தமிழ் சினிமாவின் புதுமைக் கலை மன்னன் என அழைக்கப்படும் நகைச்சுவை நாயகர், திரைப்பட இயக்குனர் ஆர். பாண்டியராஜன் அவர்கள், தலைநகர் சென்னையில் 1959-ஆம் வருடம் அக்டோபர் மாதம் 2-ஆம் தேதி பிறந்தார். சினிமாவிற்கு தோற்றம் முக்கியம் இல்லை என்பதை நிரூபித்த ஒரு கலைஞர்.
ஆரம்ப காலத்தில் நடிகர் பாண்டியராஜன் சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் தான் வந்தார். ஆனால், அவரது உயரம் காரணமாக அந்த வாய்ப்பு நிராகரிக்கபட்டது. இதனால் பிரபல இயக்குனர் பாக்யராஜிடம் உதவி இயக்குனராக சேர்ந்து சில நாட்கள் பணியாற்றி வந்தார்.
இதையும் படியுங்க : கடற்கரையில் ஐ பி எல் தொகுப்பாளினியுடன் உல்லாசமாக இருந்த நடிகர்.! வெளியான புகைப்படங்கள்.!
பின்பு ஒரு சில படங்களில் துணை கதாபாத்திரத்தில் நடித்து வந்த இவர்,
பின்னர் 1985-ஆம் ஆண்டு வெளிவந்த பிரபு, ரேவதி நடித்த ‘கன்னிராசி’ படம் மூலம் வெற்றிப்பட கதை, திரைக்கதை, வசன இயக்குனராய் தமிழகத்துக்கு அறிமுகமானார். அதன் பின்னர் கன்னி ராசி படத்தில் கதாநாயகனாக அறிமுகமானார்.
அதன் பின்னர் பல்வேறு திரைபடங்களில் நடித்து வந்த பாண்டியராஜன் இறுதியாக பஞ்சுமிட்டாய் படத்தில் நடித்திருந்தார். தற்போது நட்பே துணை படத்திலும் நடித்து வருகிறார். சமீபத்தில் இவரது சில புகைப்படங்கள் வெளியாகி இருந்தன அதில் மிகவும் சோர்வுடன் உடல் நல குறைவு ஏற்பட்டது போல தோற்றமளிக்கிறார் பாண்டியராஜன்.