பிக் பாஸ் தனலட்சுமி குறித்து அவருடைய நண்பர்கள் அளித்திருக்கும் பேட்டி தற்போது சோசியல் மீடியாவில் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. டிக் டாக் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் தனலட்சுமி. சிறுவயதிலேயே நடிப்பதில் ஆர்வம் கொண்ட இவர் சில படங்களிலும், பறை இசை ஆல்பத்திலும் நடித்து இருக்கிறார். தற்போது இவர் பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இருக்கிறார். இந்த நிகழ்ச்சி தொடங்கி தற்போது ஐந்தாவது வாரம் சென்று கொண்டு இருக்கிறது.
இந்த நிகழ்ச்சியின் ஆரம்பத்தில் ஜிபி முத்து, அசீம், அசல், ராபர்ட், ராமசாமி, ஏடிகே, ஜனனி, அமுதவாணன், விஜே மஹேஸ்வரி, விஜே கதிரவன், ஆயிஷா, தனலட்சுமி, ரக்சிதா, மணிகண்டன், மெட்டி ஒலி சாந்தி, விக்ரமன், குயின்ஸி மற்றும் நிவாஷினி, சிவின் கணேசன் என 20 பேர் கலந்து கொண்டு இருக்கிறார்கள். இந்த முறை நிகழ்ச்சியை விறுவிறுப்பாக கொண்டு செல்ல பிக் பாஸ் பல மாற்றங்களை செய்து இருக்கிறார். பின் முதல் வாரத்திலேயே வைல்ட் கார்ட் எண்ட்ரியாக மைனா நந்தினி வந்து இருக்கிறார்.
பிக் பாஸ் சீசன் 6:
அடுத்து என்ன வழக்கம் போல் போட்டியாளர்கள் மத்தியில் கலவரம், சண்டைகளும் தொடங்கி நிகழ்ச்சி பரபரப்பாக சென்று கொண்டு இருக்கிறது. மேலும், இந்த நிகழ்ச்சியில் இருந்து இதுவரை ஜிபி முத்து, மெட்டிஒலி சாந்தி, அசல், ஷெரினா ஆகியோர் வெளியேறி இருக்கிறார்கள். மேலும், இதுவரை நடந்த ஏகப்பட்ட சர்ச்சைகளில் தனலட்சுமி தான் சிக்கி இருந்தார். இவர் பிக் பாஸில் கலந்துகொண்ட முதல் நாளில் இருந்தே பல சர்ச்சைகளில் சிக்கி இருக்கிறார்.
தனலட்சுமி குறித்த தகவல்:
இருந்தாலும், தனலட்சுமி பக்கம் நியாயம் இருக்கிறது என்று கமலும், மக்களும் அவருக்கு ஆதரவு கொடுத்திருந்தார்கள். வழக்கம்போல் தனலட்சுமி ஒவ்வொரு டாஸ்கிலும் எல்லா போட்டியாளர்களிடையுமே சர்ச்சையில் சிக்கியிருக்கிறார். அந்த வகையில் பேக்டரி டாஸ்க்கில் கூட மணிகண்டனுக்கும் தனலட்சுமிக்கும் பயங்கர சண்டை நடந்திருக்கிறது. இந்த நிலையில் தனலட்சுமி குறித்து அவருடைய நண்பர்கள் அளித்திருக்கும் பேட்டி சோசியல் மீடியாவில் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
தனலட்சுமி நண்பர்கள் அளித்த பேட்டி;
அதில் அவர்கள் கூறியிருப்பது, தனலட்சுமி இரண்டு படம் நடித்திருக்கிறார். ரெண்டு படமும் வெளியாகவில்லை. ஒரு படத்தின் புரமோசனுக்காக தான் அவள் அவார்டு ஈவண்ட்டை நடத்தி இருந்தார். அந்த நிகழ்ச்சியை நடத்தியதே அவள் தான். காசு இல்லாமையா அவள் அந்த நிகழ்ச்சியை நடத்துவாள். நிகழ்ச்சியில் அவள், நான் ரொம்ப கஷ்டப்பட்டு வந்தேன். நிகழ்ச்சியில் கலந்து கொள்ள கடன் வாங்கி துணி வாங்கினேன் என்று சொல்வதெல்லாம் பொய். அதையெல்லாம் அவள் சொல்லும்போது கேட்க நாராசமாக இருந்தது. அவளுக்கு அப்பா இருக்கிறார்.
தனலட்சுமி பற்றிய உண்மை:
அவர் மெக்கானிக்கல் ஷாப் நடத்தி இருக்கிறார். அவருடன் சேர்ந்து எல்லாம் அவள் வீடியோ போட்டு இருக்கிறார். அம்மா துணிக்கடையை நடத்தி வருகிறார். அது மட்டும் இல்லாமல் பைனான்சும் செய்கிறார். சொல்லப்போனால், அவள் நடித்த இரண்டு படத்தையும் எடுத்ததே அவர்கள் தான். அந்த அளவிற்கு பணம் இருக்கிறது. MlM விளம்பரம் மூலம் பல பேரை ஏமாற்றி சம்பாதித்து இருக்கிறார். செருப்பு மட்டுமே 12 ஆயிரத்துக்கு எடுப்பா. அவள் பணம் இல்லை என்று சொல்வதெல்லாம் பொய். நினைத்த நிமிடத்தில் எல்லாம் வாங்குவாள் என்று கூறி இருக்கிறார்கள்.