நீ பண்ணது தான் என்ன ரொம்ப Hurt ஆச்சி, என்ன மன்னிச்சுடு – கண்ணீர் விட்டு அழுத விஷ்ணு.

0
213
- Advertisement -

விஜய் டிவியில் பிக் பாஸ் 7 நிகழ்ச்சி தொடங்கி 10  வாரத்தை கடந்து இருக்கிறது. இந்த சீசனில் கூல் சுரேஷ், பூர்ணிமா ரவி, ரவீனா தாஹா, சுரேஷ், ஆண்டனி, நிக்சன், சரவணா விக்ரம், மாயா எஸ் கிருஷ்ணா, விஷ்ணு, ஜோவிகா, அக்ஷ்யா உதயகுமார், மணிசந்திரா, வினுஷா தேவி, யுகேந்திரன் வாசுதேவன், விசித்ரா, பவா செல்லதுரை, விஜய் வர்மா என்று பலர் பிக் பாஸ் வீட்டிற்குள் சென்று இருந்தார்கள். இதில் அனன்யா, பவா, விஜய் வர்மா, வினுஷா மற்றும் யுகேந்திரன், அன்னபாரதி,பிரதீப், ஐஷு, கானா பாலா, அக்ஷயா, பிராவோ. ஜோவிகா ஆகியோர் வெளியேறி இருக்கின்றனர்.

-விளம்பரம்-

தற்போது பிக் பாஸ் வீட்டில் விஜய் வர்மா, அனன்யா, விசித்ரா, தினேஷ், அர்ச்சனா, கூல் சுரேஷ், மணி, ரவீனா, மாயா, பூர்ணிமா, நிக்சன், விக்ரம்,விஷ்ணு ஆகிய 13 பேர் மட்டும் உள்ளே இருக்கின்றனர். கடந்த வாரம் நடைபெற்ற நாமினேஷனில் நிக்சன், அர்ச்சனா, தினேஷ், விசித்ரா, மணி ஆகிய 5 பேர் நாமினேட் ஆகி இருந்தனர். மேலும், இதில் மணி அல்லது நிக்சன் இருவரில் தான் கண்டிப்பாக ஒருவர் வெளியேறுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது.

- Advertisement -

இப்படி ஒரு நிலையில் கடந்த வாரம் எலிமினேஷன் இல்லை என்று அறிவிக்கப்பட்டுஇருந்தது. இதுகுறித்து அறிவித்த விஜய் டிவி ‘மிக்ஜாம் புலன் காரணமாக பெரும்பான்மையான மக்கள் வாக்களிக்க இயலாததால், இந்த வார எலிமினேஷன் ரத்து செய்யப்படுகிறது’ என்று அறிவித்து இருந்தது. இந்த வாரம் நிக்சன் தான் நிச்சயம் வெளியேறுவார் என்று எதிர்பார்த்த நிலையில் விஜய் டிவி இப்படி ஒரு ட்விஸ்டை கொடுத்துவிட்டது.

கடந்த வாரம் நடைபெற்ற நிகழ்ச்சியில் போட்டியாளர்களுக்கு மத்தியில் ஏகப்பட்ட பிரச்சனைகள் எழுந்தது. அதிலும் அர்ச்சனா – நிக்சன் ஆகியோர் இடையே பெரும் சண்டை வெடித்தது. இந்த சண்டையின் போது நிக்சன், அர்ச்சனாவை படு மோசமாக பேசி இருந்தார். மேலும், இனி வினுஷா பத்தி யாராவது பேசுனீங்க ‘சொருகிடுவேன்’ என்று கூறி இருந்தது மற்ற போட்டியாளர்களை கூட கோபத்தில் ஆழ்த்தியது.

-விளம்பரம்-

நிக்சன் இப்படி பேசியதற்காக கடந்த வாரம் அவருக்கு Yellow Card கொடுக்கப்பட்டது. ஆனால், அவரை கண்டித்ததை விட தினேஷ், அர்ச்சனா, மணி, விஷ்ணுவை தான் கமல் அதிகம் கண்டித்து இருந்தார். அதிலும் தினேஷ், நிக்சனை பார்த்து தொளலத் என்று சொன்ன வார்த்தைக்கு அவரை கடுமையாக எச்சரித்து இருந்தார் கமல். ஆனால், இதை விட மோசமாக பேசிய பூர்ணிமா, மாயாவை இது வரை கமல் ஏன் கண்டிக்கவில்லை என்று பலர் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

அதிலும் நேற்றய நிகழ்ச்சியில் மாயா மற்றும் பூர்ணிமாவிற்க்கு ஆதரவாக பேசியது பிக் பாஸ் ரசிகர்களை பெருத்த ஏமாற்றத்தை ஏற்படுத்தியது. இப்படி ஒரு நிலையில் இன்று வாரத்தின் முதல் நாள் என்பதால் நாமினேஷன் நடைபெற இருக்கிறது. இப்படி இருக்க தற்போது வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் விஷ்ணு மற்றும் மாயா பேசிக்கொண்டு இருக்கின்றனர். மேலும், விஷ்ணு, பூர்ணிமாவிடம் மன்னிப்பு கேட்டுவிட்டு அழுது கொண்டே சென்றுவிட்டார்.

Advertisement