பிரதீப் பண்ணது தப்பு தான், ஆனா மாயா என்னாலாம் பேசுனாங்க தெரியுமா? புட்டு புட்டு வைத்த யுகேந்திரன்.

0
443
Yug
- Advertisement -

பிக் பாஸ் நிகழ்ச்சியில் பிரதீப் வெளியேறியது குறித்து யுகேந்திரன் அளித்திருக்கும் பேட்டி தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழில் பிக் பாஸ் 7 நிகழ்ச்சி தொடங்கி 36 நாட்களை கடந்து இருக்கிறது. இந்த சீசனில் கூல் சுரேஷ், பூர்ணிமா ரவி, ரவீனா தாஹா, பிரதீப் ஆண்டனி, நிக்சன், சரவணா விக்ரம், மாயா எஸ் கிருஷ்ணா, விஷ்ணு, ஜோவிகா, அக்ஷ்யா உதயகுமார், மணிசந்திரா, வினுஷா தேவி, யுகேந்திரன் வாசுதேவன், விசித்ரா, பவா செல்லதுரை, விஜய் வர்மா என்று பலர் பிக் பாஸ் வீட்டிற்குள் சென்று இருந்தார்கள்

-விளம்பரம்-

மேலும், முதல் நாளில் இருந்தே பிக் பாஸ் வீடு அனல் பறந்து கொண்டு இருக்கிறது. அதேபோல் நிகழ்ச்சியில் இதுவரை அனன்யா, பவா, விஜய் வர்மா, வினுஷா மற்றும் யுகேந்திரன் ஆகியோர் வெளியேறி இருந்தார்கள்.
அதேபோல போட்டியாளர்களிடம் எல்லை மீறி நடந்து கொண்டதாக ரெக்கார்ட் வாங்கி வெளியேறிய முதல் போட்டியாளர் மஹத்தான். அவரைத் தொடர்ந்து தற்போது பிரதீப் ரெக்கார்ட் வாங்கி வெளியேறி இருக்கிறார். இந்த சீசன் துவங்கியதில் இருந்து பிரதீப்பிற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் ஆதரவு இருந்து வந்தது.

- Advertisement -

இதனால் அவரை டார்கெட் செய்து பல விஷயங்களை செய்தனர். பிரதீப் பேசிய சில அநாகரிகமான வார்த்தைகளும் சில எல்லை மீறி செயல்களும் அவரது இந்த வெளியேற்றத்திற்கு காரணமாகிவிட்டது. மேலும், பிரதீப்பால் எங்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று பல பெண்கள் குற்றம் சாட்டி இருந்தார்கள். இதனால் கமல் ஒவ்வொருவராக அழைத்து விசாரித்து பிரதீப்பிற்கு எதிராக ஒவ்வொருவராக கார்டு கொடுக்கலாமா என்று கேட்டிருந்தார். இதில் அன்ன பாரதி, விசித்ரா, அர்ச்சனாவை தவிர மற்ற அனைத்து பெண்களும் பிரதிப்பை வெளியில் அனுப்பலாம் என்று ஒரு மனதாக தேர்வு செய்தார்கள்.

இதனால் நிகழ்ச்சியிலிருந்து பிரதீப் வெளியேற்றப்பட்டார். மேலும் நிகழ்ச்சியிலிருந்து பிரதீப் வெளியேறியது குறித்துதான் சோசியல் மீடியாவில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. குறிப்பாக, பலரும் பிரதிப்பிற்கு ஆதரவாக ஹாஸ் டேக்குகளையும் உருவாக்கி வைரலாக்கி வருகிறார்கள். அதோடு பெண்கள் பேச்சை கேட்டு கமல் தீர விசாரிக்காமல் தீர்ப்பை கொடுத்து விட்டார் என்றெல்லாம் நெட்டிசன்கள் கூறி இருக்கிறார்கள். இந்த நிலையில் பிக் பாஸ் பிரபலம் யுகேந்திரன் பேட்டி ஒன்று அளித்திருக்கிறார். அதில் அவர் கூறியிருப்பது, பிரதீப்பை குறித்து மற்ற போட்டியாளர்கள் சொன்னது எல்லாமே பொய்.

-விளம்பரம்-

பிரதீப் அப்படிப்பட்டவர் கிடையாது. வார்த்தைகளால் அப்படி பேசுவாரே தவிர உடல் ரீதியாக எந்த ஒரு அச்சுறுத்தலும் அவர் பண்ணியதாக நான் பார்த்ததில்லை. அவர் சிறு வயதிலிருந்து கெட்ட வார்த்தைகளை கேட்டு கேட்டு வளர்ந்திருக்கிறார். அதனால் தான் அந்த வார்த்தைகளை அவர் பேசத் தயங்கவில்லை. ஆனால், உடல் ரீதியாகவோ, பாலுணர்வை தூண்டும் விதமாகவோ பிரதீப் நடந்து கொள்ளவும் இல்லை. நடக்கவும் மாட்டார் என்பதை நான் நம்புகிறேன். நடு இரவில் தூங்காமல் வெறுக்க வெறுக்க பிரதீப் பார்க்கிறார் என்றெல்லாம் புகார் வந்தது. ஆனால், உண்மையிலேயே இரவு நேரத்தில் பிரதீப் தூங்க கொஞ்சம் கஷ்டப்படுவார்.

அங்கு கொசு தொல்லைகள் அதிகம். அதனால் வெளியே போய் நடந்து கொண்டிருப்பார். அதையும் மீறி சில நேரம் பிரதீப் அசந்து தூங்கினாலும் அங்கு இருக்கிற காதல் ஜோடிகள் சத்தம் போட்டு பேசிக் கொண்டிருப்பார்கள். அதேபோல் பிரதீப்பிற்கு மீண்டும் பிக்பாஸ் வீட்டிற்குள் போக வாய்ப்பு கிடைத்தால் தயவு செய்து வேண்டாம் என்று தான் சொல்வேன். இது ஒரு மாஸ் எக்ஸிட். வெளியே வந்த பிறகு கோடிக்கணக்கான ரசிகர்களை அவர் தன் பக்கம் வசம்படுத்திருக்கிறார். அதையும் மீறி போனால் முதல் இடத்தை தான் பிடிக்க வேண்டும் அதுமட்டுமில்லாமல் பிக் பாஸ் வீட்டிற்குள் அதிகமான கெட்ட வார்த்தைகளை பிரதிப்பை விட பேசியது மாயவும் பூர்ணிமாவும் தான். மாயாவிற்கு அர்ச்சனா தான் டஃப் கொடுப்பார் என்று கூறி இருந்தார்

Advertisement