தல அஜித் என்னதான் அனைத்து படங்களிலும் மெனக்கெட்டு கடின உழைப்பைக் கொடுத்து நடித்தாலும், படம் நடித்தால் அதனோடு சரி அடுத்த கட்ட பட ப்ரோமொசன் மற்றும் படம் பற்றிய நிகழ்ச்சி மற்றும் விளம்பரங்களில் பொதுவாக கலந்து கொள்ள மாட்டார். அது ஏனென்றால் பழைய பிரச்சனை.
தற்போது அதனை எல்லாம் தல மறந்துவிட்டதாக தெரிகிறது. ஆம், அடுத்து மலேசியாவில் நடிகர் சங்கம் சார்பில் ஒரு பிரம்மாண்ட கலை நிகழ்ச்சி நடக்கவுள்ளது இதில் தமிழ் நடிகர் நடிகைகள் பலர் கலந்து கொள்கின்றனர். குறிப்பாக ரஜினி மற்றும் கமல் ஆகியோர் கலை நிகழ்ச்சியில் கலந்து கொள்ள சம்மதம் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: விஜய்யின் திறமை ஹாலிவுட்டில் தெரிய நேரம் வந்துவிட்டது – பிரபல தொகுப்பாளி ?
மேலும், விஜய் மற்றும் அஜித் ஆகியோரிடமும் பேச்சு வார்த்தை நடத்தி வருவதாக கூறியுள்ளனர். தல அஜித்திடம் இது பற்றி கேட்ட போது, எப்போதும் இது போன்ற நிகழ்ச்சிக்கு தடாலடியாக ‘நோ’ சொல்லும் தல, தற்போது ‘சொல்றேன்’ எனக் கூறியுள்ளார். இதனால் தல மனம் மாறியுள்ளதாக ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.