கவுண்டமணி, செந்தில் என்று பல்வேறு படங்களில் நடித்த நடிகரின் தற்போதைய நிலை – அவரின் எமோஷனல் பேட்டி.

0
719
chitrakuptha
- Advertisement -

குடித்துவிட்டு எல்லாம் பயங்கரமாக கலாய்ப்பார்கள் என்று நடிகர் சித்திரகுப்தா அளித்திருக்கும் பேட்டி தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் குணச்சித்திர வேடங்களில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகர் சித்திரகுப்தா. இவர் பார்ப்பதற்கு உயரம் குறைவானவர். இருந்தாலும், இவரின் விடா முயற்சியினால் சினிமாவில் நுழைந்தார். மேலும், இவர் தமிழ் சினிமா உலகில் உள்ள பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்திருக்கிறார்.

-விளம்பரம்-

இவர் படங்களில் மட்டும் இல்லாமல் சீரியலிலும் நடித்து இருக்கிறார். தற்போது இவர் சில படங்களில் நடித்து வருகிறார். அதேபோல் இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் கண்ணே கலைமானே என்ற சீரியலும் நடிக்கிறார். இந்த நிலையில் சமீபத்தில் பிரபல சேனல் ஒன்றிற்கு நடிகர் சித்ரகுப்தா பேட்டி ஒன்று அளித்து இருக்கிறார். அதில் அவர் தன்னுடைய திரைப்பயணம் குறித்து கூறியிருந்தது, நான் சினிமா துறையில்
மிகவும் கஷ்டப்பட்டு தான் நுழைந்தேன்.

- Advertisement -

பல கம்பெனிகளில் ஏறி இறங்கி இருக்கிறேன். நான் முதன் முதலில் சினிமாவில் நடிக்க ஆட்கள் தேவை என்று ஒரு விளம்பரம் வந்திருந்தது. அதை பார்த்து தான் நான் சென்றேன். முதன்முதலாக எனக்கு இயக்குனர் மாணிக்கவாசகம் சார் படத்தில் தான் வாய்ப்பு கிடைத்தது. அவர் தான் என்னுடைய குரு. அதற்கு பிறகு தான் பாக்கியராஜ் சார் நடித்த பவுனு பவுன் என்ற படத்தில் வேடம் கிடைத்தது. அப்படியே தொடர்ந்து படங்களில் நடித்து வந்தேன். படங்களில் மட்டும் இல்லாமல் சீரியலில் நடித்திருக்கிறேன்.

நான் சூலம், மை டியர் பூதம், நாகவல்லி, சின்ன பாப்பா பெரிய பாப்பா போன்ற சீரியல்களிலும் நடித்திருக்கிறேன். அதேபோல் விஜய் டிவியில் வேலைக்காரன் என்ற சீரியலில் நடித்தேன். தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் கண்ணே கலைமானே என்ற தொடரிலும் நடித்து வருகிறேன். சின்ன திரையில் மட்டும் இல்லாமல் வெள்ளி திரைகளிலும் சில படங்களில் நடிக்கிறேன். அந்த வகையில் தற்போது நான் இரண்டு படங்களில் கமிட் ஆகிறேன். ஒன்று, பூ போன்ற காதல். அதேபோல் இன்னொரு படத்திலும் நடித்து வருகிறேன். இரண்டு படங்களுமே புதுமுக நடிகர்கள் தான்.

-விளம்பரம்-

மேலும், நான் எம்ஜிஆர், சிவாஜி, ரஜினி, கமல் ஆகியோர்களின் படங்களை பார்த்து தான் சினிமாவில் நடிக்க ஆசை வந்தது. அதற்கு பிறகு தான் பட வாய்ப்புகள் தேடி அலைந்தேன். ஆரம்பத்தில் சினிமாவில் நடிக்கும் போது செம ஜாலியாக இருந்தது. படங்களில் நடித்த பெரிய நடிகர்கள் எல்லாம் பாராட்டுவார்கள். அதேபோல் மக்களும் பாராட்டினார்கள். ஆனால், சில பேர் கலாய்ப்பார்கள். அதிலும் சிலர், குடித்துவிட்டு வந்து பயங்கரமாக களைப்பார்கள். நான் அதை எல்லாம் கண்டுகொள்ளாமல் சென்று விடுவேன். சினிமாவில் நான் நிறைய கஷ்டங்களை பார்த்தேன்.

நானும் கிங்காகும் 1991ல் தான் சினிமாவுக்குள் வந்தோம். அப்படியே இரண்டு பேரும் நல்ல நண்பர்கள். நான் அட்லி உடன் தெறி படத்தில் பயணித்து இருக்கிறேன். அதேபோல் எந்திரன் படத்தில் ரஜினி சார் உடன் நடித்திருக்கிறேன். இப்படி பல பிரபலங்களுடன் நடித்தேன். ஆனால், பெரிதாக வாய்ப்புகள் தான் அமையவில்லை. வாய்ப்புகள் கிடைக்கும் வரை காத்துக் கொண்டிருக்கிறேன். வாய்ப்புகள் வரும் வரை நான் கல்யாணம், கச்சேரி நிகழ்ச்சிகளில் நடனம் ஆடிக் கொண்டு இருக்கிறேன் என்று சந்தோஷமாக கூறியிருந்தார்.

Advertisement