பிரதீப்பிற்காக கைதட்டிய ரசிகர்கள், மாயா போட்ட சபதத்தை நியாபகப்படுத்திய கமல் – இதான் அந்த சபதம்.

0
1493
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி தற்போது மூன்றாம் வாரத்தை நெருங்கி இருக்கிறது. இந்த நிகழ்ச்சியின் முதல் நாளிலேயே கூல் சுரேஷ், பூர்ணிமா ரவி, ரவீனா தாஹா, பிரதீப் ஆண்டனி, நிக்சன், சரவணா விக்ரம், மாயா எஸ் கிருஷ்ணா, விஷ்ணு விஜய், ஜோவிகா விஜயகுமார், அக்ஷயா உதயகுமார், மணிசந்திரா, வினுஷா தேவி, யுகேந்திரன் வாசுதேவன், விசித்ரா, பவா செல்லதுரை, விஜய் வர்மா என்று பலர் கலந்துகொண்டனர்.இதில் முதல் வாரத்தில் அனன்யா வெளியேற்றப்பட்ட நிலையில் அடுத்தே நாளே பவா செல்லத்துரை இந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினார்.

-விளம்பரம்-

பிக் பாஸ் வீடு இம்முறை இரண்டு வீடுகளாக பிரிந்து இருக்கிறது. ஸ்மால் பாஸ் வீட்டிற்கு அனுப்பப்படும் போட்டியாளர்கள் தான் பிக் பாஸ் வீட்டில் இருப்பவர்கள் கொடுக்கும் மெனுவை சமைக்க வேண்டும் என்ற ரூலும் இருக்கிறது. இந்த வாரம் ஸ்மால் பாஸ் வீட்டினுள் விஜய் வர்மா, கூல் சுரேஷ், பிரதீப், அக்ஷயா, விஷ்ணு, மாயா ஆகியோர் இருக்கின்றனர். ஸ்மால் பாஸ் வீட்டில் சென்றதில் இருந்தே இவர்கள் அனைவரும் பிக் பாஸ் நபர்களுடன் சண்டையிட்டு வந்தனர்.

- Advertisement -

அதிலும் பிக் பாஸ் வீட்டில் இருப்பவர்கள் கொடுக்கும் மெனுவை தான் இவர்கள் சமைக்க வேண்டும். ஆனால், இவர்கள் எங்களால் ஆளாளுக்கு தனி தனியாக சமைக்க முடியாது, நாங்கள் சமைத்து மட்டும் தான் போட வேண்டும் ருசியாக சமைக்க வேண்டும், கிச்சனை சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும் என்ற ரூல் எல்லாம் கிடையாது என்று நேற்று பிக் பாஸ் வீட்டில் ஸ்ட்ரைக் செய்து சமைக்காமல் இருந்தனர்.

இதனால் பிக் பாஸ் வீட்டில் இருந்தவர்கள் பசியில் வாடினர். ஆனால், ஸ்மால் பாஸ் வீட்டில் இருந்தவர்கள் மட்டும் வீட்டில் இருந்த பழங்களை எடுத்து சாப்பிட்டுக்கொண்டனர். இதனால் பிக் பாஸ் மற்றும் ஸ்மால் பாஸ் வீட்டார் இடையில் பெரும் சண்டை வெடித்து இருந்தது. இதுகுறித்து நேற்றைய நிகழ்ச்சியில் கூட கமல் கேட்டு இருந்தார். ஆனால், ஏன் ஸ்ட்ரைக் செய்தோம் என்ற காரணத்தை யாரும் சரியாக சொல்லவில்லை.

-விளம்பரம்-

இந்த சீசனில் அதிகம் வெறுக்கப்பட்ட ஒரு நபராக இருந்து வருவது மாயா தான். அதிலும் இவர் ஏஜென்ட் கேங் என்று விஜய் மற்றும் பூர்ணிமாவுடன் செய்யும் வேலைகள் பெரும் எரிச்சலை தருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்னர் பூர்ணிமாவுடன் பேசிக்கொண்டு இருந்த மாயா, இந்த வாரம் பிரதீப் நாமினேஷனில் இருக்கிறான் அவனை எப்படியாவது வெளியில் அனுப்புங்கள் மக்களே என்று கூறி பேசி இருந்தார்.

மேலும், இந்த வாரம் கமல் சார் பேசும் போது ஆடியன்ஸ் பிரதீப்பிற்கு கை தட்டினால் நானே எழுந்து சார் என்னை அனுப்பிவிடுங்கள் என்று கிளம்பிவிடுவேன் என்று கூறி இருந்தார். இப்படி ஒரு நிலையில் சமீபத்தில் வெளியான ப்ரோமோ ஒன்றில் பிரதீப் காப்பாற்றப்பட்டதாக கமல் அறிவித்தார். அப்போது ஆடியன்ஸ் அனைவரும் கைதட்ட ‘என்ன மாயா, பிரதிபிற்கு ஆடியன்ஸ் கைதட்டினால் எதோ ஒன்று செய்கிறேன் என்று சபதம் எல்லாம் போடீர்களே என்று கேலி செய்துள்ளார் கமல்.

Advertisement