‘எல்லா பெண்ணுக்குமே அட்லி போல ஒரு கணவர் வேண்டும்’ – தனது கணவர் குறித்து மனமுறுகிய அட்லீ.

0
204
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் நுழைந்த குறுகிய காலத்திலேயே மிகப் பிரபலமான இயக்குனர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் அட்லீ. இவர் ராஜா ராணி படத்தின் மூலம் தான் சினிமா உலகில் இயக்குனராக அறிமுகமானார். பின் இவர் தளபதி விஜய்யை வைத்து தெறி, மெர்சல், பிகில் ஆகிய மூன்று சூப்பர் ஹிட் படங்களை கொடுத்தார். பிகில் படத்தைத் தொடர்ந்து அட்லீ அவர்கள் பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கானை வைத்து ஜவான் படத்தை இயக்கி இருந்தார். இந்த படத்தில் நயன்தாரா, ப்ரியாமணி, யோகிபாபு, இந்த சேதுபதி உட்பட பலர் நடித்திருக்கிறார்கள்.

-விளம்பரம்-

பல எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் சமீபத்தில் வெளியான இந்த படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் இந்திய அளவில் 1100 கோடிக்கு மேல் வசூல் செய்து இருக்கிறது. இப்படி இவர் இயக்கிய ஐந்தே படங்களிலேயே மிகப்பெரிய அளவில் வளர்ச்சி பெற்றிருக்கிறார். இதற்கு காரணம் இவருக்கு உறுதுணையாக இருந்த அவருடைய காதல் மனைவி பிரியா தான் என்று கூறப்படுகிறது. அட்லீ அவர்கள் பிரபல சின்னத்திரை நடிகையான ப்ரியாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

- Advertisement -

பிரியா- அட்லீ திருமணம்:

ப்ரியா அவர்கள் விஜய் டிவி கனா காணும் காலங்கள் சீரியல் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர். அதனை தொடர்ந்து இவர் பல சீரியல்களில் நடித்து இருக்கிறார். பின் இவர் வெள்ளித்திரையிலும் சில படங்களில் நடித்து இருக்கிறார். கடந்த 2014 ஆம் ஆண்டு பிரியா, அட்லீயை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின் பிரியா நடிப்பதை நிறுத்தி விட்டார். ஆனால், ப்ரியா அட்லீ எப்போதும் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருப்பார்.

ப்ரியா அளித்த பேட்டி:

மேலும், அட்லீ-பிரியா இருவருக்கும் மீர் என்ற மகன் இருக்கிறார். அட்லியின் படங்களுக்கும், அவருடைய படம் குறித்த விளம்பரத்திற்கும் தவறாமல் பிரியா கலந்து கொள்வார். இந்த நிலையில் சமீபத்தில் அளித்த ஒரு பேட்டியில் பிரியா, நான் அட்லியின் வெற்றிக்கு காரணமாக இருக்கிறேனா? என்று எனக்கு தெரியவில்லை. என்னுடைய வாழ்க்கையில் என்னை மிகவும் உத்வேகப்படுத்தியவர்கள் இரண்டு பேர். ஒன்று என்னுடைய அம்மா, என்னுடைய பாட்டி. அவர்கள் ரெண்டு பேரும் இல்லையென்றால் நான் அட்லிக்கு இவ்வளவு உறுதுணையாக இருந்திருப்பேனா என்று எனக்கு தெரியவில்லை.

-விளம்பரம்-

குடும்பம் குறித்து சொன்னது:

அவர்கள் இரண்டு பேருமே எனக்கு மிகப்பெரிய உத்வேகத்தை அளிக்கிறார்கள். அட்லீ எனக்கு ஒரு நல்ல கணவர் என்பதை தாண்டி நல்ல நண்பர். இப்போது வரை அட்லீ எனக்கு ஒரு மிகப்பெரிய முதுகெலும்பாக தான் இருக்கிறார். என்னை ஊக்கப்படுத்தும் ஆளாகவும் அட்லீ இருக்கிறார். இப்போது எங்களுடைய வாழ்க்கைக்குள் எங்களுடைய மகன் மீர் வந்திருக்கிறார். அவர் எங்களுக்கு ரொம்பவே ஊக்கத்தை கொடுக்கிறார். நாங்கள் எதிர்காலத்தில் நிறைய மகிழ்ச்சியான தருணங்களை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறோம்.

அட்லீ குறித்து சொன்னது:

அதோடு முதலில் அட்லீ அவர்களுடைய அம்மா, அப்பாவிற்கு நல்ல மகன். என்னுடைய பெற்றோருக்கும் அவர் ஒரு நல்ல மருமகனாக இருக்கிறார். கணவராக கணவராக அவர் எப்படி நடந்து கொள்கிறார் என்பதை பற்றி சொல்ல வேண்டாம். அவர் மிக சிறந்த கணவராக நடந்து கொள்கிறார். எல்லா பெண்ணுக்குமே அட்லி போல ஒரு கணவர் வேண்டும் என்ற எண்ணம் வரும். அவர் இப்போது மீருக்கு ஒரு மிகச்சிறந்த அப்பாவாகவும் இருக்கிறார். அவரிடம் இருந்து இதை நான் எதிர்பார்க்கவே இல்லை. அவனுக்கு தேவையான எல்லாவற்றையும் அவர் கொடுக்கிறார். நான் அட்லீக்கு அவர் அம்மா இடத்தில் இருந்து எல்லாம் செய்திருக்கிறேனா? என்று எனக்கு தெரியவில்லை. உண்மையில் அந்த இடத்தில் இருப்பது அவருடைய அம்மா தான் என்று எமோஷனலாக பேசியிருக்கிறார்.

Advertisement