ரஜினி பேசுறத கேட்டா சிரிப்புதா வருது – சந்திரபாபு நாயுடு குறித்து பெருமை பேசியதால் ரஜினியை விமர்சித்த ரோஜா.

0
524
roja
- Advertisement -

சந்திரபாபு குறித்து ரஜினி மேடையில் பெருமையாக பேசிய நிலையில் நடிகை ரோஜா , ரஜினியை விமர்சித்து உள்ளது ரஜினி ரசிகர்களை பெரும் கொந்தளிப்பில் ஆழ்ந்துள்ளது. ஆந்திராவின் முன்னாள் முதல்வர் என்.டி. ராமாராவின் நுாறாவது பிறந்த நாள் நிகழ்ச்சி கடந்த சில நாட்களுக்கு முன்னர் விஜயவாடாவில் நடைபெற்றது. தெலுங்குதேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு என்.டி.ஆர் மகன் நடிகர் பாலகிருஷ்ணா கலந்துகொண்டனர். மேலும் இந்த விழாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு இருந்தார்.

-விளம்பரம்-

இந்த விழாவில் பேசிய அவர் ‘ந்திரபாபு நாயுடு ஒரு தீர்க்கதரிசி, தொலைநோக்கு பார்வைகொண்ட அரசியல் தலைவர். அவரது தொலைநோக்கு பார்வையால், ஐதராபாத் இப்போது ஹைடெக் நகராக மாறியுள்ளது. ஐதராபாத், நியூயார்க் போன்று வளர்ந்துள்ளது’ என்று பேசி இருந்தார். ரஜினியின் இந்த பேச்சுக்கு ஆந்திராவில் உள்ள மற்ற கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அதிலும் குறிப்பாக ஜெகன் மோகன் கட்சியினர் ரஜினியை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

- Advertisement -

ஒய் எஸ் ஆர் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த  கோடாலி வெங்கடேஸ்வர ராவ் நாணி என்ற எம் எல் ஏ ‘ன் டி ஆர் முதுகில் குத்தியவர் தான் சந்திரபாபு நாயுடு. அந்த தருணத்தில் சந்திரபாபு நாயுடுவுக்கு உதவிய ஏமாற்றுக்காரர் தான் ரஜினி. எம்எல்ஏக்கள் ஹோட்டலில் தங்க வைக்கப்பட்டதற்கு அப்போது சந்திரபாபு நாயுடுவுக்கு ரஜினி உதவியாக இருந்தார்.ரஜினி தமிழ்நாட்டில் ஹீரோவாக இருக்கலாம்.

ஆனால் உண்மையில் அவர் ஒரு ஜீரோ. ரஜினிகாந்த் வாரத்தில் நான்கு நாட்கள் மருத்துவமனைக்கு செல்வார். எஞ்சியில மூன்று நாட்களில் தான் படப்பிடிப்புக்கு வருவார். இதனால் ரஜினியின் பேச்சை பெரியதாக எடுத்துக் கொள்ள தேவையில்லை’ என்று கடுமையாக விமர்சனம் செய்தார். இப்படி ஒரு நிலையில் நடிகையும் ஆந்திர அமைச்சருமான ரோஜாவும் ரஜினியின் இந்த பேச்சை கடுமையாக விமர்சனம் செய்து இருக்கிறார்.

-விளம்பரம்-

இதுகுறித்து பேசிய அவர் ‘ரஜினிகாந்த் பேச்சை கேட்டால் தனக்கு சிரிப்பு தான் வருகிறது. 003ஆம் ஆண்டுடன் ஒருங்கிணைந்த ஆந்திர மாநிலத்தில் சந்திரபாபு நாயுடுவின் ஆட்சிக்காலம் முடிந்துவிட்டது. 20 ஆண்டுகளாக ஹைதராபாத் நகரை ஆட்சி செய்யாத சந்திரபாபு நாயுடுவால் அந்த நகரம் எப்படி வளர்ச்சி பெற்றிருக்கும். ரஜினிகாந்து தெரிந்து தான் பேசினாரா இல்லை சந்திரபாபு நாயுடு எழுதிக் கொடுத்த ஸ்கிரிப்டை பார்த்து படித்தாரா என தெரியவில்லை.

என்.டி.ராமாராவ் மரணத்திற்கு காரணமே சந்திரபாபு நாயுடு தான். அப்படியிருக்கும் போது என்.டி.ஆரின் ஆசி எப்படி சந்திரபாபு நாயுடுவுக்கு கிடைக்கும். என்.டி.ஆர். தன்னுடைய இறுதிக்காலத்தில் சந்திரபாபு நாயுடு பற்றி கூறியது ரஜினிகாந்துக்கு தெரியவில்லை என்றால், அது தொடர்பான சிடியை வேண்டும் என்றால் அனுப்புகிறேன் என்றும் பேசி இருக்கிறார் ரோஜா. ரோஜாவின் இந்த பேச்சை தொடர்ந்து ரஜினி ரசிகர்கள் பலரும் ysr கட்சியினரையும் ரோஜாவையும் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

Advertisement