பிக் பாஸ் 2 சீசனில் இதுதான் முதல் முறை…இதைத்தான் நாங்க எதிர்பார்த்தோம்..! ரொம்ப நன்றி பிக்பாஸ்.!

0
931
- Advertisement -

பிக் பாஸ் நிகழ்ச்சியில் மிகவும் வெறுக்கக்கூடிய நபர் என்றாலே அது ஐஸ்வர்யா மட்டும் தான். அதிலும் ஐஸ்வர்யாவும், யாஷிகாவும் மிகவும் நெருக்கமாக இருந்து வந்தது தான் ரசிகர்களுக்கு எரிச்சலை ஏற்படுத்தியது. ஏனெனில் யாஷிகாவால் தான் எப்போதோ வெளியேறி இருக்க வேண்டிய ஐஸ்வர்யா காப்பற்றுபட்டிருந்தார்

-விளம்பரம்-

bigg-boss

- Advertisement -

ஆனால், சமீபத்தில் ஒளிபரப்பான ப்ரோமோ விடியோவை கண்ட ரசிகர்களுக்கு மிகவும் ஆனந்தமாக இருந்தது. அதற்கு முக்கிய காரணமே இதுவரை பின்னி பிணைந்து கொண்டிருந்த ஐஸ்வர்யாவும், யாஷிகாவும் சண்டையிட்டு கொண்டது தான். அந்த ப்ரோமோவில் யாஷிகா, நீ பண்ற ஒரு தப்புக்கு அனைத்தையும் சம்மந்தபடத்த வேண்டாம் என்று கூறுகிறார்.

பின்னர் ஐஸ்வர்யா தப்பு, தப்பு தான் என்று கூற உங்களுக்காகத்தான் நான் போய் கேட்டேன் என்று யாஷிகா கூறுகிறார். அதற்கு ஐஸ்வர்யா, நீங்க வாய்ஸ் கம்மி பண்ணலான, நான் வாய்ஸ் அதிகமாக கொடுப்பேன் என்று கூறுகிறார். இதன் பின்னர் யாஷிகா, நீ கத்தி பேசுனா எல்லாம் ரைட் ஆகிடாது என்றதும், ஆமாம், நான் தப்பு தான், நான் பொய் சொல்பவள் தான் என்று எப்போதும் போல கத்த தொடங்கி விடுகிறார்.

-விளம்பரம்-

இறுதியில் யாஷிகா, அப்போ நீ கேக்காத இங்க இருந்து கிளம்பு என்றதும் ஐஸ்வர்யா, நீ இங்க இருந்து கிளம்பு எனக்கு நீ சொல்லாத என்று யஷகவிடம் கூறுகிறார். இவ்வாறாக அந்த ப்ரோமோ வீடியோ முடிவடைகிறது. இதனால் வரை ஐஸ்வர்யாவிற்கு பக்க பலமாக இருந்த யாஷிகாவையே, ஐஸ்வர்யா இவ்வாறு கத்துவதைபார்ப்பது சற்று ஆச்சர்யமாகவே இருந்தது.

Aishwarya

யாஷிகாவை நம்பி தான் ஐஸ்வர்யா இருக்கிறார் யாஷிகா தான் ஐஸ்வர்யா இரண்டு முறை ஐஸ்வர்யாவை எலிமினேட் ஆகாமல் காப்பாற்றினார் என்பது அனைவருக்குமே தெரியும். அப்படி இருக்க தீடீரென்று இவர்கள் இருவரும் சண்டையிட்டு கொள்வது யாஷிகாவிற்கு எந்த பாதிப்பு இல்லாமல் இருக்கலாம். ஆனால், கண்டிப்பாக ஐஸ்வர்யாவிற்கு தான் அது பாதகமாக அமையும். எது எப்படியோ இன்று இவர்கள் இருவரது சண்டையை காண ரசிகர்கள் மிகவும் ஆர்வமாக உள்ளனர்.

ஆனால், உண்மையில் இவர்கள் இருவருக்கும் இடையேயான நீடிக்குமா என்பதும் சந்தேகம் தான். இவர்கள் சண்டையிட்ட அடித்த சில நேரத்திலே கொஞ்சி கொலாவி மீண்டும் நெருங்கிய நண்பர்களானாலும் ஆகிவிடுவார்கள். ஆனால் எது எப்படியோ மக்கள் எதிர்பார்த்த விடயம் இது தான். விரைவில் இவர்கள் இருவரும் பிரிந்து ஐஸ்வர்யா நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினால் அனைவரும் மகழ்ச்சி தான்.

Advertisement