பாலாஜி விட்ட கண்ணீரை பற்றி அசிங்கப்படுத்திய நித்யா..! என்ன சொன்னார் தெரியுமா.

0
919
balaji
- Advertisement -

பிக் பாஸ் வீட்டில் சில நாட்களுக்கு முன்னர் போட்டியாளர்களின் குடும்பத்திலிருந்து சில பரிசு பொருட்களும், கடிதமும் வந்து சேர்ந்தது. போட்டியாளர்கள் அனைவரும் தங்களது குடும்பத்தினர் எழுதிய கடித்தை கண்டு மிகவும் சந்தோசபட்டனர். ஆனால், பாலாஜி மட்டும் அவருடைய மனைவி நித்யா எழுதிய கடித்தை படித்து மிகவும் மனம் நொந்து போனார்.

-விளம்பரம்-

bigg-boss-tamil nithya

- Advertisement -

பாலாஜிக்கு, நித்யாவிற்கும் ஏற்பட்ட குடும்ப பிரச்சனைகளை நாம் அனைவரும் அறிவோம். ஆனால், சமீப காலமாக நித்யாவுடன் மீண்டும் சேர்ந்து வாழ நினைத்து வருகிறார் பாலாஜி. கடந்த வாரம் நாமினேஷனில் இருந்து தப்பித்த பாலாஜி கமலிடம் பேசுகையில், நான் வெற்றிபெறுவேனா இல்லையா என்பது எனக்கு முக்கியம் இல்லை வெளியே சென்றதும் என் மனைவி மற்றும் மகளுடன் சேர்ந்து வாழ வேண்டும்.அது தான் என்னுடைய ஆசை” என்று தெரிவித்திருந்தார்.

சமீபத்தில் பிக் பாஸ் வீட்டில் பிக் பாஸ் வீட்டில் நித்யா அனுப்பிய கடிதத்தை பார்த்து பாலாஜி மிகவும் கண்கலங்கி விட்டார். ஏனெனில் அந்த கடிதத்தில் ‘நான் உங்களுடன் கடைசி வரை ஒரு தோழியாக, தோழியாக மட்டும் இருப்பேன்’ என்று குறிப்பிட்டிருந்தார். இதனால் பாலாஜியுடன், நித்யா மீண்டும் மனைவியாக வாழ விரும்பவில்லை என்று தெளிவாக தெரிந்தது.

-விளம்பரம்-

அவரது கண்களில் கண்ணீர் சிந்துவதை 9 ஆண்டுகளுக்கு பிறகு பார்க்கிறேன். மிகவும் வருத்தமாக இருந்தது. தற்போதும் அவரை ஒரு நபராக பிடிக்கும்.அவரை மீண்டும் கணவராக ஏற்றுக்கொள்ள மனம் ஏற்றுக்கொள்ளவில்லை. வலிகளை மட்டுமே உணர முடியும். அதனை காலம் தான் சரி செய்யும். இன்னும் உங்களிடம் (பாலாஜி) இருந்து அழகான மாற்றங்கள் வரும் என்று நம்புகிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.

Advertisement