சபைகளின் கூட்டமைப்புர் தலைவர் லியோ, விஜய் ஆண்டனியின் இந்த பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து இருந்தார். இயேசு கிறிஸ்து மது குடித்தார் என பொது வெளியில் பேசி மாபெரும் கிறிஸ்தவ சமூகத்தினரின் மனதை புண்படுத்திய நடிகர் விஜய் ஆண்டனி பொதுவெளியில் மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லையெனில் அவர் வீட்டு முன்பு மாபெரும் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்’ என்றும் கூறி இருந்தார்.

இந்த நிலையில் இதுகுறித்து விளக்கமளித்துள்ள விஜய் ஆண்டனி ‘அன்பார்ந்த கிறிஸ்தவ சபை கூட்டமைப்பின் உறுப்பினர்களே, வணக்கம்.. நான் முன் தினம் ஒரு பத்திரிகையாளர் சந்திப்பில் திராட்சை ரசம் தற்போது கண்டுபிடிக்கப்பட்டது அல்ல 2000 வருடங்களுக்கு முன்னதாகவே புழக்கத்தில் இருந்ததுதான், தேவாலயங்களிலும் பயன்படுத்தப்பட்டது, இயேசுபிரான் பயன்படுத்தி இருக்கிறார், என்று கூறியிருந்தேன்.

ஒரு பத்திரிக்கை நண்பர் என்னிடம் கேட்ட சில கேள்விகளை தொடர்ந்து, நான் பேசியதை இணைத்து, தவறாக அர்த்தம் படுத்தியதால், உங்களைப் போன்ற சிலர் மனம் புண்பட்டு இருக்கிறீர்கள் என்பது, எனக்கு வேதனை அளிக்கிறது. நான் தவறாக எதுவும் சொல்லவில்லை. நீங்களும் தவறாக புரிந்து கொள்ள வேண்டாம்.மக்களுக்காக ரத்தம் சிந்தி உயிர்நீத்த, மதங்களுக்கு அப்பாற்பட்ட இயேசுவைப் பற்றி தவறாக சித்தரிக்க எனக்கு கனவிலும் வராது.” என்று அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

Advertisement