சில மாதங்களுக்கு முன்பு மூன்று மதம் வழிபாட்டை மேற்கொண்ட விஷாலை கண்டு தான் கொடுத்த ரியாக்ஷனுக்கு தற்போது யோகி பாபு விளக்கம் அளித்துள்ளார். தமிழ் சினிமா உலகில் உள்ள முன்னணி நடிகர்களில் ஒருவராக விஷால் திகழ்ந்து கொண்டிருக்கிறார். இவர் பிரபல தயாரிப்பாளர் ஜி.கே ரெட்டியின் இரண்டாவது மகன் ஆவார். விஷால் சினிமாவில் நடிகர் ஆவதற்கு முன்பே நடிகர் அர்ஜுனிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்து இருந்தார். அதன் பின் இவர் ஹீரோவாக நடித்த முதல் திரைப்படம் ‘செல்லமே’.
அதன் பின்னர் நடிகர் விஷால் அவர்கள் பல சூப்பர் ஹிட் படங்களை கொடுத்திருக்கிறார். மேலும், இவர் தென்னிந்திய நடிகர் சங்கத்தின் பொதுச் செயலாளர், நடிகர் சங்கத் தலைவராகவும் இருந்து வந்தார். அதோடு தமிழ் சினிமாவில் ‘புரட்சித் தளபதி’ என்று நடிகர் விஷாலினை அழைக்கிறார்கள். தற்போது விஷால் படங்களில் நடிப்பதில் அதிக காலம் செலுத்தி வருகிறார். கடைசியாக விஷால் ‘ரத்தினம்’ திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த படம் மக்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்றிருந்தது.
மூன்று மத வழிபாடு:
சமீப காலமாகவே விஷால் எங்கு சென்று சாமி கும்பிட்டாலும், எதை சாப்பிட்டாலும் மூன்று மத கடவுள்களை வணங்கி சாப்பிட்டு வருகிறார். ஆனால், இது சமூக வலைதளத்தில் அடிக்கடி கேலிக்கு உள்ளாகி வருகிறது. அந்த வகையில் சில மாதங்களுக்கு முன்பு எம்ஜிஆர் பிறந்த நாளை முன்னிட்டு அன்னைவருடன் சேர்ந்து உணவு சாப்பிட்ட விஷால் வழக்கம் போல் சாப்பிடும் முன் சாமி கும்பிடத் துவங்கினார். அப்போது அருகில் இருந்த யோகி பாபு கொடுத்த ரியாக்ஷன் தான் அப்போது வைரல் ஆகியிருந்தது.
யோகி பாபு விளக்கம்:
அந்த வீடியோ வைரலானதைத் தொடர்ந்து விஷாலை சமூக வலைதளங்களில் அனைவரும் கமெண்ட்களில் கேலி செய்திருந்தனர். தற்போது யோகி பாபு விஷாலை பார்த்து அப்போது கொடுத்த ரியாக்சனுக்கு தான் விளக்கம் அளித்துள்ளார். அதாவது சமீபத்தில் யோகி பாபு நடித்து வெளியான ‘போட்’ பட ப்ரமோஷனுக்காக விஜே சித்துவுடன் அவரது யூடியூப் சேனலில் ‘மொட்டைமாடி பார்ட்டி’ என்ற காமெடி நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருந்தார்.
விஜே சித்து கேட்ட கேள்வி:
அப்போது விஜே சித்து யோகி பாபுவிடம் உங்களுக்கு ஒரு காணொளியை காட்டுகிறேன். அந்த காணொளியில் உங்களுடைய மைண்ட் வாய்ஸ் என்னவென்று நான் தெரிந்து கொள்ள வேண்டும் என்று விஷாலைப் பார்த்து யோகிபாபு கொடுக்கும் ரியாக்ஷன் வீடியோவை காட்டினார். அதைப் பார்த்த யோகி பாபு சிரித்துக்கொண்டே, ‘டேய் ராஜா நான் அதை எதார்த்தமாக பண்ணது. எனக்கு நல்லதா தான் தோணுச்சு. பரவாயில்லையே சாப்பிடும்போது சாமி கும்பிடுகிறார் என்று நினைத்தேன். இதை நான் உண்மையாகவே சொல்கிறேன் நான் வேணும் என்று எதுவும் பண்ணவில்லை.
யோகி பாபு குறித்து:
மேலும், நான் சாப்பிடும் போது அவர் சாமி கும்பிடுவதை எதார்த்தமாக பார்த்தேன், அப்போ எவனோ ஒருவன் வீடியோ எடுத்தது உலகம் ஃபுல்லா பரப்பி விட்டு இருக்கான் என்று நகைச்சுவையோடு கூறியுள்ளார். தற்போது இந்த வீடியோ தான் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் பிரபலமான நடிகர்களின் ஒருவராக யோகி பாபு திகழ்ந்து கொண்டு வருகிறார். ஆரம்பத்தில் காமெடியனாக நடித்து வந்த யோகி பாபு தற்போது ஹீரோவாகவும் கலக்கி கொண்டு வருகிறார்.