யாருக்கு அசிஸ்டன்ட்டாக இருந்தார் ? எத்தனை பேரிடம் கதை சொன்னார் ? Nepotism பஞ்சாயத்தில் சிக்கிய விஜய் மகன்.

0
1262
Tamilcinema
- Advertisement -

பாலிவுட் போலவே தமிழ் சினிமாவிலும் எண்ணற்ற வாரிசு நடிகர்கள் இருக்கின்றார்கள் விஜய் சூர்யா விக்ரம் கௌதம் கார்த்திக் ஜீவா சிபிராஜ் ராதிகா சரத்குமார் அருண் விஜய் சாந்தனு என்று பல வாரிசு நடிகர்கள் இருக்கின்றனர் என்னதான் சினிமா பின்புறம் கொண்ட குடும்பத்திலிருந்து வந்தாலும் தமிழ் சினிமாவில் திறமையான நடிகர்கள் மட்டுமே நீடிக்கும் முடிகிறது இருப்பினும் தமிழ் சினிமாவில் வாரிசு நடிகர்களுக்கு சமீப காலமாக பஞ்சம் இல்லாமல் இருந்து வருகிறது.

-விளம்பரம்-

சமீபத்தில் தான் நடிகர் விக்ரமின் மகன்துருவ் விக்ரம் பிரம்மாண்ட இயக்குனர் சங்கரின் மகள் அதிதி, ஆஸ்கர் நாயகன் ஏ ஆர் ரகுமானின் மகன் அமீன் என்று பலரும் தமிழ் சினிமாவில் என்ட்ரி கொடுத்தார்கள். அதிலும் குறிப்பாக அதிதி சங்கர் தன்னுடைய முதல் படம் வெளிய ஆவதற்கு முன்பாகவே அடுத்தடுத்து படங்களில் கமிட் ஆனார் . இதனால் பாலிவுட்டை போல தமிழ் சினிமாவிலும் Nepotism தாக்கம் ஆரம்பித்துவிட்டது என்று ரசிகர்கள் பலரும் விமர்சித்து வருகின்றனர்.

- Advertisement -

இப்படி ஒரு நிலையில் தற்போது இந்த Nepotism பஞ்சாயத்தில் சிக்கியிருக்கிறார் இளைய தளபதி விஜயின் மகன் சஞ்சய்.தளபதி விஜய்க்கு சஞ்சய் என்ற மகனும், திவ்யா என்ற மகளும் உள்ளனர்.வேட்டைக்காரன் படத்தில் ஒரு பாடலுக்கு ஒரு சின்ன டான்ஸ் ஆடியிருப்பார் சஞ்சய். அதனை தொடர்ந்து சில படங்களில் ஒரு சில காட்சிகளில் நடித்து உள்ளார். ஜேசன் சஞ்சய் கனடாவில் ஃபிலிம் மேக்கிங் படிப்பு படித்து வருகிறார்.

ஜேசன் சஞ்சய் ஒரு சில குறும்படங்களை இயக்கி நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தகக்து. இதுவரை இவர் ஜங்க்ஷன், சிரி, ‘Pull The Trigger’ என்ற சில குறும்படங்களை இயக்கி இருக்கிறார். இப்படி ஒரு நிலையில் விஜய் மகன் சஞ்சய் தனது முதல் படத்தில் ஒப்பந்தமாகி இருக்கிறார். ஜேசன் சஞ்சய் இயக்கும் இந்தப் படத்தை லைகா புரொடக்சன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இதன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது.

-விளம்பரம்-

லைகா நிறுவனம் இதுவரை 2.0, பொன்னியின் செல்வன் 1 மற்றும் 2 போன்ற பிரம்மாண்ட படங்களை தயாரித்து இருக்கிறது. அதே போல லைகா நிறுவனத்தில் முதல் படமே விஜய்யின் ‘கத்தி’ திரைப்படம் தான் என்பதும் குறிப்பிடத்தக்கது. முதல் படமே இப்படி பிரம்மாண்ட பேனரில் விஜய் மகனுக்கு வாய்ப்பு கிடைத்து இருப்பதை எண்ணி கோலிவுட் வட்டாராமே மிகந்த வியப்பில் ஆழ்ந்து இருக்கிறது.

சஞ்சய்க்கு பலரும் சமூக வலைதளத்தில் வாழ்த்துக்கள் தெரிவித்து வரும் அதே வேளையில் தமிழ் சினிமாவில் Nepotism மீண்டும் ஆரம்பித்துவிட்டது என்ற விமர்சனமும் எழுந்துள்ளது. திறமை வாய்ந்த எத்தனையோ இயக்குனர்கள் வாய்ப்பு கிடைக்காமல் சுற்றிக்கொண்டு இருகின்றனர். ஆனால், முதல் படத்திலேயே லைக்கா நிறுவனத்தில் விஜய் மகனுக்கு எப்படி வாய்ப்பு கிடைத்தது. அவர் யாரிடம் துணை இயக்குனராக பணியாற்றினார் ? எத்தனை கம்பெனிக்கு ஏறி இறங்கினர்? என்று பலர் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

என்னதான் nepotism மூலம் சினிமாவில் நுழைந்தாலும் தமிழ் சினிமாவை பொறுத்த வரை திறமையும் அதிர்ஷ்டமும் இருந்தால் மட்டுமே நீடிக்க முடியும். விஜயகாந்த் மகன், முரளி மகன், கமல் மகள்கள், சத்யராஜ் மகன், பாக்கியராஜ் மகன் மற்றும் மகள் போன்ற எத்தனையோ சினிமா பின்னனி கொண்ட நபர்கள் சினிமாவில் என்ட்ரி கொடுத்தாலும் அவர்களால் விஜய், சூர்யா அளவிற்கு ஜொலிக்க முடியவில்லை என்பதே இதற்கு உதாரணம்.

Advertisement