சினிமா உலகில் சில்க் ஸ்மிதாவுக்கு பிறகு கவர்ச்சி நாயகியாக வலம் வந்தவர் நடிகை ஷகிலா. ஷகிலா பெயர் சொன்னால் போதும் அனைத்து ரசிகர்களும் குஷியாகி விடுவார்கள். அந்த அளவிற்கு இவருடைய படங்களில் தாராளமாக கவர்ச்சி காட்டிய நடிகை. இவர் தமிழ் சினிமா உலகில் துணை நடிகையாக தன்னுடைய திரைப் பயணத்தை தொடங்கினார். இவர் ஆரம்பத்தில் சிறு சிறு வேடங்களில் நடித்து வந்தார். கவுண்டமணியுடன் சில படங்களில் நகைச்சுவை காட்சிகளிலும் நடித்து இருந்தார். இவருடைய குடும்ப சூழ்நிலை காரணமாக இவர் மலையாள கரையோரம் ஒதுங்கி கவர்ச்சி படங்களில் நடிக்க ஆரம்பித்தார்.
இவர் முதலில் கவர்ச்சி நாயகியாக வலம் வந்தது மலையாள மொழி படங்களில் தான். அதனாலேயே இவருக்கு கேரளாவில் அதிக ரசிகர்கள் உள்ளார்கள் என்று சொல்லும் அளவுக்கு கவர்ச்சி விருந்து படைத்தவர்.இவருடைய கவர்ச்சி படங்களுக்கு ரசிகர்கள் மயங்காதவர்கள் இருக்க மாட்டார். மேலும், ஷகீலா தனது வாழ்கை வரலாற்றை படமாக எடுத்துள்ளார். சமீபத்தில் பேசிய ஷகீலா, எனக்கு தெரிந்து நான் செய்த தவறை தற்போது சினிமா துறைக்கு வரும் நடிகைகள், படிக்கும் மாணவிகள் அனைவருக்கும் ஒன்று சொல்லுகிறேன்.
என்னை போல் யாரும் ஏமாந்து விடாதீர்கள். அதைத்தான் என் புக்கில் எழுதி இருக்கிறேன். இதைத்தான் படமாக எடுத்து இருக்கிறார்கள். பெண்களுக்கு மேசேஜாக இந்த திரைப்படம் இருக்கும் என்று கூறி இருந்தார். இப்படி ஒரு நிலையில் ஷகீலாவின் திருநங்கை மகளின் புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது. உடனே, நீங்கள் ஷகீலாக்கு தான் கல்யாணமே ஆகலேயே என்று கேட்பது எங்களுக்கு புரிகிறது. ஷகீலா திருமணம் செய்துகொள்ளவில்லை தான். ஆனால், அவர் ஒரு திருநங்கையை தத்தெடுத்து வளர்த்து வருகிறார். அவரை ஷகிலா தங்கம் என்று தான் அழைப்பாராம் (பாவக் கதை சத்தாரு ஞாபகம் வருகிறதா). மேலும், அவருடைய உண்மையான பெயர் மிலா. மேலும், இவர் ஒரு ஆடை வடிவமைப்பாளராக வேலை செய்து வருகிறாராம்.
ஷகீலாவிற்கு திருமணம் ஆகாவில்லை என்றாலும் ஒரு சில காதல் கதை இருக்கிறது.இதுகுறித்து அவர் பேசிய போது, நான் 12 ஆண்டுகளுக்கு முன்பு மோகன்லால் நடித்த ‘சோட்டா மும்பை’ என்ற படத்தில் நடித்திருந்தேன். அந்த படத்தை மணியன்பிள்ள ரஜூ தான் தயாரித்து இருந்தார். அந்த சமயத்தில் என் தாய்க்கு உடல் நிலை சரியில்லாமல் போய்விட்டது. என் தாயின் சிகிச்சைக்கு நிறைய பணம் தேவைப்பட்டது.
இதனால் மணியன்பிள்ள ராஜுவிடம் அந்த படத்தில் நான் நடிப்பதற்கான முழு சம்பளத்தையும் முன்கூட்டியே கேட்டு வாங்கினேன். அந்த சமயம் அந்த பணம் என் தாயின் சிகிச்சைக்கு மிகவும் உதவியாக இருந்தது. இந்த காரணத்தால் அந்த படத்தில் நடித்த போது ஒரு கட்டத்தில் அவர் மீது எனக்கு காதல் ஏற்பட்டது. இதனால் அவரிடம் நான் காதல் கடிதத்தை கொடுத்தேன். ஆனால், கடைசி வரை அந்த கடிதத்திற்கான பதிலை அவர் சொல்லவே இல்லை’ என்று கூறியுள்ளார் ஷகிலா