மீரா மிதுன் மற்றும் அபிராமிக்கும் இடையேயான சண்டை தான் கடந்த இரண்டு நாட்களாக பிக் பாஸ் நிகழ்ச்சியில் பரபரப்பாக பேசப்பட்டது.நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் மீரா மிதுனும், அபிராமியும் ஒரு வழியாக சமாதானம் ஆகினர். அப்போது பேசிய மீரா மிதுன் அபிராமியை நான் தான் ஒரு மாடலாக உருவாக்கியவர் என்று கூறியிருந்தார். இந்த சம்பத்திற்கு பின்னர் ரேஷ்மாவும், மீராவும் பேசிக்கொண்டிருந்தனர்.
அப்போது சூப்பர் மாடல் என்றால் என்ன என்பதை ரேஷ்மாவிற்கு விளக்கிக்கொண்டிருந்தார் மீரா, தான் ஒரு சூப்பர் மாடல் என்று கூறியிருந்தார். அதற்கு ரேஷ்மா மாடல் மற்றும் சூப்பர் மாடலுக்கும் என்ன வித்தியாசம் என்று கேள்வி கேட்டார். அதற்கு மீரா மீதுன், பியூடி பேஜன்ட் பட்டம் வென்றாலே சூப்பர் மாடல் என்று கூறியிருந்தார். நான் இந்தியாவில் கிங் பிசர் சார்பாக பல பேஷன் ஷோக்களில் கலந்து கொண்டிருக்கிறேன் என்று கூறினார்.
மீரா மிதுன் கடந்த 2016 ஆம் ஆண்டு மிஸ் தமிழ் நாடு பட்டத்தை வென்ற பிறகு ஒரு சில மிஸ் அழகி போட்டிகளில் ஒருங்கிணைப்பாளராக பணியாற்றியுள்ளார். மேலும், அந்த வகையில் 2017 ஆம் ஆம் ஆண்டு நடைபெற்ற மிஸ் இந்தியா அழகி போட்டி நிகழ்ச்சியில் அபிராமியும் ஒரு போட்டியாளராக கலந்து கொண்டுள்ளார்.
இந்த அழகி போட்டியில் பவித்ரா என்பவர் பட்டத்தை வெல்கிறார். இதில் கவனிக்கபட வேண்டிய விஷயம் என்னவெனில் இந்த பட்டத்தை முன்னாள் அழகியான மீரா மிதுன் தான் பவித்ராவிற்கு வழங்குகிறார். அதே மேடையில் தான் அபிராமியும் நின்றுகொண்டிருக்கிறார். அந்த காட்சிகளை நீங்கள் கீழே உள்ள வீடியோவில் பார்க்கலாம்.
இப்படி துறை ரீதியாக அபிராமிக்கு, மீரா மிதுனை நன்றாகவே தெரியும். ஆனால், கடந்த சில மாதங்களாக மீரா மீதுன் பல்வேறு மோசடிகளில் ஈடுபட்டது அபிராமிக்கு நன்றாகவே தெரியும் என்பதால் தான் மீரா மிதுனை இந்த அளவிற்கு வெறுக்கிறார் அபிராமி. இருப்பினும் இவர்கள் இருவருக்கும் தனிப்பட்ட முறையில் என்ன பிரச்சனை என்று தான் புரியவில்லை.