தனலட்சுமி சொன்ன அந்த ஒரு வார்த்தை தேம்பி தேம்பி அழுத Gp முத்து – தனலட்சுமியை எச்சரிக்கும் Gp முத்து ஆர்மி.

0
459
dhanalakshmi
- Advertisement -

டிக் டாக் தனலட்சுமியை ஜிபி முத்துவின் ஆர்மிகள் எச்சரிக்கும் பதிவு சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி விஜய் டிவியில் பிரம்மாண்டமாக தொடங்கி மூன்று நாட்கள் ஆகி விட்டது. இந்த முறை நிகழ்ச்சி ஒரே நேரத்தில் டிவியிலும், ஓடிடியிலும் ஒளிபரப்பாகி வருகிறது. வழக்கம் போல் கமல் தான் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி இருக்கிறார். இந்த நிகழ்ச்சியில் ஜிபி முத்து, அசீம், அசல் கொலார், ராபர்ட், ஷெரினா, அசீம், ராமசாமி, ஆர்யன் தினேஷ் என்ற ஏடிகே, ஜனனி, அமுதவாணன், விஜே மஹேஸ்வரி, விஜே கதிரவன், ஆயிஷா, தனலட்சுமி, ரக்சிதா, மணிகண்டன், மெட்டி ஒலி அரவிந்த், விக்ரமன், குயின்ஸி மற்றும் நிவாஷினி என பல பேர் கலந்து கொண்டு இருக்கிறார்கள்.

-விளம்பரம்-

இந்த முறை நிகழ்ச்சி ஆரம்பத்தில் 20 போட்டியாளர்கள் களம் இறங்கி இருக்கின்றனர். இந்த முறையும் பலர் புது முகங்களாக இருக்கின்றனர். பொதுவாகவே நிகழ்ச்சி தொடங்கி சில வாரங்கள் கழித்து தான் போட்டியாளர்களுக்கு ஆர்மி துவங்கம். ஆனால், இந்த முறை நிகழ்ச்சி தொடங்கிய முதல் இரண்டு நாட்களிலேயே போட்டியாளர்களுக்கு ஆர்மி தொடங்கப்பட்டிருக்கிறது. எப்போதுமே நிகழ்ச்சி தொடங்கி ஒரு வாரம் கழித்து தான் போட்டியாளர்களுக்குள் சர்ச்சை, சண்டை, கலவரம் தொடங்கும்.

- Advertisement -

பிக் பாஸ் சீசன் 6:

ஆனால், இந்த முறை பிக் பாஸ் நிகழ்ச்சி தொடங்கி இரண்டு நாட்களிலேயே போட்டியாளர்கள் கலவரத்தை ஆரம்பித்து விட்டார்கள். இதனால் வீடு சந்தை கடை போல் மாறிவிட்டது. மேலும், இந்த முறை முதல் நாளிலேயே பிக் பாஸ் டாஸ்க் கொடுத்து ஆரம்பித்திருக்கிறார். அதில் ஒவ்வொரு போட்டியாளரும் தங்களை அதிகம் கவராத மூன்று பேர்களை கூற வேண்டும் என்று கூறியிருக்கிறார். இதனை அடுத்து அதிக வாக்குகளை பெற்று ஆயிஷா, சிவின் கணேஷ், ஆர் ஜே மகேஸ்வரி, அமுதவாணன் ஆகிய நான்கு பேரும் தான் அடுத்த வாரம் நாமினேஷன் பட்டியலில் நேரடியாக இடம் பெற்று இருக்கிறார்கள்.

நாமினேஷன் நபர்கள்:

இந்த முறை கேப்டன் தேர்வு நடைபெறவில்லை. அதற்கு பதில் போட்டியாளர்களை நான்கு அணியாக பிரித்து வேலையை பார்த்து வருகின்றனர். இதனால் அடிக்கடி போட்டியாளர்களுள் சண்டை ஏற்படுகிறது. இந்த நிலையில் தனலட்சுமியை ஜிபி முத்து ரசிகர்கள் எச்சரிக்கும் பதிவு சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அதாவது, மூன்றாவது நாள் நிகழ்ச்சியில் ஜிபி முத்து, அமுதவாணன் என போட்டியாளர்கள் பலரும் ஒன்றாக உட்கார்ந்து காமெடியாக பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

-விளம்பரம்-

ஜிபி முத்து-தனலட்சுமி சண்டை:

இதை பார்த்த தனலட்சுமி, ஜிபி முத்துவை பார்த்தாலே காண்டு ஆகுது. அவர் நாரதர் வேலை செய்கிறார். அவருடைய டீமுக்கே கெட்ட பெயர் வாங்கிக் கொடுக்கிறார் என்று கேமிரா முன்பு நின்று பேசி இருக்கிறார். இப்படி இவர் பேசியிருந்த ப்ரோமோ வெளியாகி இருந்தபோது ஜி பி முத்துவின் ஆர்மிகள் தனலட்சுமியை கடுமையாக விமர்சித்து பேசி இருந்தார்கள். அதன்பின் ஜி பி முத்து, அசிம் எல்லோரும் உட்கார்ந்து கொண்டு பேசியிருக்கும் போது தனலட்சுமி, ஆயிஷா எல்லாரும் வருகிறார்கள். உடனே அசிம், நாங்கள் பேசிக் கொண்டிருக்கிறோம்.

தனலட்சுமியை வறுத்து எடுக்கும் ரசிகர்கள்:

அப்புறமாக வாருங்கள் என்று சொல்கிறார்கள். ஆனாலும், கேட்காமல் பேசும்போது ஜி பி முத்து நான் பேசும் போது இந்த பெண் என்னை பார்த்து முறைத்தாள். நான் பார்த்துக் கொண்டுதான் இருந்தேன் என்று சொன்னவுடன் தனலட்சுமி நான் பார்த்தேனா? நான் முறைத்தேனா? என்று கோபமாக கேட்கிறாள். பின் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. தன்னை நடிக்கிறார் என்று சொன்னதை தாங்கமுடியாமல் Gp முத்து ஒருகட்டத்தில் கண்ணீர் விட்டு அழுதுவிட்டார். இதனால் gp முத்து இதை பார்த்த ஜி பி முத்துவின் ஆர்மீகள் ஆவேசமாக தனலட்சுமியை திட்டிக் கொண்டும், நீ நாமினேஷனில் வந்தால் உன்னை முதலில் வெளியேற்றுவோம் என்றெல்லாம் பதிவிட்டு வருகிறார்கள்.

Advertisement