ஆட்டிட்டு வரனே சொன்னதிற்கு பஞ்சாயத்தை கூட்டிய பூர்ணிமா – அப்போ இது என்ன பாஸ்?

0
205
- Advertisement -

விஜய் டிவியில் பிக் பாஸ் 7 நிகழ்ச்சி தொடங்கி 9வது வாரத்தை கடந்து இருக்கிறது. இந்த சீசனில் கூல் சுரேஷ், பூர்ணிமா ரவி, ரவீனா தாஹா, பிரதீப் ஆண்டனி, நிக்சன், சரவணா விக்ரம், மாயா எஸ் கிருஷ்ணா, விஷ்ணு, ஜோவிகா, அக்ஷ்யா உதயகுமார், மணிசந்திரா, வினுஷா தேவி, யுகேந்திரன் வாசுதேவன், விசித்ரா, பவா செல்லதுரை, விஜய் வர்மா என்று பலர் பிக் பாஸ் வீட்டிற்குள் சென்று இருந்தார்கள். இதில் அனன்யா, பவா, விஜய் வர்மா, வினுஷா மற்றும் யுகேந்திரன், அன்னபாரதி,பிரதீப், ஐஷு, கானா பாலா, அக்ஷயா, பிராவோ. ஜோவிகா ஆகியோர் வெளியேறி இருக்கின்றனர்.

-விளம்பரம்-

இந்த நிகழ்ச்சியில் பரிட்சயமான முகங்களில் ஒருவர் பூர்ணிமா ரவி. இவர் நிகழ்ச்சி தொடக்கத்தில் இருந்தே தற்போது வரை பல சர்ச்சைகளில் சிக்கி இருக்கிறார். குறிப்பாக, இவர் மாயாவுடன் சேர்ந்து கொண்டு செய்யும் அட்டகாசங்கள் எல்லாம் அளவே இல்லை.பிற போட்டியாளர்களை கிண்டல், கேலி செய்வது, நிகழ்ச்சியில் இருந்து அவர்களை தூக்க திட்டமிடுவது போன்ற பல வேலைகளை பூர்ணிமா செய்திருக்கிறார்.

- Advertisement -

இதுவரை அவர் சம்பாதித்த மொத்த பேரையும் இந்த நிகழ்ச்சியின் மூலம் அவர் கெடுத்து கொண்டார் என்றே சொல்லலாம். ஒரு கட்டத்திற்கு மேல் இவர் எல்லை மீறி கமலஹாசனையே விமர்சித்து இருக்கிறார். மேலும், கமல் எது சொன்னாலும் சாரி என்று சொல்லி பேசியதை கேட்டு கமலே கொந்தளித்து அவரை திட்டியிருந்தார்.இருந்தாலும் பூர்ணிமா தன்னுடைய வேலையை தொடர்ந்து செய்து கொண்டுதான் இருக்கிறார்.

அந்த வகையில் தினேஷ் உள்ளே வந்ததில் இருந்து மாயா மற்றும் பூர்ணிமா இருவரும் சேர்ந்து அவரிடம் அடிக்கடி சண்டையிட்டு வருகின்றனர். இப்படி ஒரு நிலையில் சில தினங்களுக்கு முன்பு தினேஷ், நீங்கள் எதுக்கு எடுத்தாலும் ஆட்டிகிட்டு பொறுமையா தான் வரீங்க என்று பூர்ணிமா இடம் பேசி இருந்தார். இதனால் பூர்ணிமா, நீங்கள் சொன்னது என்னுடைய மனதை ரொம்ப கஷ்டப்படுத்தி இருக்கிறது. நீங்கள் பேசுனது தவறு என்றெல்லாம் விவாதம் செய்து இருவருக்கும் மத்தியில் சண்டை ஏற்பட்டது.

-விளம்பரம்-

இறுதியில் தினேஷ், நான் பேசியதற்கு சாரி என்று பூர்ணிமா,மாயா இருவரிடமே மன்னிப்பு கேட்டிருந்தார். இதே தினேஷ் கேப்டனாக இருந்தபோது அவர் தட்டுகளை எல்லாம் கழுவி வையுங்கள். தூக்கி போட்டு உடைக்காதீர்கள் என்று சொல்கிறார். இதனால் மாயா,பூர்ணிமா இருவருமே கோபப்பட்டு வெளியே வந்தார்கள். பின் பூர்ணிமா, தினேஷ் குறித்து அவர் ஆட்டிகிட்டு சாப்பிடுறாரு என்று விமர்சித்து பேசி இருந்தார். இதை தான் தற்போது நெட்டிசன்கள் சோசியல் மீடியாவில் பகிர்ந்து தினேஷ் சொன்னால் தவறு, நீங்கள் சொன்னால் சரியா என்று விமர்சித்து வருகிறார்கள்.

Advertisement