உள்ள அனுப்பும் போதே எல்லா டெஸ்ட்டும் எடுத்துட்டு தான் அனுப்புவாங்க ஆனா பிரதீப் விஷயத்துல – பிரதீப் Red Card குறித்து வனிதா

0
495
- Advertisement -

பிக் பாஸ் நிகழ்ச்சியை விட்டு பிரதீப் வெளியேறியது குறித்து நடிகை வனிதா அளித்திருக்கும் பேட்டி தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி 35 நாட்களை கடந்து இருக்கிறது. தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து பிரதீப் வெளியேற்றி இருந்தது தான் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. பொதுவாக பிக் பாஸ் நிகழ்ச்சியில் எல்லை மீறும் போட்டியாளர்கள் வெளியேற்றப்படுவார்கள் சீசன் ஒன்றில் பரணி துவங்கி இந்த சீசனில் பாவா செல்லதுரை வரை நிகழ்ச்சியிலிருந்து பாதியில் வெளியேற்றப்பட்டார்கள்.

-விளம்பரம்-

அதேபோல போட்டியாளர்களிடம் எல்லை மீறி நடந்து கொண்டதாக ரெக்கார்ட் வாங்கி வெளியேறிய முதல் போட்டியாளர் மஹத்தான். அவரைத் தொடர்ந்து தற்போது ரெக்கார்ட் வாங்கி வெளியேறி இருக்கிறார் பிரதீப்.
இந்த சீசன் துவங்கியதில் இருந்து பிரதீப்பிற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் ஆதரவு இருந்து வந்தது. எனவே அவரை டார்கெட் செய்து பல விஷயங்களை செய்தனர். பிரதீப் பேசிய சில அநாகரிகமான வார்த்தைகளும் சில எல்லை மீறி செயல்களும் அவரது இந்த வெளியேற்றத்திற்கு காரணமாகிவிட்டது. கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஒரு டாஸ்கின் போது கூல் சுரேஷ் பிரதீப் தாய் படிக்கும் சொல் ஒன்றே பேசி விட்டதாக சர்ச்சை வெடித்தது.

- Advertisement -

பிரதீப் வெளியேற்றம்:

இதனால் மற்ற போட்டியாளர்களும் பிரதீப் மீது கடும் அதிருப்தி அடைந்தனர். பின் நேற்றைய நிகழ்ச்சியில் பிரதீப்பால் எங்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று பல பெண்கள் குற்றம் சாட்டி இருந்தார்கள். இதனால் கமல் ஒவ்வொருவராக அழைத்து விசாரித்து பிரதீப்பிற்கு எதிராக ஒவ்வொருவராக கார்டு கொடுக்கலாமா என்று கேட்டிருந்தார். இதில் அன்ன பாரதி, விசித்ரா, அர்ச்சனாவை தவிர மற்ற அனைத்து பெண்களும் பிரதிப்பை வெளியில் அனுப்பலாம் என்று ஒரு மனதாக தேர்வு செய்தார்கள். இதனால் நிகழ்ச்சியிலிருந்து பிரதீப் வெளியேற்றப்பட்டார்.

வனிதா பேட்டி:

இந்நிலையில் பிரதீப் வெளியேறியது குறித்து வனிதா கூறியிருப்பது, யாருக்குமே பயப்படாமல் தங்களுடைய உரிமைக்காக நின்ற அனைவருக்கும் நான் கைதட்டுகிறேன். இதற்காக முயற்சி எடுத்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்களுக்கு என்னுடைய பாராட்டுக்கள். இதற்கு பெயர்தான் நோ மீன்ஸ் நோ. அவனுக்கு அவனுடைய வாழ்க்கையில் நடந்த ஏதோ ஒரு மோசமான சம்பவத்தால் மனரீதியாக கடுமையாக பாதிப்பட்டு இருக்கிறான். அவன் நிச்சயமாக சாதாரண மனிதர்கள் போல் இல்லை. இந்த உலகத்தில் மனரீதியாக பாதிக்கப்பட்ட எல்லோருக்கும் மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்றுக் கொள்ள வேண்டும் என்ற அவசியம் கிடையாது.

-விளம்பரம்-

பிரதீப்புக்கு இருக்கும் ப்ரச்சனை:

ஆனால், அவர்களுக்கு குடும்பத்தின் அரவணைப்பு கண்டிப்பாக தேவை. விஜய் டிவி ஒரு போட்டியாளரை உள்ளே அனுப்பும் பொழுது எல்லாவிதமான பரிசோதனைகளை செய்துதான் அனுப்புகிறார்கள். அவர்களாலேயே பிரதீப் இடம் இருந்த பிரச்சினை கண்டுபிடிக்கவில்லை என்பது தான் எனக்கு கொஞ்சம் ஆச்சரியமாக இருக்கிறது. அவன் அவனுடைய அம்மாவையே ஒரு பொது நிகழ்ச்சியில் தவறாக பேசியிருக்கிறான். இதன் மூலமாகவே அவன் மன ரீதியாக பாதிக்கப்பட்டிருக்கிறான் என்பது தெள்ளத்தெளிவாக தெரிகிறது.

பிரதீப் குறித்து சொன்னது:

அவன் செய்வது அவனுக்கே தெரியவில்லை. பிரதீப் கதவை திறந்து வைத்துக்கொண்டு சிறுநீர் கழித்தேன் என்று சொல்கிறான். இன்று இப்படி செய்தவன் நாளை அனைத்து பெண்கள் முன்பு அம்மணமாக நின்று பார்த்துக்கோ, பார்த்துக்கோ, என்னை லவ் பண்ணுங்க என்று எப்படி சொல்லாமல் இருப்பான். அறிவு வேண்டாமா. எல்லா பெண்களும் எங்களுக்கு பிரச்சனைகள் இருக்கிறது என்று பிரதீப்பிற்கு எதிராக குரல் கொடுக்கும் போது அர்ச்சனா மட்டும் பிரதீப்பிற்கு குரல் கொடுத்திருக்கிறார். இது தவறான ஒன்று. அதேபோல் இந்த விஷயத்தில் கமலஹாசனை நான் மிகவும் பாராட்டுகிறேன். அவர் பெண் பாதுகாப்பிற்காக ஒரு தெளிவான எடுத்துக்காட்டை இந்த சமூகத்திற்கு தெரியப்படுத்தி இருக்கிறார். பிரதீப் செய்தது ரொம்ப பெரிய கேவலம். அவர் பிக் பாஸ் வீட்டிற்குள் இருப்பதற்கு தகுதியான ஆளே கிடையாது என்று பேசி இருக்கிறார்.

Advertisement