இந்த நேரத்தில் தான் ஆர்.கே நகர் இடைத்தேர்தலிலும் போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளார் விஷால். நேற்று வேட்பு மனுவையும் தாக்கல் செய்துவிட்டார் விஷால்.
இதனை வைத்து சமூக வலை தளங்களில் மீம்சுகள் பறந்து கொண்டு இருக்கின்றன.
இதற்கு முன்னர் நடந்த தயாரிப்பாளர் சங்க தேர்தலின் போது விஷாலை யாரோ அடித்துவிட்டதாகக் கூறி மயங்கி விழுந்தார். அதன் பின்னர் தயாரிப்பாளர் சங்க தேர்தலிலும் வெற்றி பெற்றுவிட்டார்.
மேலும், விஷாலுக்கு ஆதரவா நடிகர் ஆர்யா, மற்றும் நடிகர் பிரகாஷ் ராஜ் ஆகியோர் பைக்கில் வந்து பிரச்சாரம் செய்ய உள்ளதாக அறிவுறுத்தியுள்ளனர். விஷாலும் உடன் வேட்பாளராக வருகிறார். இதனால் ஆர்.கே நகரில் யாரும் விஷாலை அடித்துவிட வேண்டாம், பின்னர் தயாரிப்பாளர் சங்கத்தில் வெற்றி பெற்றதைப் போலவே இதிலும் வெற்றி பெற்றுவிடப் போகிறார் என கேலியும் கிண்டலுமாக சமூக வலைத்தளங்கில் கலாய்த்து வருகின்றனர்.




