‘ஏங்க அவன இப்படி பண்றீங்க’ – தந்திரமாக விக்ரமை வைத்து ஸ்கோர் செய்யப் பாக்கும் பூர்ணிமா.

0
209
- Advertisement -

விஜய் டிவியில் பிக் பாஸ் 7 நிகழ்ச்சி தொடங்கி 9வது வாரத்தை கடந்து இருக்கிறது. இந்த சீசனில் கூல் சுரேஷ், பூர்ணிமா ரவி, ரவீனா தாஹா, பிரதீப் ஆண்டனி, நிக்சன், சரவணா விக்ரம், மாயா எஸ் கிருஷ்ணா, விஷ்ணு, ஜோவிகா, அக்ஷ்யா உதயகுமார், மணிசந்திரா, வினுஷா தேவி, யுகேந்திரன் வாசுதேவன், விசித்ரா, பவா செல்லதுரை, விஜய் வர்மா என்று பலர் பிக் பாஸ் வீட்டிற்குள் சென்று இருந்தார்கள். இதில் அனன்யா, பவா, விஜய் வர்மா, வினுஷா மற்றும் யுகேந்திரன், அன்னபாரதி,பிரதீப், ஐஷு, கானா பாலா, அக்ஷயா, பிராவோ. ஜோவிகா ஆகியோர் வெளியேறி இருக்கின்றனர்.

-விளம்பரம்-

கடந்த சில தினங்களாக நிக்சன் மற்றும் அர்ச்சனா ஆகிய இருவருக்கும் தான் சண்டை ஏற்பட்டு கொண்டே இருந்தது. அர்ச்சனா மற்றும் நிக்சனுக்கு கடும் வாக்குவாதம் ஏற்ப்பட்டது. அப்போது அர்ச்சனாவை கறி துப்பி, வாடி போடி, நாயே என்றெல்லாம் பேசினார் நிக்சன். மேலும் ‘ நான் கலாய்க்க ஆரம்பித்தால் 3 நாள் அலுவ, மூஞ்ச பாரு கருமம், சும்மா வினுஷா, வினுஷானு சொன்ன சொருகிடுவேன் என்று எல்லை மீறி மிரட்டி இருந்தார் நிக்சன்.

- Advertisement -

இப்படியாக நேற்றய எபிசோட் முடிந்த நிலையில் பிக் பாஸ் வீட்டில் தற்போது கோல்ட் ஸ்டார் டாஸ்க் கொடுக்கப்பட்டு இருக்கிறது. இந்த முறை இந்த டாஸ்கில் வெல்பவர்களுக்கு 5 கோல்டு ஸ்டார் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டு இருக்கிறது. மேலும், இந்த ஸ்டார், தங்களுக்கு வேண்டும் என்றும் விவாதிக்கலாம், இல்லை என்றால் யாருக்கும் இந்த ஸ்டார் போக கூடாது என்றும் விவாதிக்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

இந்த டாஸ்கில் ஏற்கனவே விஜய் வர்மா மற்றும் விஷ்ணு ஆகிய இருவருக்கும் வாக்கு வாதம் ஏற்பட்டது. இப்படி ஒரு நிலையில் தற்போது வெளியாகி இருக்கும் ப்ரோமோ சரவண விக்ரம் ‘என்னை ஏன் சும்மா நான் பண்ணதையே சொல்லிக்கொண்டு இருக்கிறீர்கள்’ என்று அர்ச்சனாவிடம் கேட்கிறார். அதற்கு அர்ச்சனா ‘உன்னை பாவமாதான் பாக்கிறேன்’ என்று சொல்ல, உடனே பூர்ணிமா ‘ நீங்க ஏன் அவனை தாக்குறீங்க’ என்று இந்த விஷயத்தில் ஸ்கோர் செய்ய பார்க்கிறார்

-விளம்பரம்-

தற்போது பிக் பாஸ் வீட்டில் விஜய் வர்மா, அனன்யா, விசித்ரா, தினேஷ், அர்ச்சனா, கூல் சுரேஷ், மணி, ரவீனா, மாயா, பூர்ணிமா, நிக்சன், விக்ரம்,விஷ்ணு ஆகிய 13 பேர் மட்டும் உள்ளே இருக்கின்றனர். இந்த வாரம் நடைபெற்ற நாமினேஷனில் நிக்சன், அர்ச்சனா, தினேஷ், விசித்ரா, மணி ஆகிய 5 பேர் நாமினேட் ஆகி இருகின்றனர். மேலும், இதில் மணி அல்லது நிக்சன் இருவரில் தான் கண்டிப்பாக ஒருவர் வெளியேறுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது.

இப்படி ஒரு நிலையில் இந்த வாரம் எலிமினேஷன் இல்லை என்று அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இதுகுறித்து அறிவித்த விஜய் டிவி ‘மிக்ஜாம் புலன் காரணமாக பெரும்பான்மையான மக்கள் வாக்களிக்க இயலாததால், இந்த வார எலிமினேஷன் ரத்து செய்யப்படுகிறது’ என்று அறிவித்து இருந்தது. இந்த வாரம் நிக்சன் தான் நிச்சயம் வெளியேறுவார் என்று எதிர்பார்த்த நிலையில் விஜய் டிவி இப்படி ஒரு ட்விஸ்டை கொடுத்துவிட்டது.

Advertisement