நந்தாவில் அம்மா, சேதுவில் பிச்சைக்காரி, ஆனா இப்பவும் – முதல் முறையாக மனம் திறந்த நந்தா பட நடிகை. இப்போ எப்படி இருக்காங்க பாருங்க.

0
1586
rajashree
- Advertisement -

சூர்யா குறித்து நடிகை ராஜஸ்ரீ அளித்து இருக்கும் பேட்டி தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான நடிகையாக திகழ்ந்தவர் ராஜஸ்ரீ. இவர் பாரதிராஜாவின் இயக்கத்தில் வெளிவந்த கருத்தம்மா என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமா உலகிற்கு அறிமுகம் ஆகியிருந்தார். இந்த படத்திலேயே இவர் மக்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தார். அதனைத் தொடர்ந்து இவர் சேது, நந்தா, ரன், மனசெல்லாம், வேட்டையாடு விளையாடு போன்ற பல படங்களில் நடித்திருக்கிறார்.

-விளம்பரம்-

மேலும், இவர் தமிழில் மட்டுமில்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என பிற மொழி படங்களிலும் நடித்து இருக்கிறார். பின் சினிமாவில் வாய்ப்புகள் குறையத் தொடங்கிய உடன் இவர் சின்னத்திரை தொடர்களிலும் நடித்து இருக்கிறார். அதிலும் இவர் தமிழ் சீரியல்களில் மட்டுமில்லாமல் தெலுங்கு சீரியல்களிலும் கூட நடித்திருக்கிறார். தற்போது இவர் ஜீ தமிழில் அமுதாவும் அன்னலட்சுமியும் என்ற தொடரில் அன்னலட்சுமி என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

- Advertisement -

அமுதாவும் அன்னலட்சுமியும் தொடர்:

இந்த தொடரின் கதாநாயகியாக கண்மணி நடிக்கிறார். இவர் ஏற்கனவே விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாரதி கண்ணம்மா தொடரில் அஞ்சலி என்ற கதாபாத்திரத்தில் நடித்து விலகி விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், அமுதாவும் அன்னலட்சுமியும் சீரியலின் ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. இந்நிலையில் இது தொடர்பாக சமீபத்தில் நடிகை ராஜஸ்ரீ இடம் பேட்டி எடுக்கப்பட்டது.

ராஜஸ்ரீ அளித்த பேட்டி:

அதில் அவர் கூறி இருந்தது, பாரதிராஜாவின் கருத்தம்மா படத்தின் மூலம் எனக்கு சினிமா உலகில் நல்ல அங்கீகாரம் கிடைத்தது. அதன் பிறகு பல மொழி படங்களில் நடித்திருக்கிறேன். இடையில் சில காலம் சினிமா வேண்டாம் என்று தான் விலகி இருந்தேன். பிறகு மீண்டும் சீரியலில் நடிக்க சொல்லி கேட்டு இருந்தார்கள். நானும் முடியாது என்று சொல்லியும் மறுத்து விட்டேன்.

-விளம்பரம்-

அமுதாவும் அன்னலட்சுமியும் தொடர் குறித்து சொன்னது:

ஆனால், அமுதாவும் அன்னலட்சுமியும் தொடருக்கு நீங்கள் தான் சரியாக இருப்பீர்கள் என்று சொன்னதனால் நான் நடித்து வருகிறேன். ஏன்னா, இந்த சீரியலுக்கு அப்பாவி முகம் வேண்டுமாம். சேது படத்தில் பிச்சைக்காரி கதாபாத்திரத்தில் நடித்ததற்கு பலரும் பாராட்டி இருந்தார்கள். அதற்கு பின் நந்தா படத்தில் சூர்யாவுடன் நடித்த அனுபவத்தை மறக்க முடியாது. உண்மைய சொல்ல வேண்டுமென்றால், சூர்யா என்னைவிட ஐந்து, ஆறு வருடம் பெரியவர்.

சூர்யா குறித்து ராஜஸ்ரீ சொன்னது:

இது யாருக்குமே தெரியாது. ஆனால், நான் அவருக்கு அம்மாவாக நடித்து இருக்கிறேன். அவரை நான் அண்ணா என்று கூப்பிட்டால் போதும் தயவு செய்து என்னை அண்ணா என்று கூப்பிடாதீர்கள் என்று கோபப்படுவார். இப்பவும் நான், சூர்யா, பாலா சார் எல்லோருமே நல்ல நண்பர்கள் தான். பேசிக் கொண்டுதான் இருக்கிறோம். இனிமேல் என்னை வெள்ளித்திரையிலும் பார்க்கலாம். வாய்ப்புகள் வந்து கொண்டுதான் இருக்கின்றது. நல்ல கதாபாத்திரத்தை தேர்ந்தெடுத்து நடிப்பேன் என்று கூறியிருக்கிறார்.

Advertisement