கவலை வேண்டாம், துருவங்கள் 16 போன்ற படங்களில் ஓரமாக நடித்து பின்னர் ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ படத்தில் தனது கவர்ச்சியான நடிப்பின் மூலம் பல ரசிகர்கள் மனதை கொள்ளைகொண்டவர் நடிகை யாஷிகா ஆனந்த். பின்னர் கடந்த ஆண்டு பிக் பாஸ் நிகழ்ச்சியிலும் பங்குபெற்றார்.
இந்த நிகழ்ச்சியில் பங்குபெற்ற போது நடிகர் மஹத்துடன் காதலில் விழுந்தார். ஆனால், மஹத் பராச்சி மிஸ்ரா என்ற மாடல் அழகியை காதலித்து வந்ததால் யாஷிகாவின் ஆசை வீணாக போனது. இருப்பினும் இவர்கள் இருவருக்கும் ஒரு விதமான ரொமான்ஸ் ஓடிக்கொண்டு தான் இருந்தது.
இதையும் படியுங்க : யாஷிகாவின் பாகத்தை விமர்சித்த நபர்.! வறுத்தெடுத்த யாஷிகாவும் அவரது தங்கையும்.!
பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னரும் இருவரும் நெருக்கமான பழக்கத்தில் தான் இருந்து வருகின்றனர். இந்நிலையில் மஹத் தனது பிறந்தநாளை இன்று கொண்டாடினார். இந்த கொண்டாட்டத்தில் மஹத் காதலி பராச்சி, ஜனனி ஐயர், பிந்து மாதாவி ஆகியோர் பங்குபெற்றனர்.
ஆனால், மஹத்தை ஒருதலையாக காதலித்த யாஷிகா மஹத்துடன் ஊஞ்சலாடிக்கொண்டிருக்கும் புகைப்படம் ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஸ்டேட்டஸ்ஸாக வைத்து மஹ்திற்கு பிறந்தநாள் வாழ்த்தை தெரிவித்துள்ளார். அதுவும் இரவு 12 மணிக்கே ஸ்டேட்டஸ் வைத்துள்ளார் யாஷிகா. என்ன பண்றது இன்னும் ஒன் சைடா லவ் பன்ரறாரு போல.