ஆயிஷாவின் எலிமினேஷன் கார்ட்டை காட்டியதும் ஜனனிக்கு எதிராக அரங்கத்தில் ஒலித்த குரல் – கதறி அழுதுள்ள ஜனனி.

0
529
janany
- Advertisement -

விஜய் டிவியில் பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி தொடங்கி தற்போது 62 நாட்களை கடந்து இருக்கிறது. இந்த நிகழ்ச்சியின் ஆரம்பத்தில் ஜிபி முத்து, அசீம் , அசல், ராபர்ட், ராமசாமி, ஏடிகே, ஜனனி, அமுதவாணன், விஜே மஹேஸ்வரி, விஜே கதிரவன், ஆயிஷா, தனலட்சுமி, ரக்சிதா, மணிகண்டன், மெட்டி ஒலி சாந்தி, விக்ரமன், குயின்ஸி மற்றும் நிவாஷினி, சிவின் கணேசன் என 20 பேர் கலந்து கொண்டு இருக்கிறார்கள்.

-விளம்பரம்-

மேலும், இந்த நிகழ்ச்சியில் மக்களுக்கு பரீட்சியமான முகமாக கலந்து கொண்டிருப்பவர் நடிகை ஆயிஷா. இந்த நிலையில் இவர் இந்த வாரம் வெளியேற்றப்பட்டு இருக்கிறார். பிக் பாஸில் இந்த சீஸனின் முதல் டபுள் ஏவிக்ஷன் அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்த வாரம் நடைபெற்ற நாமினேஷனில் பெரும்பாலானோர் ஆயிஷாவின் பெயரை தான் கூறியிருந்தார்கள். அவரை தொடர்ந்து ஜனனி, ராம், அசீம், கதிர், adk ஆகியோர் இந்த வாரம் நாமினேட் ஆகி இருந்தனர்.

- Advertisement -

இந்த வாரம் டபுள் எவிக்ஷன் என்பதால் கண்டிப்பாக இந்த லிஸ்டில் இருந்து ராம் வெளியேறுவார் என்றுஎதிர்பார்க்கப்பட்டது. . ஏனெனில் இந்த சீசன் ஆரம்பித்ததில் இருந்தே ராம் பெரிதாக மக்களை கவரவில்லை. எனவே, அவர் வெளியேற அதிக வாய்ப்பு இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது . ஆனால், மீதமுள்ள ஜனனி, ராம், அசீம், கதிர், adk ஆகியோர்களில் யார் வெளியேறுவார் என்று கேள்வி எழுந்தது.

இந்த வாரம் ராம் மற்றும் ஆயிஷா வெளியேறி இருக்கிறார்கள். ஆயிஷா வெளியேறி இருப்பது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. அதற்கு முக்கிய காரணம் அவரை விட weak போட்டியாளர்களாக இருக்கும் adk மற்றும் ஜனனி இந்த வாரம் காப்ற்றப்பட்டு இருக்கின்றனர். இதனால் இது மக்கள் முடிவல்ல விஜய் டிவி எடுத்த முடிவு என்று ஆயிஷாவின் ரசிகர்கள் புலம்பி கொண்டு வருகின்றனர்.

-விளம்பரம்-

இந்த நிலையில் இன்று ஆயிஷா வெளியேறினார் என்று கமல் அறிவித்த போது அரங்கத்தில் இருந்த பலர் ‘ஜனனியை கூடவே வெளிய அனுப்புங்க’ என்று கூச்சலிட இதனை கேட்ட ஜனனி கதறி அழுது இருக்கிறார். ஆனால், இது இன்றைய ஒரு மணி நேர எபிசோடில் காட்டப்படுமா என்பது பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். ஏற்கனவே ஆயிஷாவை விஜய் டிவி பிளான் பண்ணி வெளியில் அனுப்பிவிட்டார்கள் என்று பலரும் குற்றம்சாட்டி வருகின்றனர்.

இந்த வாரம் நடந்த மாறுவேட போட்டியில் ஆயிஷாவுக்கு சிம்புவின் கெட்டப் கொடுக்கப்பட்டுஇருந்தது. சிம்புவாகவே இவர் முடிந்த வரைக்கும்நடித்து இருந்தார். இவர் சிம்பு மாதிரி நடிப்பதற்காக போட்ட முயற்சிக்காக பலரும் பாராட்டி இருந்தார்கள். ஆனால், எபிசோட்டில் இவர் செய்த முயற்சியை காட்டவே இல்லை. மூன்று நிமிடங்கள் மட்டுமே இவருடைய பர்ஃபார்மன்ஸ் காட்டப்படுகிறது. ஆனால், 24 மணி நேரத்தில் இவருடைய பர்ஃபார்மன்ஸ் பார்த்து ரசிகர்கள் பலருமே பாராட்டி இருந்தார்கள். எபிசொட்டில் இவருடைய காட்சி காட்டப்படாதது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

அது மட்டும் இல்லாமல் இந்த வாரம் ஆயிஷாவே வெளியேற்றுவதற்காக தான் இப்படி எல்லாம் பிளான் செய்கிறார்களா? என்றும் ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள். மேலும், ரக்ஷிதாவிற்கு மட்டும் ஒரு எளிமையான கதாபாத்திரத்தை கொடுத்துவிட்டு ஆயிஷாவுக்கு இப்படி ஒரு கதாபாத்திரத்தை கொடுத்திருப்பது ஓரவஞ்சனை. ஆயிஷாவிற்கான சரியான ஆடை இல்லை. பெர்ஃபார்மன்ஸ் கூட நிகழ்ச்சியில் அதிகமாக காட்டவில்லை. இதன் மூலம் ஆயிஷாவை நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்ற விஜய் டிவி முடிவு செய்து இப்படி எல்லாம் செய்கிறார்கள் என்றெல்லாம் ரசிகர்கள் சோசியல் மீடியாவில் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Advertisement