தமிழ் சினிமாவில் நடிகர் மாதவன் வித்யாசமான கதை காலங்களை தேர்ந்தெடுத்து அதில் தனது அற்பிதமான நடிப்பை வெளிப்படுத்தும் ஒரு அற்புதமான நடிகர். தமிழ் சினிமாவில் நுழைந்த போது சாக்லட் பாய் என்ற முத்திரையுடன் வந்த மாதவன் தற்போது ஒரு சிறந்த நடிகராக விளங்கி வருகிறார்.
சமீபத்தில் நடிகர் மாதவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டு ‘Rocketry’ என்று அதில் குறிப்பிட்டிருந்தார். பலரும் அந்த வீடியோவில் நடிகர் மாதவன் எதை பற்றி பேசுகிறார் என்று குழப்பத்தில் இருந்து வந்தனர்.
தற்போது வெளியான தகவலின்படி நடிகர் மாதவன் தற்போது இந்திய விஞ்ஞானி நம்பி நாராயணனின் வாழக்கையை மையமாக வைத்து ஒரு புதிய படத்தின் நடித்து வருகிறார் அதற்கான ப்ரோமோஷன் தான் இந்த வீடியோ என்று தெரியவந்துள்ளது.
நம்பி நாராயணன்:
நம்பி நாராயனனின் திருநெல்வேலியில் பிறந்து கேரளாவில் வளர்ந்தவர்.இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் முக்கிய பொறுப்பில் இருந்த நம்பி நாராயனனின் வாழ்க்கையில் நடந்த துரோகங்களையும, மறைக்கபட்ட உண்மைகளையும் இந்த படத்தின் மூலம் உலகிற்கு வெளிக்கொண்டு வர விருக்கின்றனர்.