கேப்டனுக்கு அஞ்சலி செலுத்த வந்த விஜய் மீது செருப்பு வீச்சு,அப்படி என்னடா பண்ணாரு அந்த மனுஷன்.

0
653
- Advertisement -

தற்போது சோசியல் மீடியா முழுவதும் விஜயகாந்தின் இறப்பு குறித்த செய்தி தான் வைரலாகி வருகிறது. விஜயகாந்தின் இறப்பு ஒட்டு மொத்த தமிழகத்தையும் புரட்டி போட்டு இருக்கிறது. கடந்த சில ஆண்டுகளாக இவர் உடல் நல குறைவின் காரணமாக சினிமா மற்றும் அரசியல் என இரண்டிலும் விலகி சிகிச்சை பெற்று இருந்தார். கடந்த மாதம் விஜயகாந்த் அவர்களுக்கு இருமல், சளி அதிகமாக இருந்ததால் மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டு இருந்தது.

-விளம்பரம்-

இதனால் இவரை நந்தம்பாக்கத்தில் உள்ள மியாட் மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளித்திருக்கிறார்கள். பின் விஜயகாந்தின் நுரையீரலில் பிரச்சனை இருந்ததால் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு இருந்தது. பின் விஜயகாந்தின் உடலில் முன்னேற்றம் ஏற்பட்டதாக மருத்துவர்கள் சொன்னார்கள். இதை அறிந்த விஜயகாந்தின் ரசிகர்களும், தொண்டர்களும் கொஞ்சம் நிம்மதியடைந்தனர்.

- Advertisement -

கடந்த 11-ம் தேதி விஜயகாந்த் வீடு திரும்பி இருக்கிறார். அவர் பூணமாக குணமடைந்து விட்டதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இப்படி இருக்கும் நிலையில் தேமுதிக கட்சியின் பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் கடந்த சில தினங்களுக்கு முன்னர் நடைபெற்றது. அப்போது கேப்டனை கண்ட தொண்டர்கள் கண்ணீர் வடித்தனர். இப்படி ஒரு நிலையில் நடிகர் விஜயகாந்த் மீண்டும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இந்த நிலையில் நேற்று காலை அவர் சிகிச்சை பலனின்றி காலமானார்.

அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு காலமானதாக கூறப்பட்ட நிலையில் அவருக்கு Pnemonia என்னும் நுரையீரல் அழற்சி நோய் காரணமாக உயிரிழந்தாக மருத்துவர்கள் தெரிவித்தனர். கேப்டன் விஜயகாந்தின் இறப்பை தொடர்ந்து பல்வேறு அரசியல் பிரபலங்களும், திரை பிரபலங்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.

-விளம்பரம்-

அங்கு தொண்டர்கள், ரசிகர்கள், பொதுமக்கள் என பலரும் கூட்டம் கூட்டமாக வந்து அஞ்சலி செலுத்தி வந்தனர். அந்த வகையில் விஜயகாந்த் வளர்த்துவிட்ட தளபதி படப்பிடிப்புகளை ரத்து செய்துவிட்டு விஜயகாந்த் உடலுக்கு நேரில் வந்து அஞ்சலி செலுத்தினார். அப்போது கேப்டன் உடலை பார்த்தபடி அப்படியே கலங்கியபடி நின்றார் விஜய். இறுதியாக கிளம்பும் போது கூட கிளம்ப மனம் வராமல் தான் கிளம்பினார்.

கேப்டன் உடலுக்கு அஞ்சலி செலுத்திவிட்டு காரில் ஏறி புறப்பட செல்லும் முன்னர் விஜய் மீது யாரோ ஒருவர் செருப்பை வீசி இருக்கிறார். பின்னர் விஜய் அருகில் இருந்தவர் அந்த செருப்பை எடுத்து மீண்டும் வீசினார். இந்த வீடியோ தற்போது வைரலாக பரவி வருகிறது. மேலும், இதனை கண்ட ரசிகர்கள் பலரும் அந்த மனுஷன் அப்படி என்னடா பண்ணாரு பாவம் என்று வேதனையுடன் பதிவிட்டு வருகின்றனர்.

Advertisement