முதல் படத்திற்க்கு பின் தன் படங்களுக்கு இசை வெளியிட்டு விழாவே வைக்காத அருள்நிதி – அதுக்கு காரணம் கலைஞர் தானாம்.

0
598
arulnidhi
- Advertisement -

இதுவரை இசை வெளியீட்டு விழா நடத்தாதற்கு இது தான் காரணம் என்று அருள்நிதி அளித்து இருக்கும் பேட்டி சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் பிரபலமான நடிகராக திகழ்பவர் அருள்நிதி. இவர் வேற யாரும் இல்லைங்கை,முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பேரனும், மு. க. தமிழரசுவின் மகனும் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் இயக்குனர் பாண்டியராஜன் இயக்கத்தில் 2010 ஆம் ஆண்டு வெளிவந்த வம்சம் என்ற திரைப்படத்தின் மூலம் தான் கதாநாயகனாக தமிழ் சினிமா உலகிற்கு அறிமுகமாகி இருந்தார்.

-விளம்பரம்-

அதனைத் தொடர்ந்து இவர் உதயன், மௌனகுரு, ஒரு கன்னியும் மூன்று களவாணிகளும், இரவுக்கு ஆயிரம் கண்கள் போன்ற பல படங்களில் நடித்திருக்கிறார். ஆனால், சமீப காலமாக இவருடைய சில படங்கள் தோல்வியை சந்தித்து இருக்கிறது. இருந்தாலும், இவர் தன்னுடைய விடா முயற்சியினால் படங்களில் நடித்து வருகிறார். சமீப காலமாக இவர் கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் அருள்நிதி நடிப்பில் வெளிவந்துள்ள படம் d-block.

- Advertisement -

இதையும் பாருங்க : நீ வந்து விளக்கு பிடிச்சயா, செருப்பு பிஞ்சிடும் – நடு ரோட்டில் பயில்வானை வெளுத்து வாங்கிய இரவின் நிழல் பட நடிகை.

d-block படம்:

இந்த படத்தை விஜயகுமார் ராஜேந்திரன் இயக்கியிருக்கிறார். எம்என்எம் பிலிம்ஸ் இந்த படத்தை தயாரித்து இருக்கிறது. இந்த படத்தில் அருள்நிதி, அவந்திகா உட்பட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். இந்த படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. இதை தொடர்ந்து டிமாண்டி காலனி படத்தின் இரண்டாம் பாகம் தற்போது உருவாக இருப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியாகி இருந்தது.

-விளம்பரம்-

டிமாண்டி காலனி 2:

இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் 2015 ஆம் ஆண்டு வெளியாகியிருந்த படம் டிமாண்டி காலனி. இந்த படம் முழுக்க முழுக்க திகில் திரைப்படமாக உருவாகி இருந்தது. இந்த படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனத்தை பெற்றிருந்தது. தற்போது இப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகவுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த நிலையில் சமீபத்தில் நடிகர் அருள்நிதி அவர்கள் பேட்டி ஒன்றை அளித்திருந்தார்.

அருள்நிதி அளித்த பேட்டி:

அதில் அவரிடம் உங்கள் படத்திற்கு ஏன் இசை வெளியீட்டு விழா வைக்கவில்லை? என்று கேள்வி கேட்டிருந்தார்கள். அதற்கு அருள்நிதி கூறியிருந்தது, என்னுடைய முதல் படம் வம்சம். அந்த படத்திற்கு இசை வெளியீட்டு விழா வைத்தோம். அப்போது என்னுடைய தாத்தா கலைஞர் கருணாநிதி உட்பட திரைப்பிரபலங்கள், குடும்பத்தார் எல்லோரும் வந்து இருந்தார்கள். என் வாழ்க்கையில் அதை நான் மறக்கவே முடியாது. ரொம்ப அழகான தருணம் அது. அந்த படத்தின் பிரிவியூ போட்டு என்னுடைய தாத்தாவிடம் காண்பித்தேன்.

இசை வெளியீட்டு விழா வைக்காத காரணம்:

என்னுடைய மொத்த குடும்பமும் பார்த்து விட்டு என்ன சொல்வார்கள் என்ற பயத்திலேயே இருந்தேன். அது என்னுடைய வாழ்க்கையில் மறக்க முடியாத ஒன்றாக இருந்தது. அந்த முமெண்ட் என்னுடைய வாழ்க்கையில் என்றென்றும் இருக்க வேண்டும் என்பதற்காக தான் இசை வெளியீட்டு விழாவை ஏற்பாடு செய்யவில்லை. அதனால் என்னுடைய படங்களுக்கு இசை வெளியீட்டு விழா இல்லை. அது மட்டுமில்லாமல் பெரும்பாலும் நான் நடித்த படங்களில் பெரிய அளவு பாடல்கள் இருக்காது. எல்லாம் கதையோடு ஒன்றிப் போய் தான் இருக்கும் என்று கூறியிருந்தார்.

Advertisement