சாப்பிடும் முன் மூன்று கடவுள்களை வணங்கும் விஷால், கேலிக்கு உள்ளாகும் வீடியோக்கள் குறித்து உருக்கமான பதில்.

0
136
- Advertisement -

மூன்று மதம் வழிபாட்டை மேற்கொண்ட விஷாலை கண்டு யோகி பாபு கொடுத்த Reaction வைரலான நிலையில் தற்போது இதுகுறித்து விளக்கமளித்துள்ளார் விஷால். தமிழ் சினிமா உலகில் உள்ள முன்னணி நடிகர்களில் ஒருவராக விஷால் திகழ்ந்து கொண்டிருக்கிறார். இவர் பிரபல தயாரிப்பாளர் ஜி.கே ரெட்டியின் இரண்டாவது மகன் ஆவார். விஷால் சினிமாவில் நடிகர் ஆவதற்கு முன்பே நடிகர் அர்ஜுனிடம் உதவி இயக்குனராக பணி புரிந்து இருந்தார். அதன் பின் இவர் ஹீரோவாக நடித்த முதல் திரைப்படம் செல்லமே.

-விளம்பரம்-

அதன் பின் நடிகர் விஷால் அவர்கள் பல சூப்பர் ஹிட் படங்களை கொடுத்து இருக்கிறார். மேலும், இவர் தென்னிந்திய நடிகர் சங்கத்தின் பொதுச் செயலாளர், திரைப்படத் நடிகர் சங்கத் தலைவராகவும் இருந்து வந்தார். இந்த ஆண்டு நடந்த நடிகர் சங்க தேர்தலில் விஷாலின் அணி தான் மீண்டும் வெற்றி பெற்று இருக்கிறது. அதோடு தமிழ் சினிமாவில் புரட்சி தளபதி என்று நடிகர் விஷாலை அழைக்கிறார்கள். இருந்தாலும், விஷால் படங்களில் அதிக கவனம் செலுத்தி வருகிறார்.

- Advertisement -

விஷால் நடித்த படம்;

அந்த வகையில் விஷால் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் மார்க் ஆண்டனி. இந்த படத்தை இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கி இருந்தார். இப்படத்தை எஸ்.வினோத் குமார் தயாரித்துஇருந்தது. ஜி.வி பிரகாஷ் இந்த படத்திற்கு இசையமைத்திருந்தார். இந்த படத்தில் செல்வராகவன், எஸ் ஜே சூர்யா, அபிநயா, ரிது வர்மா, நிழல்கள் ரவி, Y.G. மகேந்திரன் உட்பட பலர் நடித்திருந்தனர். மேலும், இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

சமீப காலமாக விஷால் எங்கு சென்று சாமி கும்பிட்டாலும், எதை சாப்பிட்டாலும் மூன்று மத கடவுள்களை வணங்கி சாப்பிட்டு வருகிறார். ஆனால், இது சமூக வலைதளத்தில் அடிக்கடி கேலிக்கு உள்ளாகி வருகிறது. இப்படி ஒரு நிலையில் நேற்று mgr பிறந்தநாளை முன்னிட்டு அனைவருடன் சேர்ந்து உணவு சாப்பிட்ட விஷால் வழக்கம் போல சாப்பிடும் முன் சாமி கும்பிட துவங்கினார். அப்போது அருகில் இருந்த யோகி பாபு கொடுத்த Reaction பெரும் வைரலானது.

-விளம்பரம்-

இந்த நிலையில் ரத்னம் படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் ரசிகர் ஒருவர் சாப்பிடுவதற்கு முன் மூன்று கடவுள்களையும் வணங்குவது குறித்து கேள்வி எழுப்பி இருந்தார். இதற்கு பதில் அளித்த விஷால் தான் கழுத்தில் அணிந்திருந்த ஜீசஸ் மற்றும் சாமி மாலையை காண்பித்து பின்னர் கையில் அணிந்திருந்த பிரேஸ்லெட்டையும் காண்பித்து இது மூன்றும் சாமிதான். 10 வருடமாக செய்து கொண்டிருக்கிறேன்.

எனக்கு அல்லாவும் ஒன்றுதான் சாய்பாபாவும் ஒன்றுதான் ஜீசஸ்சும் ஒன்றுதான். நிறைய பேர் இது குறித்து என்னிடம் கேட்டார்கள் சமீபத்தில் கூட ஒரு பெண் என்னைப் போன்று செய்து காட்டினார். எனக்கு கேமரா தான் தெய்வம், அதுதான் எனக்கு சோறு போட்டது. கடவுளை நான் பார்த்தது கிடையாது, அந்த கேமரா தான் எனக்கு கடவுள் அந்த கேமரா முன்பு நான் வணங்கும் எல்லா தெய்வங்களும் ஒன்று என்று சொல்வது தான் என்னுடைய நோக்கம்என்று கூறியுள்ளார்.

Advertisement