விஜய் தொலைக்காட்சியில் கடந்த அக்டோபர் 4ம் தேதி தொடங்கப்பட்ட பிக் பாஸ் நிகழ்ச்சியில் நான்காவது சீசன் வெற்றிகரமாக இரண்டு வார்த்தை நிறைவடைய இருக்கிறது. இந்த சீசனில் ரசிகர்களுக்கு பரிட்சயமான மற்றும் பரிட்சயம் இல்லாத பல்வேறு போட்டியாளர்கள் கலந்து கொண்டிருக்கிறார்கள். இந்த சீசனில் ரியோ ராஜ், ஜித்தன் ரமே,ஷ் ரம்யா பாண்டியன், அறந்தாங்கி நிஷா, ஷிவானி நாராயணன், சனம் ஷெட்டி, சம்யுக்தா, சுரேஷ் சக்ரவர்த்தி, பாலாஜி முருகதாஸ் ,வேல்முருகன், அனிதா சம்பத், கேப்ரில்லா, ஆஜித் என்று 16 போட்டியாளர்கள் கலந்து கொண்டு இருக்கின்றனர். இதில் கடந்த 2 தினங்களுக்கு முன்பாக பிரபல தொகுப்பாளினியான அர்ச்சனா வைல்டு கார்டு போட்டியாளராக பங்கு பெற்று இருந்தார்.
பொதுவாக பிக்பாஸ் நிகழ்ச்சி என்றாலே அதில் கலந்துகொள்ளும் போட்டியாளர்களுக்கு பிரபலத்திற்கு ஏற்றார்போல சம்பளம் வழங்கப்படும். அந்த வகையில் இம்முறை போட்டியாளராக கலந்து கொண்டுள்ள பிரபலங்களுக்கும் நிர்ணயிக்கப்பட்ட சம்பளத்தில் விவரம்தற்போது வெளியாகி இருக்கிறது. அதில் பிக் பாஸ் 4-ல் கலந்து கொண்டள்ள போட்டியாளர்களுக்கு அதிகபட்சமாக ஒரு நாளைக்கு இரண்டு லட்சம் ரூபாயும் குறைந்தபட்சமாக ஒரு நாளைக்கு ஒரு லட்சம் ரூபாயும் போட்டியாளர்கள் பெறுகின்றனர்.
அந்த வகையில் ஒரு நாளைக்கு இரண்டு லட்சம் சம்பளமாக பெரும்போட்டியாளர்கள் :
* ரியோ
* ஜித்தன் ரமேஷ்
* ரம்யா பாண்டியன்
* அறந்தாங்கி நிஷா
* ஷிவானி நாராயணன்
ஒரு நாளைக்கு ஒன்று முதல் ஒன்றரை லட்சம் வரை சம்பளம் பெறும் போட்டியாளர்கள் :
- சனம் ஷெட்டி
- சம்யுக்தா
- சுரேஷ் சக்கரவர்த்தி
- பாலாஜி
- வேல்முருகன்
ஒரு நாளைக்கு ஒரு லட்சம் சம்பளம் பெறும் போட்டியாளர்கள் - அனிதா
- கேப்ரில்லா
- சோம் சேகர்
- ஆஜீத்