ஜோவிகா மேல செம கோவம் வருது, எதுக்கு அப்படி பண்ணனும் – மகளுக்கு முட்டு கொடுத்த வனிதா.

0
423
- Advertisement -

ஜோவிகா பண்ணது எனக்கு பிடிக்கவில்லை என்று வனிதா விஜயகுமார் அளித்திருக்கும் பேட்டி தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அனைவரும் எதிர்ப்பார்த்த தமிழில் பிக் பாஸ் 7 நிகழ்ச்சி தொடங்கி 38 நாட்களை கடந்து விறுவிறுப்பாக சென்று கொண்டு இருக்கிறது. தற்போது சோசியல் மீடியா முழுவதும் பிரதீப் வெளியேற்றம் குறித்து தான் அதிகமாக பேசப்பட்டு வருகிறது. கடந்த சனிக்கிழமை பிரதீப்க்கு Red Card கொடுத்து வெளியேற்றப்பட்டார். காரணம், பிரதீப்பால் தங்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று வீட்டில் இருந்த பெரும்பாலான பெண்கள் கமலிடம் முறையிட்டு இருந்ததால் அவரை வீட்டில் இருந்து வெளியேற்றினார் கமல். இதற்கு முழு காரணம் மாயா,பூர்ணிமா என்று கூறப்படுகிறது.

-விளம்பரம்-
Vichithra

பிக் பாஸ் வீட்டில் மாயா மற்றும் அவருடைய கேங் அர்ச்சனாவை டார்கெட் செய்து இருந்தார்கள். இதனால் கடுப்பான அர்ச்சனா மாயாவை திட்டி தீர்த்து இருக்கின்றனர். பின் பிரதீப் வெளியேது குறித்து அர்ச்சனா- விசித்ரா இருவரும் ஆதரவாக பேசி இருந்தார்கள். இதனால் பொங்கி எழுந்த பிக் பாஸ் வீட்டில் இருப்பவர்கள் சண்டைக்கு வந்திருக்கிறார்கள். ஒரு கட்டத்தில் டென்ஷன் ஆன அர்ச்சனா, மாயாவை சூனியக்காரி என்று திட்டி இருக்கிறார். பின் மாயா, பூர்ணிமா, நிக்சன்,ஜோவிகா எல்லோரும் சேர்ந்து அர்ச்சனா-விசித்திராவை டார்கெட் செய்து பேசுகிறார்கள். இருந்தாலும், விட்டுக் கொடுக்காமல் அர்ச்சனா விசித்திரா இருவரும் சராமாறியாக சண்டை போட்டு இருக்கிறார்கள்.

- Advertisement -

ஜோவிகா-அர்ச்சனா சண்டை:

இதற்கிடையில் ஜோவிகா அர்ச்சனாவிடம் சண்டை போட்டு இருக்கிறார். கோவம் அடைந்த அர்ச்சனா, வயது வித்தியாசம் தெரியாமல் நீ பேசுவியா? மரியாதை கொடுத்து பேசு. முதல் மரியாதையை கற்றுக் கொண்டு வந்து என்னிடம் சண்டை போடு என்று பேசினார். இதனால் ஆத்திரமடைந்த ஜோவிகா மைக்கை கழட்டி என்னை கன்ஃபெக்சன் ரூமுக்கு அழைக்க சொல்லுங்கள் என்று கத்திவிட்டு சென்றிருக்கிறார். இந்த நிலையில் இது தொடர்பாக வனிதா விஜயகுமார் பேட்டி அளித்திருக்கிறார். அதில் அவர், நீங்கள் 25 மாதிரி நடந்தால் 19 வயது பொண்ணு அந்த மாதிரி நடப்பாங்க. பிக்பாஸ் வீடு ஒரு டிராமா வீடு தான். அங்கு சூழல் ஒரே மாதிரி இருக்காது.

வனிதா பேட்டி:

போட்டியாளர்கள் செய்வது எல்லாமே கண்டெண்ட். ரெட்கார்டு கொடுத்த அந்த 4 பேர் சொல்வதை வைத்து மட்டும் கமல் சார் பிரதீப்பை வீட்டை விட்டு வெளியே அனுப்பவில்லை. இது மேனேஜ்மெண்ட் முடிவு. அதனால் தான் பிரதீப் வெளியேறினார். மக்களை தூண்டிவிடுவதற்காகவே பொய்யான ஒரு காரணம் சொல்லி பிரதீப்பை வெளியேற்றியதாக விசித்ரா பேசுகிறார். விசித்ரா பிளான் பண்ணி தான் கேம் விளையாடுகிறார். பிரதீப் வெளியேற்றப்பட்டபோது விசித்ரா கமலிடம் கேட்டு இருக்கலாம். அப்போது ஏன் கேட்கவில்லை?இருந்த வாரம் கண்டெண்ட் வேண்டும் என்பதற்காக தான் விசித்ரா அப்போது கேட்காமல் இருந்து இருக்கார்.

-விளம்பரம்-

ஜோவிகா குறித்து சொன்னது:

ஜோவிகா, ஐஷூ மன்னிப்பு கேட்கும்போது அதை அர்ச்சனா ஏற்றுக் கொண்டிருக்க வேண்டும். அதை விட்டுட்டு பிரச்னையை அர்ச்சனா அதிகமாக தான் எடுத்துட்டு போனார். மாயா, பூர்ணிமா கூட்டணியும் ஒரு கட்டத்தில் பிரியும். சோஷியல் மீடியா ஒரு குப்பை. என் பொண்ணுக்கு நல்ல பேர் வேணாம். அர்ச்சனா செய்வது எக்ஸ்ட்ரீம் டிராமா. அதனால் தான் ஜோவிகா பயங்கரமாக கத்துகிறார். விசித்ரா புள்ளைய கிள்ளிவிட்டுட்டு தொட்டிலையும் ஆட்டி விடுகிறார். அர்ச்சனாவை வைச்சு விசித்ரா விளையாடுகிறார். பிரதீப் இருந்தவரை அர்ச்சனா அழுதுட்டு தான் இருந்தார். அப்போது விசித்ரா கழுவறதுல நழுவர மீன் போல இருந்தார்.

விசித்திரா குறித்து சொன்னது:

பிரச்னையை ஆரம்பிக்கவே பிரஷ் தரவே இல்லை என்று விசித்ரா கண்டெண்ட் செய்கிறார். விசித்ரா டெண்டுல்கர் அளவுக்கு சூப்பர் கேம் விளையாடுகிறார். நான் விசித்ரா, மாயா மற்றும் கூல் சுரேஷ் ஃபேன். மாயா வில்லாதி வில்லன் போன்ற கேப்டன். எனக்கு ஜோவிகா மேல ரொம்ப கோவம் வருது. கண்டெண்டுக்காக எதுக்கு அர்ச்சனாகிட்ட தேவையில்லாமல் பேசனும். ஜோவிகா பேச்சுவார்த்தையை ரொம்ப வளர்க்காமல் இருக்க வேண்டும். பிக்பாஸ் வீட்டில் எல்லாருமே அடித்து கொள்வதை பார்த்தால் எனக்கு சிரிப்பு தான் வருது என்று கூறி இருக்கிறார்.

Advertisement