விஷ்ணு கேப்டன் ஆனால், தங்களுக்கு சாகதமாக இருக்கும் என்று எதிர்பார்த்த மாயா – முதல் பாலிலேயே அப்படித்த விஷ்ணு.

0
505
- Advertisement -

விஜய் டிவியில் பிக் பாஸ் 7 நிகழ்ச்சி தொடங்கி 9வது வாரத்தை கடந்து இருக்கிறது. இந்த சீசனில் கூல் சுரேஷ், பூர்ணிமா ரவி, ரவீனா தாஹா, பிரதீப் ஆண்டனி, நிக்சன், சரவணா விக்ரம், மாயா எஸ் கிருஷ்ணா, விஷ்ணு, ஜோவிகா, அக்ஷ்யா உதயகுமார், மணிசந்திரா, வினுஷா தேவி, யுகேந்திரன் வாசுதேவன், விசித்ரா, பவா செல்லதுரை, விஜய் வர்மா என்று பலர் பிக் பாஸ் வீட்டிற்குள் சென்று இருந்தார்கள். இதில் அனன்யா, பவா, விஜய் வர்மா, வினுஷா மற்றும் யுகேந்திரன், அன்னபாரதி,பிரதீப், ஐஷு, கானா பாலா, அக்ஷயா, பிராவோ. ஜோவிகா ஆகியோர் வெளியேறி இருக்கின்றனர்.

-விளம்பரம்-

இப்படி ஒரு நிலையில் இந்த வாரம் நடைபெற்ற நாமினேஷனில் பூர்ணிமா, தினேஷ், ஜோவிகா, மணி, விக்ரம், அனன்யா, கூல் சுரேஷ், விசித்ராஆகியோர் நாமினேட் ஆகி இருந்தனர். இதில் விக்ரமும் இந்த வாரம் நாமினேட் ஆகி இருந்ததால் அவர் தான் வெளியேறுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இந்த வாரம் முழுக்க நடைபெற்று வந்த பல்வேறு தனியார் ஓட்டிங்கில் விக்ரமை விட ஜோவிகாவிற்கு தான் குறைவான வாக்குகள் பதிவாகி இருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

இதனால் ஜோவிகா தான் கடந்த வாரம் வெளியேறி இருந்தார். மேலும், ஜோவிகாவிற்கு சீக்ரெட் ரூம் கொடுக்கப்பட இருப்பதாக தகவல்கள் வெளியானது. ஆனால், அவருக்கு அப்படி எந்த ஒரு வாய்ப்பும் அளிக்கப்படாமல் நேரடியாக வெளியேற்றப்பட்டார். ஜோவிகா வெளியேற்றப்பட்ட முக்கிய காரணமே அவர் மாயா மற்றும் பூர்ணிமாவுடன் சேர்ந்து கேங் கேம் ஆடியதும், வீட்டில் அடிக்கடி தூங்கியதும் தான்.

மேலும், தனக்கு வீட்டில் பலர் மெண்டல் டார்ச்சர் கொடுப்பதால் அதனால் டையர்ட் ஆகி தான் தூங்கிவிடுவதாகவும் கூறி இருந்தார் ஜோவிகா. மேலும், இந்த வாரம் தான் வெளியேற போவதை உணர்ந்ததாகவும் கூறினார். நேற்றய நிகழ்ச்சியில் ஜோவிகா வெளியேறிய நிலையில் தற்போது பிக் பாஸ் வீட்டில் விஜய் வர்மா, அனன்யா, விசித்ரா, தினேஷ், அர்ச்சனா, கூல் சுரேஷ், மணி, ரவீனா, மாயா, பூர்ணிமா, நிக்சன், விக்ரம்,விஷ்ணு ஆகிய 13 பேர் மட்டும் உள்ளே இருக்கின்றனர்.

-விளம்பரம்-

இப்படி ஒரு நிலையில் இந்த வார கேப்டனான விஷ்ணு, ஸ்மால் பாஸ் பிக் பாஸ் வீட்டை பிரித்து இருக்கிறார். இதில் ஸ்மால் பாஸ் டீமில் தினேஷ், மாயா, கூல் சுரேஷ், மணி, அர்ச்சனா ஆகியோரையும் ஸ்மால் பாஸில் அனன்யா, விஜய், பூர்ணிமா, நிக்சன், விக்ரம், ரவீனா ஆகியோரையும் பிரித்து போட்டு இருக்கிறார். அதிலும் குறிப்பாக டீம் போட்டு வாடி வரும் மாயா – பூர்ணிமா, மணி – ரவீனா ஆகிய இரண்டு ஜோடியையும் தனி தனியாக பிரித்து இருக்கிறார் விஷ்ணு.

இப்படி ஒரு நிலையில் இந்த வார கேப்டனான விஷ்ணுவை, வீட்டில் பொறுப்பே இல்லை என்ற இரண்டு நபரை தேர்ந்தெடுத்து ஷாப்பிங்கிற்கு அனுப்புமாறு டாஸ்க் கொடுக்கப்பட்டு இருக்கிறது. இதில் மாயா மற்றும் அனன்யாவை விஷ்ணு தேர்தெடுத்தாதல் கடுப்பான மாயா ‘ நீங்கள் கேப்டன் ஆனதே ஒரு ஸ்டேட்டர்ஜி தான். நீங்கள் என்னையும் பூர்ணிமாவையும் எவ்வளவு யூஸ் பண்ணி இருக்கிறீர்கள் என்பது வரை நான் சொல்வேன் என்று கொந்தளித்துள்ளார்.

Advertisement