நிச்சயம் முடிந்து பல மாதங்கள் ஆன நிலையில் திருமண தேதியை திடீரென்று அறிவித்த மஹத்.

0
6714
mahat-prachi
- Advertisement -

நடிகர் மகத் அவர்கள் முதன் முதலாக 2006 ஆம் ஆண்டு நடிகர் சிலம்பரசன் நடித்த வல்லவன் என்ற படத்தின் மூலம் தான் சினிமா உலகில் அறிமுகமானார். அதற்கு பிறகு 2007 ஆம் ஆண்டு காளை என்ற திரைப் படத்தில் சிறிய வேடத்தில் நடித்து இருந்தார். அதனைத் தொடர்ந்து 2011ஆம் ஆண்டு இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் அஜீத் நடித்த மங்காத்தா படத்தின் மூலம் தான் மகத் மக்கள் மத்தியில் அறியப்பட்டார். பின் மோகன்லால் மற்றும் தளபதி விஜய் நடித்த ஜில்லா திரைப் படத்தின் தான் மூலம் மகத் அவர்கள் ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தார்.

-விளம்பரம்-

கடந்த 2018 ஆம் ஆண்டு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியிட்ட பல்வேறு பிரபலமான நடிகர்களில் நடிகர் மற்றும் ஒருவர் இந்த நிகழ்ச்சியில் மிகவும் ஆக்ரோஷமான போட்டியாளராக இருந்த மஹத் பல்வேறு சர்ச்சைகளிலும் சிக்கினார் மேலும் இவரை நடிகை யாஷிகா ஒரு தலையாகவும் காதலித்து வந்தார். இந்த பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் தான் மகத் அவர்கள் மிக பெரிய அளவு பிரபலமானார்.

இதையும் பாருங்க : ஒரு வழியா சுப்ரமணியபுரம் படத்தில் நடிக்காத காரணத்தை ஓப்பனாக கூறிய நடிகர் சாந்தனு. வீடியோ.

- Advertisement -

அதோடு பிக் பாஸ் நிகழ்ச்சியில் மகத்துக்கும், யாசிகாவுக்கும் இடையே நடந்த காதல் கலவரங்கள் அனைத்தும் சமூக வலைத்தளங்களில் பயங்கர சர்ச்சையை எழுப்பியது. ஆனால், மஹத் ஏற்கனவே பிராட்சி மிஸ்ரா என்பவரை நீண்ட வருடங்களாக காதலித்து வந்தார். அப்படி இருந்தும் யாஷிகாவிற்கும், மஹத்திற்கும் காதல் உருவானது. மேலும், பிக்பாஸ் நிகழ்ச்சியில் இவர்கள் இருவரும் அடிக்கடி மிகவும் நெருக்கமாக பழகி வந்தனர். இதனால் மஹதின் காதலி காட்சி காதலை முறித்துக் கொண்டதாக பலரும் கூறி வந்தனர்.

பின்னர் எப்படியோ இருவரும் சமாதானம் ஆனார்கள். இருப்பினும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியே வந்த பிறகும் மஹத்தும் யாஷிகாவும் பழகி வந்தனர். தற்போது இவர்கள் இருவரும் இணைந்து ஒரு திரைப்படத்தில் கூட நடித்து வருகின்றனர். ஆனால், கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 17 ஆம் தேதி நிச்சயதார்த்தம் செய்து கொண்டார்கள். நிச்சயதார்த்தம் முடிந்து ஓராண்டுக்கு மேல் ஆனா நிலையில் திருமணம் குறித்து அறிவிக்காமல் இருந்தார் மஹத். இந்த நிலையில் மஹத் மற்றும் பிராச்சி திருமணம் நாளை (ஜனவரி 30) நடைபெற இருக்கிறது. இதனை மஹத் தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

-விளம்பரம்-

Advertisement