மீச வச்ச குழந்தையப்பா – 69வது பிறந்தநாள் கொண்டாடிய கேப்டன் வெளியிட்ட செல்ஃபீ புகைப்படம்.

0
1187
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான, முன்னணி நடிகர்களில் ஒருவர் நடிகர் விஜயகாந்த். இவரை அனைவரும் கேப்டன் என்று தான் செல்லமாக அழைப்பார்கள். இவர் நடிகர் என்று சொல்வதை விட சிறந்த அரசியல்வாதி என்றும் சொல்வார்கள். நடிகர் விஜயகாந்த் அவர்கள் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் தலைவர் ஆவார். இவர் தன்னுடைய முழு கவனத்தையும் அரசியலில் ஈடுபடுத்தி வருகிறார். தற்போது இவருக்கு 67 வயது ஆகிறது. ஆனால், இப்போது கூட அவர் குழந்தை போன்று தான் நடந்து கொள்கிறார் என்று இவருக்கு நெருக்கமானவர்கள் சொல்வார்கள்.

-விளம்பரம்-

இவர் இதுவரை தமிழ் மொழி படங்கள் தவிர வேறு எந்த மொழி படங்களிலும் நடித்து கிடையாது. நடிக்க வாய்ப்பு வந்தாலும் அந்த வாய்ப்பை இவர் பயன்படுத்திக் கொள்ளவில்லை.இவருடைய படங்கள் எல்லாமே சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்தது. இவர் அதிகமாக படங்களில் போலீஸ் அதிகாரியாகவும், சமூக சேவைகளைச் செய்யும் கதாபாத்திரங்களில் தான் அதிகம் நடித்து உள்ளார். நடிகர் விஜயகாந்த் அவர்கள் முன்னாள் நடிகர் சங்கத்தின் தலைவரும் ஆவார். நடிகர் சங்கத்தின் பொறுப்பில் இருக்கும் போது இவர் சிறப்பாக நடத்தி வந்தார்.

- Advertisement -

முன் காலத்தில் இவரெல்லாம் ஒரு நடிகரா என்று கேலி செய்தவர்கள் முகத்தில் கரியைப் பூச செய்தவர். மேலும், நம்மைக் கிண்டல் கேலி செய்தவர்கள் முன்னாடி நன்றாக வாழ்ந்து காட்ட வேண்டும் என்ற குறிக்கோளுடன் வாழ்ந்தவர். நடிகர் விஜயகாந்த் அவர்கள் சினிமா உலகத்தை விட்டு அரசியலில் மாற்றத்தை உருவாக்க பல முயற்சிகளை செய்து வந்தார்.

ஆனால், இவருடைய உடல் நலக்குறைவு காரணமாக செய்ய முடியாமல் போனது. இவருக்கு எவ்வளவு சிகிச்சைகள் மேற்கொண்டது. ஆனால், இவரை பூரண குணம் செய்ய முடியவில்லை. பின் சிகிச்சைக்காக பல வெளிநாடுகளுக்கும் சென்றார்கள். ஆனால், அதுவும் பயன் அளிக்கவில்லை. விரைவில் கேப்டன் பழைய கம்பீரத்தோடு வருவார் என்று பலரும் எதிர்பார்த்து வருகின்றனர். நடிகர் விஜயகாந்த் இன்று தனது 69 வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். பிறந்தநாளையொட்டி இன்று தனது குடும்பத்தினருடன் செல்பி எடுத்து அதனை தனது ட்விட்டர் பக்கத்திலும் பகிர்ந்துள்ளார்.

-விளம்பரம்-
Advertisement