நடிகர் நடிகைகள் தற்கொலை செய்துகொள்வது காலம் காலமாக நடந்த வருகிறது. அவர்களை திரை பிரபலமாக பாரக்காமல், ஒரு மனிதனாக பார்த்தால் அவர்களும் இரு சாதாரண மனிதர்கள் தான் என்பது புலப்படும்.
அதேபோல் சந்தேகத்திற்கு உள்ளான முறையில் மகாராஷ்டிராவை சேர்ந்த 22 வயது நடிகர் இறந்து போய் உள்ளார். மகராஷ்டிராவை சேர்ந்த நடிகர் பிரபுல். இவர் ஹிந்தில் பல சீரியல்களில் நடித்துள்ளார்.
இவர் நடித்துள்ள பல சீரியகள் தமிழில் டப்பிங் செய்யப்பட்டு ஒளிபரப்பாகிறது. நேற்று காலை 4.30 மணிக்கு ரயிலில் தொங்கியபடி வந்தபோது திடீரென கம்பியை பிடிக்க முடியாமல் ஓடும் ரயிலில் இருந்து கீழே விழுந்தது இறந்துள்ளார் என போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.
ஆனால், ரயிலில் தொங்கியபடி செல்லும் பழக்கம் அவருக்கு இல்லை என்பதால், இவரது மரணத்தில் சந்தேகம் வலுத்துள்ளது. தற்போது போலீசார் இதனை விசாரித்து வருகின்றனர்.