வைரமுத்துவால 17 பெண்கள் பாதிக்கப்பட்டு இருக்காங்க – சின்மயியை தொடர்ந்து மேலும் ஒரு பாடகி பகிர் குற்றச்சாட்டு

0
1720
Chinmayi
- Advertisement -

வைரமுத்து மீதான பாலியல் குற்றச்சாட்டிற்கு பாடகி புவனா ஷேஷன் அளித்திருக்கும் பேட்டி தற்போது இணையத்தில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. தமிழ் சினிமா உலகில் புகழ்பெற்ற திரைப்பட பாடலாசிரியராக திகழ்பவர் கவிஞர் வைரமுத்து. நிழல்கள் எனும் திரைப்படத்தில் பொன்மாலைப்பொழுது என்ற பாடலின் மூலம் தான் இவர் சினிமா உலகில் அறிமுகமாகி இருந்தார். அதனைத் தொடர்ந்து இவர் பல படங்களில் பாடல்களை எழுதி இருக்கிறார். மேலும், இவர் இதுவரை 7000 பாடல்களுக்கு மேல் எழுதி இருக்கிறார்.

-விளம்பரம்-

இப்படி புகழின் உச்சத்தில் இருந்த கவிஞர் வைரமுத்து மீது பின்னணி பாடகி சின்மயி பாலியல் குற்றம் சாட்டி இருந்தது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. இதைத்தொடர்ந்து பல பெண்களும் கவிஞர் வைரமுத்து மீது செக்ஸ் புகார்களை அளித்து இருந்தார்கள். பிறகு வைரமுத்து குறித்து பல விமர்சனங்களை சின்மயி எழுப்பி இருந்தார். இருந்தாலும் பலர் வைரமுத்துக்கு ஆதரவாக குரல் கொடுத்து இருந்தார்கள். ஆனால், பாடகி சின்மயி கூறும் குற்றச்சாட்டில் உண்மை இருக்கிறதா? என்று சிலர் சந்தேகித்தும் வருகின்றனர்.

- Advertisement -

வைரமுத்து-சின்மயி சர்ச்சை:

அதுமட்டும் இல்லாமல் கவிஞர் வைரமுத்து எது செய்தாலும் அவரை குறித்து சின்மயி விமர்சித்துப் பேசி வருகிறார். அதோடு வைரமுத்து மீது பல பெண்கள் பாலியல் புகார் அளித்திருந்தாலும் அவர் மீது எந்தவித நடவடிக்கை எடுக்காமல் இருப்பதற்கு காரணம் இவர் மு க ஸ்டாலினுக்கு நெருக்கமானவராக இருக்கிறார் என்று கூறப்படுகிறது. இப்படி ஒரு நிலையில் சமீபத்தில் கள்ளிக்காட்டு இதிகாசம் புதினத்துக்காக சாகித்ய அகாடமி விருது பெற்ற திரைப்பட பாடலாசிரியர் வைரமுத்துக்கு ‘கனவு இல்லம்’ திட்டத்தின் கீழ் வீடு வழங்கப்படும் என தமிழக அரசு வீடு இருக்கிறது.

வைரமுத்துவின் கனவு இல்லம்:

மேலும், தமிழக அரசின் இந்த அறிவிப்புக்கு சிலர் ஆதரவு கொடுத்தாலும், சிலர் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். இந்த அறிவிப்பு குறித்து சிலர் எதிர்ப்பு தெரிவித்து கடுமையாக விமர்சித்து வருகிறார்கள். அந்த வகையில் இதற்கு சில தினங்களுக்கு முன்பு பாடகி சின்மயி தனது டீவ்ட்டர் பக்கத்தில் வைரமுத்துவிற்கு எதிராக கருத்து பதிவிட்டிருந்தார். அது மட்டும் இல்லாமல் முதல்வர் ஸ்டாலின் மற்றும் திமுக எம்பி கனிமொழி ஆகியோரிடம் கோரிக்கையும் வைத்திருந்தார்.

-விளம்பரம்-

பாடகி புவனா சேஷன் வீடியோ:

இந்த நிலையில் இது தொடர்பாக பாடகி புவனா சேஷன் நேஷனல் மீடியா ஒன்றில் பேட்டி ஒன்று அளித்து இருக்கிறார். அதில் அவர், 17 பெண்கள் வைரமுத்துவிற்கு எதிராக பாலியல் குற்றச்சாட்டை முன் வைத்திருக்கின்றனர். தைரியமாக தங்களுடைய பெயரையும் முகத்தையும் வெளி உலகத்திற்கு சொல்லி இருக்கின்றார்கள். பாலியல் வன் கொடுமை சூழ்நிலையில் இருந்து வெளியே வருவது என்பது ரொம்ப கடினமான ஒன்று. என்னுடைய கதையை நான் பகிர்வதற்கான காரணம் இளம் பாடகர்களின் கனவுகள் நசுக்கப்படுவதை நான் விரும்பவில்லை.

பாலியல் குற்றச்சாட்டு குறித்து சொன்னது:

எனக்கு நேர்ந்ததைப் போல பிற பெண்களுக்கும் நடக்க நான் விரும்பவில்லை. தொடர்ந்து வைரமுத்துவின் மீது குறித்து குற்றச்சாட்டுகளை வைத்திருக்கிறார். வைரமுத்து மீதான குற்றச்சாட்டுகளை சின்மயி முன் வைக்கும்போது அவரை நெட்டிசன்கள் பலரும் திட்டி விமர்சித்திருக்கிறார்கள். சின்மயின் தைரியம் என்னை வியக்க வைக்கிறது. இது மிகவும் கடினமான ஒன்று தான். இந்த சம்பவத்தில் பல பெண்கள் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். ஆனால், இது குறித்தான விசாரணை இன்னும் நடத்தப்படவில்லை என்பது தான் வேதனை அளிக்கிறது என்று கூறியிருக்கிறார்.

Advertisement