தீபாவளிக்கு வெளியான மெர்சல் திரைப்படம் பலரது பாராட்டினாலும் சிலரது எதிர்ப்பினாலும் தேசிய அளவில் செய்தி சேனல்களில் ஒரு வாரமாக கொடிகட்டிப் பறந்தது.
தேசிய ஊடகங்கள் 200 கோடி ரூபாய் வரை தற்போது வசூல் செய்துள்ளதாக அறிவித்தன. மேலும், சென்னை பாக்ஸ் ஆபீசில் அடுத்த்தடுத்து பல சாதனைகளை படம் வெளியான குறைந்த நாட்களில் செய்துள்ளது.
படம் வெளியாகி இன்று வரை 12 நாட்கள் ஆகிறது. இந்த 12 நாட்களில் சென்னையில் மட்டும் 10.88 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது மெர்சல். 12 நாட்களில் எந்த ஒரு படமும் இவ்வளவு வசூல் செய்ததில்லை.
மேலும், சமீபத்தில் வெளியான விவேகத்தின் வாழ்நாள் கலெக்சனை சென்னை பாக்ஸ் ஆபீசில் முந்தியுள்ளது மெர்சல். தற்போது மெர்சல் 4ஆவது இடத்தில் உள்ளது .
முதல் மூன்று இடத்தில் கபாலி, எந்திரன் மற்றும் பாகுபலி-2 ஆகிய படங்கள் உள்ளது. இன்னும் சில நாட்களில் இந்த சாதனையையும் மெர்சல் முறியடிக்க வாய்ப்புகள் உள்ளது.