அடுத்தடுத்து முடிக்கப்பட்ட சீரியல்கள் – நீண்ட இடைவெளிக்கு பின் புதிய சீரியலில் சரண்யா. இதாவது நிலைக்குமா ?

0
1923
Saranya
- Advertisement -

சின்னத்திரையில் உள்ள பிரபலமான நடிகைகளில் ஒருவராக சரண்யா திகழ்ந்து வருகிறார். இளசுகள் மனதை கொள்ளை அடித்த நடிகைகளில் இவரும் ஒருவர். ஆரம்பத்தில் நடிகை சரண்யா கலைஞர் தொலைக்காட்சியில் செய்திவாசிப்பாளராக இருந்தார். அதன் பின்னர் ராஜ் தொலைக்காட்சியில் பணியாற்றினார். ஆனால், அந்த தொலைக்காட்சியில் இரண்டு மாதங்கள் மட்டுமே தான் இருந்தார். பின்னர் ஜீ தமிழ், புதிய தலைமுறை போன்ற பல தொலைக்காட்சிகளில் செய்தி நிருபராக பணியாற்றினார். மேலும், இவர் ஆயிரம் முத்தங்களுடன் தேன்மொழி என்ற படத்திலும் நடித்து உள்ளார்.

-விளம்பரம்-

பின் இவர் சில படங்களில் நடித்து உள்ளார். ஆனால், சினிமாவில் பட வாய்ப்புகள் கிடைக்காததால் சின்னத்திரை நோக்கி பயணம் செய்தார்.இவர் முதன் முதலாக விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வெற்றிகரமாக முடிவடைந்த நெஞ்சம் மறப்பதில்லை என்ற சீரியலில் நடித்து இருந்தார். பின் சன் தொலைக்காட்சியில் துவங்கப்பட்ட ரன் என்ற தொடரில் நடித்து வந்தார். ஆனால், சரண்யா இந்த சீரியலில் இருந்து விலகி விட்டார்.

- Advertisement -

அதன் பின்னர் இவர் ஆயுத எழுத்து சீரியலில் கமிட் ஆனார். இவருக்கு முன்பாக அந்த தொடரில் ஸ்ரீத்து கிருஷ்ணன் தான் நடித்து வந்தார். அவர் விலகிய பின் சரண்யா இந்த தொடரில் கமிட் ஆனார். ஆனால், இந்த சீரியலும் திடீரென்று நிறுத்தப்பட்டது. பின்னர் கிட்டத்தட்ட இவர் ஓராண்டுகள் எந்த சீரியலிலும் நடிக்காமல் தான் இருந்தார்.இப்படி ஒரு நிலையில் தான் சமீபத்தில் விஜய் டிவியில் துவங்கப்பட்ட ‘வைதேகி காத்திருந்தாள்’ தொடரில் மீண்டும் நடிக்க வந்தார் சரண்யா.

இந்த தொடரில் இவருக்கு ஜோடியாக பிரஜன் நடித்து வந்தார். ஆனால், அவருக்கு சினிமாவில் வாய்ப்பு கிடைக்கவே சீரியலில் இருந்து விலகினார். பின் அவருக்கு பதில் முன்னா நடித்து வந்தார். மேலும், 50 எபிசோடுகளை கடந்த இந்த சீரியல் சமீபத்தில் திடீரென்று நிறுத்தப்பட்டது. இப்படி ஒரு நிலையில் இந்த சீரியல் திடீரென்று நிறுத்தப்பட்டது குறித்து சரண்யா தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் பதிவு போட்டு இருந்தார்.

-விளம்பரம்-

அதில், இந்த கஷ்டமான நேரத்தில் அமைதியாக இருக்க விரும்புகிறேன். கடினமான காலத்தில் எனக்கு ஆதரவாக இருப்பவர்களுக்கு எனது நன்றிகள். இப்போது மிகவும் கஷ்டமான காலத்தை சந்தித்து வருகிறேன். மிகவும் உதாசீனப்படுத்தும் போது தான் மிகவும் வலிக்கிறது. கூடுதல் பலத்துடன் விரைவில் மீண்டு வருவேன். எதுவும் என்னை சிதைக்க முடியாது என்று கூறி இருந்தார். இவரின் பதிவிற்கு பலரும் ஆறுதலாக கமெண்ட் செய்து இருந்தார்கள். இதனைத்தொடர்ந்து சரண்யா வேறு எந்த சீரியலும் கமிட்டாகவில்லை.

இப்படி ஒரு நிலையில் தற்போது நீண்ட மாத இடைவெளிக்கு பின்னர் மீண்டும் ஒரு புதிய தொடரில் கமிட் ஆகி இருக்கிறார். ஜீ தமிழில் வரப்போகும் புதிய சீரியலில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இந்த சீரியல் குறித்த அதிகாரப்பூர்வ அறிவுப்பு விரைவில் வெளியாக இருக்கிறது. இந்த தொடராவது தொடர்ந்து ஒளிபரப்பாகி சரண்யாவிற்கு கைகொடுக்குமா என்பது பொறுத்திருந்து பார்க்கலாம்.

Advertisement