சில நாட்களுக்கு முன்னர் அன்னையர் தினத்தன்று பல்வேறு பிரபலங்களும் தங்களது அன்னையுடன் இருக்கு சிறு வயது புகைப்படத்தை வெளியிட்டு, தங்கள் அம்மாவின் மீதுள்ள அன்பை வெளிப்படுத்தினர். மேலும் அந்த சாக்கில் ரசிகர்களுக்கு பிரபலங்களின் குழந்தை வயது புகைப்படங்களை காணும் வாய்ப்பும் கிடைத்தது.
And that’s where I get it from….. atleast half of it ?❤️ ??#happymothersday #NoFilter #Inlife ??♀️ pic.twitter.com/AIQzzBhF91
— taapsee pannu (@taapsee) May 13, 2018
இந்நிலையில் நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான “ஆடுகளம் ” என்ற படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை டாப்ஸி. தந்து சமூக வலைதளத்தில் தனது சிறு வயது புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். மும்பையில் பிறந்த இவர் சினிமாவில் முதல் முதலில் அறிமுகமானது 2010 ஆம் ஆண்டு வெளியான “ஜும்மாண்டி நாடம் ” என்ற படத்தில் தான்.
ஆடுகளம் படத்திற்கு பின்னர் தமிழ், தெலுங்கு, இந்தி என பல மொழி படங்களில் நடித்துவருகிறார். ஆனால் இதுவரை தமிழில் எந்த ஒரு முன்னணி ஹீரோக்களுடனும் நடிக்கவில்லை. சில நாட்களுக்கு முன்னர் சென்ற அன்னையர் தினத்தன்று நடிகை டாப்ஸி, தந்து அன்னைக்கு வாழ்த்து கூறியதுடன் தனது ட்விட்டர் பக்கத்தில் தான் சிறு வயதில் எடுத்துக் கொண்ட புகைப்படம் ஒன்றையும் பதிவிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் நீங்கள் தானா இது என்று மகிழ்ச்சியில் கமெண்ட் செய்துள்ளனர்.
— Bipin Bihari (@bipinr60) May 13, 2018
தமிழில் 2015 ஆம் ஆண்டு வெளியான “வை ராஜா வை” என்ற படத்திற்கு பிறகு தமிழில் பட வாய்ப்புகள் இல்லாததால் மீண்டும் தனது வண்டியை பாலிவுட்டிற்கு திருப்பி விட்டார் டாப்ஸி. அங்கே அம்மணிக்கு ஏகப்பட்ட பட வாய்ப்புகள் காத்துக் கொண்டிருந்தது, தற்போது இந்தியில் மட்டும் 4 பட வாய்ப்புகளை கையில் வைத்துள்ளார் நடிகை டாப்ஸி.